search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடன் உதவி

    தமிழ்நாடு பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படா தவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்க ளுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்ப டுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டம் திட்ட அலுவலரால் தரம் ஆய்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப் பினர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

    விண்ணப்பம்

    ஒரு பயனாளிக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். புதிய கடன் திட்டங்களாக இளம் தொழிற்கல்வி பட்டதாரி களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவி னைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

    விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்று விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி மற்றும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பின், திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன், தூத்துக்குடி இணை பதிவா ளர் (கூட்டுறவு சங்கங்கள்) மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும் வெண்மைப்புரட்சி ஏற்படு த்தும் வகையில் கறவைமாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இந்த கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொரு ளாதாரத்தை மேம்படுத்து மாறும் கேட்டுக் கொள்கி றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×