search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை- கலெக்டர் செந்தில்ராஜ் பேட்டி
    X

    திருச்செந்தூர் கோவில் பகுதியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை- கலெக்டர் செந்தில்ராஜ் பேட்டி

    • பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகம் கட்டுமான பணி கள் நடைபெற்று வருகிறது.

    கலெக்டர் ஆய்வு

    அந்த பணி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

    திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் ரூ.300 கோடி மதிப்பிலான பெரும் திட்ட வளாக பணியை கடந்த அக்டோபர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    போக்குவரத்து நெரிசல்

    சூரசம்ஹாரம் நிகழ்ச் சிக்கு பிறகு தொடர்ந்து வேலை நடைபெற்று வருகி றது. அதையும் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் பொதுப் பணித்துறை மூலம் நடை பெறும் பாதாள சாக்கடை திட்டப் பணியையும் ஆய்வு செய்தோம்.

    திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தேர் திரு விழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.

    சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படு கிறார்கள். எனவே சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடாமல் வீட்டிலேயே வைத்து வளர்க்க வேண்டும். மீறி கால்நடைகள் சாலைக்கு வரும்போது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கோவில் வளா கத்தில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து அப்புறப்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புஹாரி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் திருச்செந்தூர் தெப்பக்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள ஆவுடையார் குளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×