search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரும்பு"

    • தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியது.
    • தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அழகிரி காலனி அரியப்பம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் மற்றும் மயில்சாமி ஆகியோருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியதால் அருகில் கரும்பு காடும் மற்றும் வாழை பயிர்கள் சிறிது சேதமடைந்தன .

    உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.

    இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வில நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் கரும்பு, வாழைத்தோட்டம் தப்பியது.

    • ஒரு டன் கரும்புக்கு ரூ.2,919 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • குறைந்தது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப் பருவத்தில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,919 கொள்முதல் விலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ.1570 மட்டுமே செலவு ஆவதாகவும், அதை விட 100.60 சதவீதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது, பற்றாக்குறையான கொள்முதல் விலையை ஏற்றுக்கொள்ள முடியாத உழவர்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வேதனைத் தீயில் எண்ணெயை ஊற்றுவது போன்று அமைந்திருக்கிறது.

    கரும்பு சாகுபடியை லாபமானதாக மாற்ற வேண்டுமானால், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைபடி ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3,500 என்பதை அடிப்படையாகக் கொண்டு, அத்துடன் 50சதவீதம் லாபம், அதாவது ரூ.1750 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.5,250 நிர்ணயிக்க வேண்டும். குறைந்தது கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.5000 கொள்முதல் விலையாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 3 லட்சத்து 43 ஆயிரம் டன் கரும்பு அருவை செய்யப்பட்டது
    • வெளி ஆலைக்கு 17 ஆயிரத்து 423 டன் அனுப்பப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் கிராமத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணி கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கரும்பு அரவை பணி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. 144 நாட்களில் சுமார் 3 லட்சத்து 43 ஆயிரத்து 772 டன் கரும்பு அரைக்கப்பட்டிருக்கிறது. ஆலையில் சுமார் 3 லட்சத்து 29 ஆயிரத்து 104 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெளி ஆலைக்கு 17 ஆயிரத்து 423 டன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை இல்லாத வகையில் உடனுக்குடன் பணம் வழங்க ஆணையிட்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சருக்கும் அனைத்து கரும்பு விவசாயிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

    • அரசு நிர்ணயித்துள்ளஆதார விலை ஒரு டன்னுக்கு ரூ. 2,823.25, மாநில அரசு ஊக்கத்தொகை ரூ.195 என ரூ. 3,018.25 வழங்கப்படுகிறது.
    • சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.நடப்பாண்டு அரவைக்கு 664 விவசாயிகளிடம் கட்டை கரும்பு 1,727 ஏக்கர், கன்னி கரும்பு 457 ஏக்கர் என 2,184 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதி விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரம் டன் கரும்பு என நடப்பாண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ளஆதார விலை ஒரு டன்னுக்கு ரூ. 2,823.25 , மாநில அரசு ஊக்கத்தொகை ரூ.195 என ரூ. 3,018.25 வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டு கரும்பு அரவை துவக்குவதற்காக ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் விழா, கடந்த 10ந்தேதி நடந்தது. கடந்த 21-ந்தேதி முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆலை பராமரிப்பு பணிகள் இழுபறி காரணமாக அரவை துவக்கம், சர்க்கரை உற்பத்தி பணி இழுபறியானது.

    கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் எடை இழப்பு ஏற்படும். சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் ஆலை பராமரிப்பு பணிகள் குறித்து, சென்னை சர்க்கரை துறை கமிஷனர் அலுவலக தொழில்நுட்ப அலுவலர்கள் ரவிச்சந்திரன், பிரபாகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.இதில் கரும்பு சாற்றிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் பிரிவில் கசிவு உள்ளிட்ட பிரச்சினை உள்ளதும், அதனை உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    இது குறித்து மேலாண் இயக்குனர் சண்முகநாதன் கூறுகையில், ஆலையில் உள்ள சர்க்கரை உற்பத்தி பிரிவு எந்திரத்திலுள்ள பழுது சரி செய்ய 3 நாட்களாகும்.அப்பணிகளும் விரைந்து முடித்து வருகிற 4-ந் தேதி முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என்றார். 

    • பெரியகுளம் உட்பட முக்கிய நீராதாரங்கள் அருகில் உள்ள பகுதிகளிலேயே கரும்பு சாகுபடி கைவிடப்பட்டு, தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • காய்கறி சாகுபடி பரப்பு ஏழு குள பாசனப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் முன்பு பி.ஏ.பி., மற்றும் ஏழு குள பாசன திட்ட பகுதிகளில் கரும்பு பிரதானமாக பயிரிடப்பட்டு வந்தது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை மற்றும் வெல்லம் உற்பத்திக்காக தாலுகா முழுவதும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.பி.ஏ.பி., பாசன திட்டம் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டது.

