search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palm Seed"

    • பெண்கள் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடியபடி கும்மியடித்தனர்.
    • கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள்.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து பகுதியிலுள்ள நாரம்பூநாதர் பனங்காட்டில் நெல்லை நீர்வளம் மற்றும் முக்கூடல் பொழில் தன்னார்வலர்கள் அறக் கட்டளை இணைந்து சுமார் 30 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு விழா நடை பெற்றது.

    கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனைவிதையை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம், அறநிலைய துறை கவிதா, சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபக்குமார் ஆகியோர் பனை விதைகளை விதைத்தனர்.

    தொடர்ந்து இலந்தை குளம் பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் பனைமரம் குறித்த கிராமப்புற பாடலை பாடிய படி கும்மியடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் கும்மியடித்ததை அவரது செல்போனில் வீடியோ எடுத்த கலெக்டர் கார்த்திகேயன், அந்த பெண்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

    குறிப்பாக கும்மிபாட்டுகள் விவசாய பணிகள், கோவில் திருவிழாக்களில் பாடுவார்கள். தற்போது பனைமரம் குறித்து கும்மி பாட்டு பாடியதை கலெக்டர் மட்டு மல்லாமல் அனை வரும் ஆச்சரியத்துடன் ரசித்து பாராட்டினர்.

    மேலும் பனையேறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு மாவட்ட கலெக்டர் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

    விழாவில் தோட்டக் கலை துறை உதவி இயக்கு னர் சுபாசினி, நெல்லை வனச்சரக அலுவலர் சரவணக்குமார்,சேரன் மகாதேவி தாசில்தார் ரமேஷ், மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாப்பாக்குடி ஒன்றிய துணை சேர்மன் மாரி வண்ணமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் சோழ முடி ராஜன், பணி புஷ்பம், வடக்கு அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி, முக்கூடல் பேரூராட்சி தலைவி ராதா லட்சுமணன், துணை தலைவர் லட்சுமணன், வருவாய் ஆய்வாளர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் சங்கரி, ஊராட்சி செயலர் கவிதா மற்றும் ஏராளமான சமூக ஆர்வ லர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொழில் அமைப்பு தலைவர் எட்வின் ஹென்றி, ஹர்ட் புலனஸ் மெடிட்டே சன் கணேசன் மற்றும் ஜெயந்த் பீட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பனை விதை நடவு விழா நடந்தது.
    • முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விசாலயன்கோட்டை கிராம ஊராட்சி இணைந்து சேது பாஸ்கரா கல்விக் குழுமத்தலைவர் முனைவர் சேதுகுமணன் ஏற்பாட்டில் ஆயிரம் பனை விதைகள் நடவு விழா நடைபெற்றது.

    விசாலயன்கோட்டை வேதமுத்து நகரில் தொடங்கி வேளாண்மைக் கல்லூரி வரை சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சொர்ணம் வரவேற்றார்.

    சேதுபாஸ்கரா கல்லூரி முதல்வர்.க.கருணாநிதி, சேது வள்ளியம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் சேது விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். கல்லல் ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், முன்னாள் தலைவர் அசோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பனை மரத்தின் சிறப்புகள், பனை விதை நடவு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதன்மை செயல் அதிகாரி கோவிந்தராம், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகேசன், பேராசிரியை விஷ்ணுபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் கருப்புராஜ் நன்றி கூறினார்.

    • ஐம்பது ஆயிரம் பனைமர விதைகளை நட்டு ஊராட்சி மன்ற தலைவர் சாதனை படைத்தார்.
    • 100 நாள் பணியாளர்களையும் சுற்றுவட்டார கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல் லல் ஒன்றியம் இளங்குடி கிரா மத்தில் ஊராட்சி மன்ற தலை வராக இருந்து வருப வர் நேசம் ஜோசப். இவர் பொறுப் பேற்ற காலம் முதல் தரிசு நில பகுதிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகிய பகுதிகளில் நெல்லி தோட்டம், முந்திரி தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகை தோட்டம் மற்றும் பிற பழ வகைகளை சேர்ந்த மரக் கன்றுகளை நடவு செய்து அரசுக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகி றார்.

    பருவ மழை காலங்களில் இப்பகுதிகளில் அதிக மழை பொழிவை கொண்டு குறுங் காடுகள் அமைத்தல், அடர்ந்த வனம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கிராமத்தில் அனைவருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், பிளாஸ் டிக் பயன்பாடு இல்லா ஊராட்சியாக மாற்றுதல், பால் உற்பத்தி மற்றும் விற் பனை, நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறந்த ஊராட் சியாக மாற்றியுள்ளார்.

