search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் செந்தில்ராஜ்"

    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடன் உதவி

    தமிழ்நாடு பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படா தவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்க ளுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்ப டுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டம் திட்ட அலுவலரால் தரம் ஆய்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப் பினர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

    விண்ணப்பம்

    ஒரு பயனாளிக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். புதிய கடன் திட்டங்களாக இளம் தொழிற்கல்வி பட்டதாரி களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவி னைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

    விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்று விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி மற்றும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பின், திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன், தூத்துக்குடி இணை பதிவா ளர் (கூட்டுறவு சங்கங்கள்) மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும் வெண்மைப்புரட்சி ஏற்படு த்தும் வகையில் கறவைமாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இந்த கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொரு ளாதாரத்தை மேம்படுத்து மாறும் கேட்டுக் கொள்கி றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பொருநை அருங்காட்சியகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
    • ஆதிச்சநல்லூரில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மாநில அரசு சார்பில் அகழாய்வு செய்து கிடைத்த பொருள்களை நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியகம் மூலமாக காட்சிபடுத்த உள்ளனர்.

    ரூ. 33.2 கோடி செலவில்

    இதற்காக ரூ. 33.2 கோடி செலவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா கடந்த 18- ந்தேதி நடந்தது. இது போலவே மத்திய அரசு தொல்லியல் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி ஈடுபட்டு வருகிறது.இதற்காக இடம் தேர்வு உள்பட பல்வேறு பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் பொதுமக்களிடம் இலவசமாக இடத்தினை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைத்து உலகம் முழுவதும் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை மீட்டு வந்து இங்கு வைக்க திட்டமிட்டுள்ளனர்.

    சைட் மியூசியம்

    மேலும் ஆதிச்சநல்லூர் ஏ, பி, சி சைட் என 3 இடங்களில் அகழாய்வு செய்து அந்த இடங்களில் உள்ளது உள்ளபடியே 'சைட் மியூசியம்' அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. அருங்காட்சியக பணிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்ட உள்ளார்கள்.

    இதற்காக மத்திய அமைச்சர் வருகை தரும் இடம், மேலும் மேடை அமையும் இடம், அடிக்கல் நாட்டும் இடம் உள்பட இடங்களை கலெக்டர் பார்வையிட்டார். அவருக்கு மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் விளக்கம் அளித்தார்.

    கலெக்டர் ஆலோசனை

    மேலும் அருங்காட்சியக பணிகள் குறித்தும், தொல்லியல் துறையினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட குழிகள் மேல் கண்ணாடி மூலம் அமைய உள்ள சைட் மியூசியத்தை நேரில் பார்வை யிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லின் மூலமாக வெளியிடப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட வரலாறு நூலை அருண்ராஜ், கலெக்டரிடம் அறிமுகப்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் நூலின் ஆசிரியரும், தொல்லியல் துறை அலுவலருமான யதீஸ்குமார், தொல்லியல் ஆய்வாளர் அறவாழி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சிவகுமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் கடலில் கலக்கிறது.
    • திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடை கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மலைப்பட்டி என்னும் கிராமத்தில் சிறு, சிறு காட்டோடைகள் இணைந்து ஆறாக உருவெடுத்து ஓட்டப்பிடாரம், தட்டப்பாறை வழியாக தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் சென்று கோரம்பள்ளம் குளத்தை வந்தடைகிறது.

    பின்னர் கோரம்பள்ளம் குளம் மறுகால் 24 கண் மதகு வழியாக உப்பாத்து ஓடை என்னும் பெயரில் சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் சென்று தூத்துக்குடி துறைமுகம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு உப்பாற்று ஓடை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் காரணமாக கோரம்பள்ளம் குளம் அதிகப்பட்ச நீர்மட்டத்தை எட்டியது.

