search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கம்"

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் தடய அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.
    • முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடய அறிவியல் துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற "பாரன்சிக் பீயூசன்-2023" என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரது ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக அரசு மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் ஹசன் சாதலி கலந்து கொண்டு பேசுகையில், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் குற்றங்களும் தொழில்நுட்ப ரீதியாக பெருகிவிட்டபடியால், தடய அறிவியல் துறையினரின் தேவை அதிகமாக உள்ளது.

    சைபர் கிரைம் போன்ற குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதற்கு தடைய அறிவியல் துறை சார்ந்த நிபுணர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். ஆகவே மாணவர்கள் தடய அறிவியலின் அனைத்து துறையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.

    மதுரை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசி ரியர் டாக்டர் சதாசிவம், தியாகராஜர் கல்லூரி வேதியியல் பேராசிரியர் டாக்டர் சாய் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த வர்களுக்கும், போஸ்டர்கள் மூலம் சிறந்த விளக்கத்தினை அளித்த மாணவ-மாணவிக ளுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.

    நிகழ்ச்சியை 3-ம் ஆண்டு மாணவி வர்ஷா மற்றும் அஸ்மா பாத்திமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நிவேதிதா மனோகரன், ஜிஞ்சு மரியம் இமானுவேல், வினிஸ்மா, பிரிசில்லா ஜோஸ்லின் டேனியல், ஜெயஸ்ரீ, கங்கா பிரசாத், அலி பாத்திமா, ஐஸ்வர்யா ஆகியோர் தலைமையில் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 85 பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் பிரிசில்லா நன்றி கூறினார்.

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
    • ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை தாங்கினார். நீலா சிவசங்கரி அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, பாக்கியலெட்சுமி, மரிகார்லியா, பவானி, முத்து, பாக்கியலெட்சுமி , சாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் உள் தர உறுதி குழுவின் சார்பில் ஆசிரியர் திறன் மேம் பாட்டுப் பயிற்சிக் கருத் தரங்கம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை யில் தாங்கி பேசியதாவது:-

    உயர் கல்வி நிறுவனங் களின் தர மதிப்பீட்டை உறுதி செய்யும் குழு, பாடத் திட்ட அம்சங்கள், கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, உள் கட்ட மைப்பு, மாணவர் ஆதரவு, ஆளுமை, நிறுவன மதிப்பு கள் போன்ற 7 அளவு கோல் களின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, இந்தியா முழுவதும் உள்ள பல் கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டு வழங்கும் மதிப் பெண்கள் அடிப்படையில் தர மதிப்பீடு சான்றிதழ் வழங்கி வருகிறது. இது போன்ற பயிற்சிக் கருத் தரங்கம் மூலம் பேராசிரி யர்கள் தங்களை மேம் படுத்தி கொள்ளவும், கல்லூ ரியின் தரத்தை உயர்த்தி கொள்ளவும் முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை என். எம். ஆர். சுப்புராமன் பெண்கள் கல்லூரி ஆங் கில துறை பேராசிரியர் சிவப்பிரியா தேசிய தர மதிப்பீட்டின் ஏழு அம்சங் கள் குறித்து தெளிவான விளக்கத்தினை எடுத் துரைத்தார். பின்னர் பேராசிரியர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கத் தினை அளித்தார்.

    முன்னதாக கல்லூரி யின் ஆங்கிலத் துறை தலைவரும், உள் தர உறுதி குழுவின் ஒருங்கிணைப் பாளருமான பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் வணிக மேலாண்மை துறை இயக்கு னர் பேராசிரியர் நடேச பாண்டியன், கல்விசார் நெறியாளர் டாக்டர் நாசர், துறை தலைவர்கள் டாக்டர் முனியாண்டி, பால்ராஜ், டாக்டர் கார்த்திகா, சீனி வாசன், சி.எஸ். கார்த்திகா, சுபஸ்ரீ, தனலட்சுமி, உள் தர உறுதிக் குழுவின் உறுப்பி னர்கள் ஜஸ்டின், சசிகலா உள்ளிட்ட 60-க்கும் மேற் பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர். இதற்கான ஏற் பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    • கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி காவிய பிரியா முதல் பரிசை பெற்றார்.
    • போட்டியில் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எழிலரசி முதல் இடத்தை பிடித்தார்.

    சிவகிரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றா ண்டு விழா கருத்த ரங்கம் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் பேரவைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று வாசுதேவநல்லூர் அருகே வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் ராஜா எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் சிற்புரையாற்றினர்.

    வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி காவிய பிரியா முதல் பரிசையும், தமிழ் மொழியின் எழுச்சிக்கு கலைஞர் செய்த சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசிய மாணவி சூரியகலா இரண்டாவது பரிசையும், மகளிர் நலனில் கலைஞர் என்ற தலைப்பில் பேசிய மாணவி சாகிதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

    இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய மாணவர்களில் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எழிலரசி முதல் இடத்தையும், கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கவிதா இரண்டாவது இடத்தையும், சேர்ந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ராமர் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

    கலைஞரின் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கத்தில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச்செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, சிவகிரி தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் வெங்கடசேகர், வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில்மாநில பேச்சு போட்டி- கருத்தரங்கம்
    • தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.