    இதையடுத்து ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட போடிபட்டி, வடபூதனம், சுண்டக்காம்பாளையம், பள்ளபாளையம், சந்தனக்கருப்பனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கரும்பு பிரதான சாகுபடியாக மாறியது. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்காகவும், விளைநிலங்களிலேயே வெல்லம் தயாரிக்கவும் கரும்பு சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலை மாறி விட்டது. பெரியகுளம் உட்பட முக்கிய நீராதாரங்கள் அருகில் உள்ள பகுதிகளிலேயே கரும்பு சாகுபடி கைவிடப்பட்டு, தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கரும்பு சாகுபடியில் கரணை நடவு செய்து ஓராண்டுக்குப்பிறகே அறுவடைக்கு தயாராகிறது. ஆண்டு முழுவதும் பராமரித்து அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்படுவது விவசாயிகளை பாதிக்கிறது.

    அறுவடை சீசனில் ஒரு டன் கரும்பின் விலை 3 ஆயிரம் ரூபாயை கூட எட்டாதது, சாகுபடி செலவு அதிகரித்த நிலையில் நஷ்டத்தையே அளித்தது. வெல்ல தயாரிப்பிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.பிழிதிறன் மற்றும் சர்க்கரை கட்டுமானம் குறைந்த கரும்பால் வெல்லம் தயாரிப்புக்கு செலவு அதிகரித்தது.சில இடங்களில் வெல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட கலப்படம் ஒட்டுமொத்தமாக சந்தையில், விலையை சரியச்செய்தது. இதனால் வெல்ல உற்பத்தி ஆலைகளும் இப்பகுதியில் குறைந்து விட்டது.எனவே கரும்பு சாகுபடி குறைந்து தென்னை மற்றும் காய்கறி சாகுபடி பரப்பு ஏழு குள பாசனப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏழு குள பாசன பகுதிகளில் பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்ட கரும்பு சாகுபடி தற்போது குறைந்து விட்டது.அரசு, கரும்புக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்பு சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பங்கள் எளிதாக கிடைக்கும் வகையில் சிறப்பு மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

    • நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குவதாக கூறினர்.
    • சாக்குகளில் நெல் அள்ள ஒரு சாக்கிற்கு ரூ.5, தூற்றி போட்டால் ரூ.50, தூற்றாமல் போட்டால் ரூ.60 என வசூல் செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு ) பழனிவேல் தலைமை தாங்கினார்.

    இதில் தஞ்சாவூர், பூதலூர் ,ஒரத்தநாடு, திருவையாறு பகுதிகளை சிறந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள் முகமூடி அணிந்து அதாவது கொள்ளையர்கள் போல் முகமூடி அணிந்து வந்து நூதன முறையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் வாக்குறுதியாக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்குவதாக கூறிய நிலையில் மூன்றாம் ஆண்டு வேளாண்மை பட்ஜெட்டில் அது குறித்து எந்த அறிவிப்பும் செய்யாதது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியது.

    தஞ்சை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ரூ.50 வீதம் ஒரு 40 கி சிப்பத்திற்கு கட்டாய லஞ்சம் பெறப்படுகிறது .

    மேலும் சாக்குகளில் நெல் அள்ள ஒரு சாக்கிற்கு ரூ.5, தூற்றி போட்டால் ரூ.50, தூற்றாமல் போட்டால் ரூ.60 என வசூல் செய்யப்படுகிறது.

    இது குறித்து நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.

    எனவே லஞ்ச ஒழிப்பு துறையோடு இணைந்து கள்ள சாராய ஒழிப்பு, அனுமதி இல்லாமல் மதுபாட்டில் விற்றல் போன்ற நடவடிக்கைகளில் பறக்கும் படை அமைத்து செயலாற்றுவது போல கொள்முதல் நிலைய லஞ்சத்தையும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டும்.

    இதற்காகத்தான் கொள்ளையர்கள் அணியும் முகமூடி அணிந்து மனு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலா ளர் குருசாமி தலைமை வகித்தார்.

    விவசாய தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலியை கேரளா அரசை போல் 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லக்காபாளையம், தட்டான்குட்டை, கொக்கா ராயண்பேட்டை பகுதியில் நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவச வீடுமனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாநில நிர்வாகிகள் செல்வராஜ், துரைசாமி, சங்க கிளை நிர்வாகிகள் சம்பூர்ணம், சின்னத்தாயி, குமார், சக்திவேல், முருகே சன், ஆறுமுகம், குமார் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தங்கள் கோரிக்கை கள் அடங்கிய மனுவினை விவ சாயிகள் தாசில்தார் சண்முகவேலிடம் வழங்கி விட்டு சென்றனர்.

    • 10 ஏக்கர் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
    • இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது

    கரூர்

    கிருஷ்ணராயபுரம் அருகே பாப்பாயம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து உள்ளனர். இந்தநிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு தோட்டத்தில் மின் கம்பி உரசியதில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், கரும்புத்தோட்டம் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் பீதியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் 10 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.
    • கரும்புகள் விற்பனை இந்த ஆண்டு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் முழுவதும் அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.சரியான விற்பனை இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கட்டு கட்டாக கரும்புகள் விற்பனையாகாமல் அப்படியே விட்டு சென்றுள்ளார்கள். 2ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திருச்சி, எடப்பாடி, சேலம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பல்லடம் ரோடு,அவினாசி ரோடு ,காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட மாநகரின் முக்கிய ரோடுகள் மற்றும் மார்க்கெட் வீதியில் கரும்புகள் கட்டு கட்டாக குவிக்கப்பட்டன.

    பொங்கலுக்கு முந்தைய நாளும் பொங்கல் அன்றும் ஓரளவுக்கு கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த காலங்களில் போன்று இந்த ஆண்டு கரும்புகள் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 50 சதவீதம் அளவு கரும்புகள் விற்பனை இந்த ஆண்டு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    முதலில் ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 6 முதல் 8 கரும்புகள் வரை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பலர் கரும்புக்கட்டுகளை சாலைகளில் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் கரும்புகளின் இலை மட்டுமின்றி வியாபாரிகளின் மனமும் வாடிப்போய் உள்ளது.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பாரதிய ஜனதாவினர் போராட்டம்
    • நாகர். அண்ணா பஸ் நிலையத்தில் பரபரப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து பல்வேறு அரசு பஸ்களில் கரும்பு வாழைக்குலைகள் கட்டப் பட்டு இருந்தது. இந்த நிலையில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து சென்ற அரசு பஸ் ஒன்றில் கட்டப்பட்டிருந்த கரும்பு, வாழைக்குலைகளை போக்குவரத்து கழக அதிகாரிகள் அகற்றியதாக தெரிகிறது.

    இந்த தகவல் அறிந்ததும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்தனர். ெதாடர்ந்து எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் போக்குவரத்து கழக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அதிகாரி கள், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. விடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பஸ்சில் இருந்து அகற்றப்பட்ட வாழைக்குலைகள், கரும்பு கள் மீண்டும் கட்டப்படும் என்று உறுதி அளித்தனர்.தொடர்ந்து பஸ்களில் வாழைக்குலைகள், கரும்பு கள் கட்டப்பட்டது. இத னால் பாரதிய ஜனதா வினர் போராட் டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் கவுன்சிலர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
    • ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

    ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள கரும்பு வியாபாரமும் இன்று அமோகமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.100 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பனங்கிழங்கு விற்பனையும் நடந்தது.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, சித்தோடு, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, பர்கூர், தாளவாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது.

    ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பெரியார் நகர் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு உசிலம்பட்டி, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓமலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வருகிறது. ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு 5 டன்கள் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது பொங்கலை முன்னிட்டு 10 டன் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.

    தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது. எனினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.

    கடந்த வாரம் ரூ.800-க்கு விற்ற முல்லை பூ இந்த வாரம் தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.3 ஆயிரமாக விற்கப்படுகிறது. இதேபோல் ஜாதி பூ ஒரு கிலோ ரூ.1600, சம்மங்கி பூ ஒரு கிலோ ரூ.100, அரளிப்பூ ரூ.400, செவ்வரளி ரூ.400, செவ்வந்தி ரூ.120 விற்கப்பட்டது.

    இன்று சத்தியமங்கலம்பூ மார்க்ெகட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள்தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து. தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிேலா மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.

    • கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.

    பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...?

    1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

    2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும் பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.

    3. மன அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    4. புற்று நோய் வராமல் தடுக்கும்: கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.

    5. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

    6. கல்லீரலின் ஆரோக்கியம் : கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.

    7. வயதாவதை தடுக்கும் : கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.

    8. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் : கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    9. உடல் எடையினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

    10. ரத்த அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.

    கரும்பு ஏன் இனிக்கிறது?

    கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை இந்த கரும்புச்சர்க்கரைதான்!

    கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்

    கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.

    ×