    இதனால் உபரிநீர் போக்கியில் உள்ள 24 மதகுகள் மூலம் 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. திடீர் நீர்வரத்து காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து உப்பாற்று ஓடையை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ரூ.5 கோடிஇந்த நிலையில் உப்பாற்று ஓடையை ரூ.5 கோடி செலவில் சீரமைத்து மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சி வீரநாயக்கன் தட்டு பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் சிறுபாலங்கள் அமைத்தல், உள்வாங்கிகள் கட்டுதல், புனரமைத்தல், பிற வெள்ள பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, கடந்த காலங்களில் உப்பாற்று ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதி, மறவன்மடம், அந்தோணியார்புரம், சுப்பிரமணியபுரம், பெரியநாயகிபுரம், திரு.வி.க.நகர், எஸ்.எஸ்.நகர், காலாங்கரை, அத்திமரப்பட்டி, வீரநாயக்கன்தட்டு, முத்துநகர், முத்தையாபுரம், கோவில்பிள்ளைநகர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    எனவே இந்த பகுதிகளில் வருங்காலத்தில் காட்டாற்று வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு திட்டமாக கோரம்பள்ளம் ஆற்றில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்ட செயற்பொறியாளர் அ.வசந்தி, உதவி செயற்பொறியாளர்கள் சுபாஷ், ரத்தினகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
    • தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தி னரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 95 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.
    • உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அடையாள அட்டை

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட 41,773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 95 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.

    2022-2023-ம் நிதி யாண்டில் 110 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 27 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 885 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி வழங்கப்பட்டு ள்ளது.

    உதவித்தொகை

    முதல்-அமைச்சர், 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதம் கடும் உடல் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவ ட்டத்தில் 6,554 மாற்றுத்திறனா ளிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.15 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள்

    2022-2023-ம் கல்வியாண்டில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1,000 வீதமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரமும் மற்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம் வீதமும், இளங்கலை பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரம் வீதமும் மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.7 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் வழங்கப்ப ட்டுள்ளது.

    நிதியுதவி

    2022-2023-ம் நிதியாண்டில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 176 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் விபத்து மரணம் நிதியுதவி ரூ.1 லட்சம் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவி ரூ.17 ஆயிரம் வீதம் 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நவீன செயற்கை கால், கை செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் நிதியாண்டில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால், கை செய்து வழங்கப்ப ட்டுள்ளது.

    பஸ் பயண அட்டை

    பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் மாவட்டம் முழுவதும் கட்டண மில்லாமல் பயணிக்க இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், தேசிய அடையாள அட்டை நகலுடன் கட்டண சலு கையில் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்ல போக்குவரத்துத் துறையில் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணவரால் கைவிடப்பட்ட நிலையில் சத்யபாமா இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
    • கிராம சபை கூட்டத்தில் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி சத்யபாமா, கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஒன்றியம், நயினார்பத்து ஊராட்சி அம்மன்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யபாமா. இவர் தனது கணவரால் கைவிடப்பட்ட நிலையில் இரு குழந்தை களுடன் தனியாக வசித்து வருகிறார்.

    சத்யபாமா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகன் 5-ம் வகுப்பும், மகள் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நயினார்பத்து கிராம ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தலைமையில் கடந்த

    22-ந்தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சத்யபாமா, தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

    அதில் குழந்தைகள் படிப்பதற்கு மின்சாரம் இல்லை என்று கோரிக்கை வைத்தார்.

    மாவட்ட கலெக்டர் வைப்புத்தொகை செலுத்தி சத்யபாமாவின் வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

    மேலும், அவர் குடி யிருக்கும் இடத்திற்கு பட்டா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் இலவச வீடு கட்டுவதற்கான நடவடிக்கை யினையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து சத்யபாமா வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சத்யபாமா கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கவில்லை. எனவே கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தேன். ஒரு சில நாளில் எனது வீட்டிற்கு மின் இணைப்பு மற்றும் பட்டா ஆகியவை வழங்கப்பட்டது.

    மனு அளித்த ஒரு சிலநாளில் நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மின்சார வெளிச்சத்தில் எனது பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள் என்று கூறினார்.

    • கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.
    • கோமாரி நோய் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு மயிலோடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வடக்கு மயிலோடை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் 70 -க்கும் மேற்பட்ட பசுமாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.முகாமில் கோமாரி நோய் பற்றியும் அந்த நோயின் அறிகுறிகள், நோயின் பராமரிப்பு, தடுக்கும் முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

