search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில பேச்சு போட்டி- கருத்தரங்கம்
    X

    மாநில பேச்சு போட்டி- கருத்தரங்கம்

    • திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில்மாநில பேச்சு போட்டி- கருத்தரங்கம்
    • தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.

    திருச்சி,

    கலைஞர் கருணாநிதி நுற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகர பொறியாளர் அணி சார்பில், மாநில தழுவிய பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியும் நவீன தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.

    மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தென்னரசு வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஜியாவுதீன் , மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் மெய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட - மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் த.நடராஜன், கோ.சிபிசக்கரவர்த்தி, பாலசுப்ரமணியன், ப.நவநீதகிருஷ்ணன், கோவி.செல்வராஜ், ஆ.அசோக், சாக்ரடீஸ், செந்தில்ராம், தினேஷ்கண்ணா, மணிகண்டன், கிஷோர், ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இளங்கலை - முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் ,ஐ.டி.ஐ .மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேசினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொறியாளர் அணி மாநிலச்செயலாளர் கு.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.மதிவாணன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர் . இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அணி செயலாளர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், அ.த.த.செங்குட்டுவன், என்.செந்தில், நூர்கான், சந்திர மோகன், பொன்.செல்லையா, சரோ ஜினி,தமிழ்ச்செல்வம், கே.கே.கே.கார்த்திக், மணிமேகலை, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள நீலமேகம், கே.எஸ்.எம். கருணாநிதி, எஸ். சிவக்குமார், எம்.பழனியாண்டி, எம்.ஆர்.டி.பி.கே.தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர பொறியாளர் அணி தலைவர் இன்பா நன்றி கூறினார்.

    Next Story
    ×