     திருச்சி, 

    கலைஞர் கருணாநிதி நுற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகர பொறியாளர் அணி சார்பில், மாநில தழுவிய பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியும் நவீன தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.

    மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தென்னரசு வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஜியாவுதீன் , மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் மெய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட - மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் த.நடராஜன், கோ.சிபிசக்கரவர்த்தி, பாலசுப்ரமணியன், ப.நவநீதகிருஷ்ணன், கோவி.செல்வராஜ், ஆ.அசோக், சாக்ரடீஸ், செந்தில்ராம், தினேஷ்கண்ணா, மணிகண்டன், கிஷோர், ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இளங்கலை - முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் ,ஐ.டி.ஐ .மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேசினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொறியாளர் அணி மாநிலச்செயலாளர் கு.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.மதிவாணன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர் . இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அணி செயலாளர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், அ.த.த.செங்குட்டுவன், என்.செந்தில், நூர்கான், சந்திர மோகன், பொன்.செல்லையா, சரோ ஜினி,தமிழ்ச்செல்வம், கே.கே.கே.கார்த்திக், மணிமேகலை, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள நீலமேகம், கே.எஸ்.எம். கருணாநிதி, எஸ். சிவக்குமார், எம்.பழனியாண்டி, எம்.ஆர்.டி.பி.கே.தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர பொறியாளர் அணி தலைவர் இன்பா நன்றி கூறினார். 

    • கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
    • முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் 19-வது தேசிய கருத்தரங்கம் தமிழ்த்துறை சார்பில் கல்லூரி பொறுப்பு முதல்வர் டி.எஸ். ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்த்துறை தலைவர் இளங்குமார் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவர் கருணாகரன் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் ஆய்வு சிந்தனைகள் என்னும் ஆய்விதழை வெளியிட பொருளாளர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

    வழக்கறிஞர் ஞானசேகரன் மற்றும் கல்லூரி ஆட்சி மன்ற துணை தலைவர் சந்திரமோகன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஆனந்த், ஆதிமகாலிங்கம் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.
    • கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன

    மணவாளக்குறிச்சி :

    வெள்ளிச்சந்தைஅருகில் உள்ள அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் விஜிமலர் தலைமை தாங்கினார்.

    கேரள பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரசாரா மற்றும் பெங்களூர் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் நூர்நிகார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.

    கல்லூரி துணை தலைவர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்குநர் தருண் சுரத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக சுங்கான்கடை அய்யப்பா கல்லூரி பேராசிரியை காயத்ரி, பெண்கள் கிறித்தவ கல்லூரி பேராசிரியை கிறிஸ்டி கிரேஸ், பெங்களூர் டி சேல்ஸ் கல்லூரி பேராசிரியை அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • யூரியா உரத்தால் மண் வளம் பாதிப்பை தவிர்க்க விளக்கம் அளிக்கப்பட்டது.

    மதுரை

    இந்திய உழவர் கூட்டுறவு நிறுவனம் (இப்கோ) சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மண்டல இணைப்ப திவாளர் சி.குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டு றவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    விவசாய பெருமக்கள் அதிக அளவு யூரியா உரம் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படுவதை தவிர்த்திட இப்கோ, நானோ யூரியா, இப்கோ டி.ஏ.பி. மற்றும் சகாரிக்கா உரங்கள் பயன்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து இப்கோ நிறுவன அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கூட்டுறவு விற் பனை இணையம் (டான் பெட்) துணைப் பதிவாளரும், மண்டல மேலாளருமான ச.பார்த்திபன், டான்பெட் நிறுவன புதிய தயாரிப்பு உரங்களின் சிறப்புகள் பற் றியும், விவசாயிகள் பயன் பெறும் வகையில் டான் பெட் புதிய தயாரிப்பு உரங் கள் பெற்று விநியோகம் செய்திடுமாறும் தெரிவித்தார். இதில் இப்கோ நிறுவ மாநில விற்பனை மேலாளர், டான்பெட் எரியோடு உர ஆலை வல்லுநர், கூட்டுறவுத் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • 28 ஆண்டுகால உள் நாட்டு வெளிநாட்டு அனுபவங்களை 3 பகுதிகளாக பிரித்து வழங்கினார்.
    • உறுப்பினர்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் உரிய பதில்களை விளக்கி தெளிவு படுத்தினார்.

    நாகர்கோவில் :

    பதிவு பெற்ற என்ஜி னீயர்ஸ் அசோசியேசன் சார்பில் நாகர்கோவில் செட்டிகுளம் ரோட்டரி டவுன் ஹாலில் வைத்து நவீன காங்கிரீட் தொழில் நுட்பமான பி.டி.ஸ்லாப் டெக்னாலாஜியைப் பற்றிய தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

    பதிவு பெற்ற என்ஜினீயர் சங்க தலைவர் என்ஜினீயர் ரஜீஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொருளாளர் கண்ணன் வரவேற்று பேசினார். என்ஜினீயர் செந்தில்குமார், சிறில் கிறிஸ்துராஜ் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக என்ஜினீயர் மாதன் பங்கேற்று பி.டி.ஸ்லாப் தொழில் நுட்பத்தை பற்றிய தனது 28 ஆண்டுகால உள் நாட்டு வெளிநாட்டு அனுபவங்களை 3 பகுதிகளாக பிரித்து வழங்கினார். மேலும் உறுப்பினர்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் உரிய பதில்களை விளக்கி தெளிவு படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் இயக்குனர் ராபர்ட் கென்னடியின் பிறந்த நாள் விழாவும் இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது. பின்னர் சிறப்பு விருந்தினர், கவுரவ விருந்தி னர்களுக்கு பொன்னாடை யும் நினைவுப் பரிசுகளும் தலைவர் ரஜீஷ்குமார் மற்றும் என்ஜினீயர்கள் சோமன் குமார் ஆகியோர் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் கோவிந்தன் நன்றி கூறினார்.

    • மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • அதி வேகமாக செல்லும் வாகனத்தால் விபத்து ஏற்படுகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தங்கத்திற்கு மாநில அமைப்பாளர் ராஜா தலைமை தாங்கினார்.

    மாநிலத் துணைச் செயலாளர் ராஜாராமன் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ஜெயசங்கர் மாவட்ட ஆட்சி மன்ற குழு அமைப்பாளர் அன்வர் சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செல்வமுத்து குமணன் வரவேற்றார்.

    சிறப்புரையாக பட்டிம ன்றம் நடுவர் சரவணன், முனைவர் தனவேலன், முருகானந்தம், மாவட்ட செயலாளர் கனகசபை, ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வை பற்றி விளக்கி கூறினர்.

    கருத்தரங்கில் இரு சக்கரம், நான்கு சக்கரம் வாகனங்களை செல்லும் சிலர் அதி வேகமாக வாகனங்களை இயக்கி சாலையில் செல்லும் பொது மக்கள் மாணவ மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றனர் அவர்கள் மீது வாகனத்தை பரிமுதல் செய்து சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல மாவட்ட கிராமங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டுப்பட்ட சாலைகள் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது.

    அதனை சீரமைத்து தர வேண்டும்.

    மயிலாடு நகராட்சி நகர பகுதிகளில் பாதாள சாக்கடை பல இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது தொற்றுநோய் பரவி வரும் சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கலிய மூர்த்தி, சுவாமிநாதன், தர்மரா ஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார்.

    • இளம் வயது திருமணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
    • கருத்தரித்தலால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளின் புள்ளிவிவரங்களை தெரிவித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் ஆயம், மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம், தஞ்சாவூர் இணைந்து "இளம் வயது திருணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு" கருத்தரங்கம் நடத்தியது.

    இந்நிகழ்வுக்குக் கல்லூரி முதல்வர்ஜான்பீட்டர் தலைமை தாங்கினார்.மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் முன்னிலை வகித்தார். கருத்தாளர்களாக, மருத்துவர் ராஜராஜேஸ்வரி, மகப்பேறுத்து றைத்தலை வர், மருத்துவர் உதயா அருணா, மகப்பேறு இணைப்பேராசிரியர்,பிலாமினோ சாந்தினி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பிரபா, ஒருங்கிணைந்த சேவை மையம் குழந்தை வளர்ச்சி அலுவலர்,கோடீஸ்வரன் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் போன்றோர் கலந்து கொண்டு இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்தும் சிக்கலையும், அதனால் வரும் கருத்தரித்தலால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவு களையும், பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டி யதையும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தனர்.

    இந்நிகழ்வினை, முனைவர்கண்ணம்மாள் ஒருங்கிணைத்தார். முடிவில் வீரமணி நன்றி கூறினார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
    • பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    திருமங்கலம்

    வருடந்தோறும் செப்டம் பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடித்து வருவதை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறையின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஒரு நாள் ஹெல்த் பெஸ்ட்-2023 என்ற கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் கரு த்தரங்கை தொடங்கி வைத்து உடல்நலம், உணவு பழக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியர் கீதாஞ்சலி மாணவிகளுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி விளக்கி கூறினார். மேலும் பல்வேறு பழங்களில் உள்ள சத்துக்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    முன்னதாக பேராசிரியர் பொன்மயில் வரவேற்றார். இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை லேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த சாம்பி யன் சுழற்கோப்பையையும், கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் 2-ம் பரிசுக்கான சுழற்கோப்பை யையும் வென்றனர்.

    மாலையில் நடந்த இறுதி அமர்வில் நிர்வாகவியல் பேராசிரியர் நாசர் வாழ்த்துரை வழங்கினார். ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ கருத்தரங்க அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ தலைமையில் பிரியா, நேயா, ஸ்ருதி, சமீரா, மர்ஷியா, அர்ச்சனா, சிம்சன், பரத், பிரியதர்ஷன், ஹரி கிருஷ்ணா, கலையரசி, சுமித்ரா ஆகிய மாணவ-மாணவிகள் செய்தனர்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    ×