

சங்கரன்கோவில்:
153-வது மகாத்மா காந்தி பிறந்த நாள் முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே பனை விதை நடும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் அழகாபுரி ஊராட்சி உட்பட்ட வரகுணராமபுரம் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழகாபுரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் கலந்து கொண்டார். நிகழ்வு ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் மதுரிதா செய்திருந்தாார். சமூக ஆர்வலர் மா.சந்திரசேகரன் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.