    தற்போது கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 50,000 பனை விதைகளை இப்பகுதிகளில் நடவு செய்ய முடிவெடுத்து அதற்கான விதைகள் சேகரிக்கும் பணி யில் தீவிரமாக ஈடுபட் டார். அந்த விதைகளை ஊராட்சிக் குட்பட்ட நீர்நிலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள சுமார் 36 ஏக்கர் பரப்பளவில் 30 ஆயிரம் பனை விதைக ளையும், இளங்குடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாச்சியா புரம் வரையிலும், அதேபோல் இளங்குடியில் இருந்து கரு குடி கிராமம் வரையிலான இவ்விரண்டு இடத்திற்கும் 2 கிலோ மீட்டர் அளவிற்கு சம அளவு தூரம் கொண்ட சாலையின் இரு ஓரங்களிலும் சுமார் 20,000 பனை விதை களையும் நடவு செய்ய முடி வெடுத்தார்.

    மேலும் மரம் வளர்த்தல் குறித்த அவசியத்தையும், அதற்கான விழிப்புணர்வை யும் இளைய சமுதாயமான மாணவ மாணவியருக்கு ஏற்படுத்த வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவர் அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அதன் அடிப்ப டையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்லூரியில் நிறும செயலறியல் துறையில் பயிலும் மாண வர்களை வரவழைத்து அவர் களின் முன்னிலையில் பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்ச்சியை அழகப்பா கல்லூரி துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி தொடங்கி வைத் தார்.

    முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் உருவாக்கிய பழ தோட்டங்களுக்கு துணை வேந்தர் நேரடியாக சென்று அவற்றை பார்வையிட்டு அவரின் முயற்சியை வெகு வாக பாராட்டினார். நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் நிறும செயலறியல் துறைத் தலைவர் வேதிராஜன், பேராசிரியர்கள் அலமேலு, நடராஜன், சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் மூர்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து, வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காரைக்குடி ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிராம பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    72 மணி நேரத்தில் 50,000 பனை நடவு செய்து ஒரு சாத னையாளராக திகழும் ஊராட்சி மன்ற தலைவரை யும், 100 நாள் பணியாளர்களை யும் சுற்றுவட்டார கிராம மக்க ளும், சமூக ஆர்வலர்க ளும் வெகுவாக பாராட்டி வரு கின்றனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் 700 பனை விதைகளை சேகரித்தனர்.
    • தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    திருமங்கலம்

    பனை மரம் தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்வி லும், வரலாற்றிலும், பொரு ளியலிலும் 2,000 ஆண்டுக ளுக்கும் மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனை தமிழக கடற்கரைப்ப குதிகளில் வளர்க்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    மீனவர்கள் குடியிருப்பு கள், துறைமுகங்கள், உயிரி யல் பூங்கா, அரிய வகை மீன்கள், நீர்வாழ் உயிரினங் களை காக்கும் வகையிலும், இயற்கை சீற்றங்களின் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், காலநிலை மாற்றத்தினை தணிக்கும் வகையிலும் ஒரு கோடி பனை விதைகளை பதிய மிட்டு பாதுகாக்கும் பணி களை தமிழக அரசு முன்னெ டுத்து செய்து வருகிறது.

    இந்த பணிக்கு உதவி புரியும் வகையில் திருமங்க லம் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நல பணித் திட்டத்தின் சார்பாக திட்ட அலுவலர் முனியாண்டி தலைமையில் மாணவர்கள் சிந்து பைரவி, அனிதா, அக்குமாரி, அருந்ததி, பக வதி கண்ணன், மருது பாண்டி, தங்கராஜ், மணி கண்டன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ராயபாளையம் மற்றும் திறளி ஆகிய கிராமங்களுக்கு சென்று சுமார் 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை சேகரித்தனர்.

    அந்த விதைகளை கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செந்தில் குமார் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முனைவர் பாண்டி ஆகியோரிடம் கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலு வலர் முனைவர் முனி யாண்டி, முனைவர் சிங்க ராஜா ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் வழங்கினார்.

    பனை விதைகளை பெற்றுக் கொண்ட மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டாக்டர் செந்தில் குமார் மற்றும் மதுரை காம ராஜர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாண்டி ஆகியோர் அன்னை பாத்திமா கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டு களை தெரிவித்தனர்.

    • சங்கரன்கோவில் அருகே பனை விதை நடும் விழா நடைபெற்றது.
    • வரகுணராமபுரம் கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    153-வது மகாத்மா காந்தி பிறந்த நாள் முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே பனை விதை நடும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் அழகாபுரி ஊராட்சி உட்பட்ட வரகுணராமபுரம் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழகாபுரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் கலந்து கொண்டார். நிகழ்வு ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் மதுரிதா செய்திருந்தாார். சமூக ஆர்வலர் மா.சந்திரசேகரன் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் பூமியில், பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம், வனம் இந்திய அறக்கட்டளை.

    மற்றும் பொதுமக்கள் இணைந்து 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 7500 பனை விதைகள், 750 மாணவர்கள் மூலம் நடும் விழா நடைபெற்றது.இதில் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன், வனம் அமைப்பின் நிர்வாகிகள் சுந்தர்ராஜன்,நாச்சிமுத்து, டி.எம்.எஸ்.பழனிச்சாமி, மற்றும் அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவர்கள், பணிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×