search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sugar cane"

    • அரசு நிர்ணயித்துள்ளஆதார விலை ஒரு டன்னுக்கு ரூ. 2,823.25, மாநில அரசு ஊக்கத்தொகை ரூ.195 என ரூ. 3,018.25 வழங்கப்படுகிறது.
    • சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.நடப்பாண்டு அரவைக்கு 664 விவசாயிகளிடம் கட்டை கரும்பு 1,727 ஏக்கர், கன்னி கரும்பு 457 ஏக்கர் என 2,184 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதி விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரம் டன் கரும்பு என நடப்பாண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ளஆதார விலை ஒரு டன்னுக்கு ரூ. 2,823.25 , மாநில அரசு ஊக்கத்தொகை ரூ.195 என ரூ. 3,018.25 வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டு கரும்பு அரவை துவக்குவதற்காக ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் விழா, கடந்த 10ந்தேதி நடந்தது. கடந்த 21-ந்தேதி முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆலை பராமரிப்பு பணிகள் இழுபறி காரணமாக அரவை துவக்கம், சர்க்கரை உற்பத்தி பணி இழுபறியானது.

    கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் எடை இழப்பு ஏற்படும். சர்க்கரை உற்பத்தியும் பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் ஆலை பராமரிப்பு பணிகள் குறித்து, சென்னை சர்க்கரை துறை கமிஷனர் அலுவலக தொழில்நுட்ப அலுவலர்கள் ரவிச்சந்திரன், பிரபாகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.இதில் கரும்பு சாற்றிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் பிரிவில் கசிவு உள்ளிட்ட பிரச்சினை உள்ளதும், அதனை உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

    இது குறித்து மேலாண் இயக்குனர் சண்முகநாதன் கூறுகையில், ஆலையில் உள்ள சர்க்கரை உற்பத்தி பிரிவு எந்திரத்திலுள்ள பழுது சரி செய்ய 3 நாட்களாகும்.அப்பணிகளும் விரைந்து முடித்து வருகிற 4-ந் தேதி முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என்றார். 

    அரியலூர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.
    அரியலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 74 ஆயிரத்து 684 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா துறைமங்கலத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், மருதராஜா எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கலெக்டர் சாந்தா தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.1,000 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். அப்போது விலையில்லா வேட்டி- சேலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட வழங்கல் அதிகாரி அல்லிராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளர் பிரேமா, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ராஜாராம், பொது வினியோக திட்டத்தின் துணைப்பதிவாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 556 ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா அரியலூர் அண்ணா நகரில் உள்ள பொதுவினியோக திட்ட அங்காடியில் நடந்தது. இந்த விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலா ரூ.ஆயிரத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தாசில்தார் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளன் வரவேற்றார். முடிவில் பொதுவினியோக திட்டத்தின் துணைப்பதிவாளர் செல்வராஜ் நன்றி கூறினார். பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    ஈரோடு:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது கரும்பு தான். கரும்பு, மஞ்சள், அரிசி போன்ற பொருட்கள் வைத்து பொங்கல் படி கொடுப்பது தமிழர்களின் பாரம்பரிய பழக்கம். அந்த பழக்கம் இன்றளவும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்பாகவே, திருமணமான பெண்களுக்கு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பொங்கல் படி வழங்குவார்கள். அதுவும் தலைப்பொங்கல் என்றால் ஏராளமான சீர்வரிசைகள் கொடுக்கப்படும். பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் தற்போது பலர் பொங்கல் படி கொடுத்து வருகிறார்கள்.

    ஈரோட்டை அடுத்த பி.பி.அக்ரஹாரம் அருகே உள்ள சமயசங்கிலியில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்ய ரூ.1 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரை கரும்புகள் விளையும். 400 கரும்புகள் தற்போது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை அன்று இந்த விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது. சமயசங்கிலி பகுதியில் வெட்டப்படும் கரும்புகள் தற்போது குஜராத் மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கரும்புகள் அங்கு சென்றுசேர 5 முதல் 6 நாட்கள் வரை ஆகும். அடுத்த வாரத்தில் இருந்து ஈரோடு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு கரும்புகள் வெட்டி அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ×