search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத்திமா கல்லூரி"

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் உள் தர உறுதி குழுவின் சார்பில் ஆசிரியர் திறன் மேம் பாட்டுப் பயிற்சிக் கருத் தரங்கம் நடந்தது. கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை யில் தாங்கி பேசியதாவது:-

    உயர் கல்வி நிறுவனங் களின் தர மதிப்பீட்டை உறுதி செய்யும் குழு, பாடத் திட்ட அம்சங்கள், கற்பித்தல் முறை, ஆராய்ச்சி, உள் கட்ட மைப்பு, மாணவர் ஆதரவு, ஆளுமை, நிறுவன மதிப்பு கள் போன்ற 7 அளவு கோல் களின் அடிப்படையில் தர மதிப்பீடு செய்து, இந்தியா முழுவதும் உள்ள பல் கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டு வழங்கும் மதிப் பெண்கள் அடிப்படையில் தர மதிப்பீடு சான்றிதழ் வழங்கி வருகிறது. இது போன்ற பயிற்சிக் கருத் தரங்கம் மூலம் பேராசிரி யர்கள் தங்களை மேம் படுத்தி கொள்ளவும், கல்லூ ரியின் தரத்தை உயர்த்தி கொள்ளவும் முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை என். எம். ஆர். சுப்புராமன் பெண்கள் கல்லூரி ஆங் கில துறை பேராசிரியர் சிவப்பிரியா தேசிய தர மதிப்பீட்டின் ஏழு அம்சங் கள் குறித்து தெளிவான விளக்கத்தினை எடுத் துரைத்தார். பின்னர் பேராசிரியர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கத் தினை அளித்தார்.

    முன்னதாக கல்லூரி யின் ஆங்கிலத் துறை தலைவரும், உள் தர உறுதி குழுவின் ஒருங்கிணைப் பாளருமான பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்றார். கருத்தரங்கில் வணிக மேலாண்மை துறை இயக்கு னர் பேராசிரியர் நடேச பாண்டியன், கல்விசார் நெறியாளர் டாக்டர் நாசர், துறை தலைவர்கள் டாக்டர் முனியாண்டி, பால்ராஜ், டாக்டர் கார்த்திகா, சீனி வாசன், சி.எஸ். கார்த்திகா, சுபஸ்ரீ, தனலட்சுமி, உள் தர உறுதிக் குழுவின் உறுப்பி னர்கள் ஜஸ்டின், சசிகலா உள்ளிட்ட 60-க்கும் மேற் பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன டைந்தனர். இதற்கான ஏற் பாடுகளை மனித வள மேலாளர் முகமது பாசில் மற்றும் கணிணி அமைப்பு அலுவலர் உதய கதிரவன் செய்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
    • பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    திருமங்கலம்

    வருடந்தோறும் செப்டம் பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடித்து வருவதை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறையின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஒரு நாள் ஹெல்த் பெஸ்ட்-2023 என்ற கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் கரு த்தரங்கை தொடங்கி வைத்து உடல்நலம், உணவு பழக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியர் கீதாஞ்சலி மாணவிகளுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி விளக்கி கூறினார். மேலும் பல்வேறு பழங்களில் உள்ள சத்துக்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    முன்னதாக பேராசிரியர் பொன்மயில் வரவேற்றார். இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை லேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த சாம்பி யன் சுழற்கோப்பையையும், கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் 2-ம் பரிசுக்கான சுழற்கோப்பை யையும் வென்றனர்.

    மாலையில் நடந்த இறுதி அமர்வில் நிர்வாகவியல் பேராசிரியர் நாசர் வாழ்த்துரை வழங்கினார். ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ கருத்தரங்க அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ தலைமையில் பிரியா, நேயா, ஸ்ருதி, சமீரா, மர்ஷியா, அர்ச்சனா, சிம்சன், பரத், பிரியதர்ஷன், ஹரி கிருஷ்ணா, கலையரசி, சுமித்ரா ஆகிய மாணவ-மாணவிகள் செய்தனர்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் 700 பனை விதைகளை சேகரித்தனர்.
    • தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    பனை மரம் தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்வி லும், வரலாற்றிலும், பொரு ளியலிலும் 2,000 ஆண்டுக ளுக்கும் மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனை தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மீனவர்கள் குடியிருப்பு கள், துறைமுகங்கள், உயிரி யல் பூங்கா, அரிய வகை மீன்கள், நீர்வாழ் உயிரினங் களை காக்கும் வகையிலும், இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், காலநிலை மாற்றத்தினை தணிக்கும் வகையிலும் ஒரு கோடி பனை விதைகளை பதிய மிட்டு பாதுகாக்கும் பணி களை தமிழக அரசு முன்னெ டுத்து செய்து வருகிறது.

    இந்த பணிக்கு உதவி புரியும் வகையில் திருமங்க லம் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நல பணித் திட்டத்தின் சார்பாக திட்ட அலுவலர் முனியாண்டி தலைமையில் மாணவர்கள் சிந்து பைரவி, அனிதா, அக்குமாரி, அருந்ததி, பக வதி கண்ணன், மருது பாண்டி, தங்கராஜ், மணி கண்டன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ராயபாளையம் மற்றும் திறளி ஆகிய கிராமங்களுக்கு சென்று சுமார் 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்தனர்.

    அந்த விதைகளை கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செந்தில் குமார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் பாண்டி ஆகியோரிடம் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலு வலர் முனைவர் முனி யாண்டி, முனைவர் சிங்க ராஜா ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வழங்கினார்.

    பனை விதைகளை பெற்றுக் கொண்ட மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் செந்தில் குமார் மற்றும் மதுரை காம ராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாண்டி ஆகியோர் அன்னை பாத்திமா கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டு களை தெரிவித்தனர்.

    ×