    இதில் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவராஜ், துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் மருத்துவர் சங்கரநாராயணன், கோவில்பட்டி கோட்ட உதவி இயக்குனர் விஜயஸ்ரீ, மருத்துவர்கள் மனோஜ், குமார் பெரியசாமி, தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ வள்ளி செந்தில் வேல், துணைத் தலைவர் முருகன், மருத்துவ குழுவினர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளையும் கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் முதல்-அமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துள்ளனர். இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விடுதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பள்ளி மாணவிகளுக்காக 23 விடுதிகளும், பள்ளி மாணவர்களுக்காக 27 விடுதிகளும், கல்லூரி மாணவிகளுக்காக 1 விடுதியும், கல்லூரி மாணவர்களுக்காக 2 விடுதிகளும், ஐ.டி.ஐ மாணவர்களுக்காக 1 விடுதியும் என மொத்தம் 54 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்விடுதிகளில் சுமார் 1,404 மாணவிகளும், 1,453 மாணவர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அனைத்து விடுதி மாணவர்களுக்கும் மிகவும் தரமான உணவு வகைகள் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கென உறைவிடமும் சுகாதாரமான முறையில் பாராமரிக்கப்படுகிறது. தொடர் தணிக்கை செய்து விடுதிகள் அனைத்தும் சிறப்பாக செயல்பட வகை செய்வதோடு, முதல்-அமைச்சரே விடுதிகளை தணிக்கை செய்கிறார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களில் எவரேனும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டால் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் குடும்பத்தாருக்கு அவர்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமலிருக்க அரசால் உடனடியாக தீருதவி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு காகித வடிவில் வழங்கப்பட்டு வந்த வீட்டுமனைப்பட்டாக்கள் அனைத்தும் கணினி பட்டாவாக மாற்றம் செய்து கணினி பட்டா வழங்கப்பட வேண்டும் என்ற அரசின் சீரிய முயற்சியில் தமிழகம் ழுமுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1950 பேருக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    தையல் எந்திரம் இயக்க தெரிந்த சான்று பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன பெண்களுக்கு அரசு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை நமது மாவட்டத்தில் பல நூறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார். இதில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், புனிதா, தீபா, புனிதா சேகர், சந்திரசேகர், தயாவதி, ஜெயராணி, ஜெபமணி, மரிய நிர்மலா தேவி, சிவகுமார், சகாயரமணி, ஆறுமுகநயினார் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் வார்டுகளின் தேவைகள் பற்றி கலெக்டர் கேட்டறிந்தார்.

    ஆறுமுகநேரி காமராஜர் பூங்காவை நவீன வசதிகளுடன் சீரமைக்க வேண்டும். ஆறுமுகநேரிக்கு குரங்கணியில் இருந்து தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள குப்பை மேடு அகற்றப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை வசம் உள்ள அந்த இடத்தை தினசரி சந்தை அமைப்பதற்காக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தர வேண்டும்.

    மேலும் பேரூராட்சியின் குப்பை களை கொட்டுவத ற்காக 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஒதுக்கி தர வேண்டும். காயல்பட்டினம் வருவாய் கிராம அலுவலகத்தின் கீழ் உள்ள ஆறுமுகநேரியின் 10 வார்டு பகுதிகளை ஆறுமுகநேரி வருவாய் கிராம நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் கலெக்டரிடம் வழங்கினார்.

    அவரிடம் மனுவில் கூறியுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.

    இதனைத் தொடர்ந்து காமராஜர் பூங்காவை கலெக்டர் பார்வையிட்டார். ஆறுமுகநேரி ெரயில் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப் பட்டுள்ள வளாகம், வேளாண்மை விரிவாக்க மையம், அங்கன்வாடி ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் மாலா, நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகி யோரும் உடன் இருந்தனர்.

    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் கட்டுமான பணி கள் நடைபெற்று வருகிறது.

    கலெக்டர் ஆய்வு

    அந்த பணி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

    திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பிலான பெரும் திட்ட வளாக பணியை கடந்த அக்டோபர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    போக்குவரத்து நெரிசல்

    சூரசம்ஹாரம் நிகழ்ச் சிக்கு பிறகு தொடர்ந்து வேலை நடைபெற்று வருகி றது. அதையும் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் பொதுப் பணித்துறை மூலம் நடை பெறும் பாதாள சாக்கடை திட்டப் பணியையும் ஆய்வு செய்தோம்.

    திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர் திரு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

    சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள். எனவே சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடாமல் வீட்டிலேயே வைத்து வளர்க்க வேண்டும். மீறி கால்நடைகள் சாலைக்கு வரும்போது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கோவில் வளா கத்தில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து அப்புறப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புஹாரி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் திருச்செந்தூர் தெப்பக்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆவுடையார் குளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×