search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஐந்தமிழ் ஆய்வு மன்ற தேசிய கருத்தரங்கம்
    X

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஐந்தமிழ் ஆய்வு மன்ற தேசிய கருத்தரங்கம்

    • கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
    • முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    என்.ஜி.ஓ.காலனி :

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் 19-வது தேசிய கருத்தரங்கம் தமிழ்த்துறை சார்பில் கல்லூரி பொறுப்பு முதல்வர் டி.எஸ். ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்த்துறை தலைவர் இளங்குமார் வரவேற்றார். கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைவர் மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவர் கருணாகரன் தலைமையுரையாற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் ஆய்வு சிந்தனைகள் என்னும் ஆய்விதழை வெளியிட பொருளாளர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

    வழக்கறிஞர் ஞானசேகரன் மற்றும் கல்லூரி ஆட்சி மன்ற துணை தலைவர் சந்திரமோகன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் ஆனந்த், ஆதிமகாலிங்கம் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஐந்தமிழ் ஆய்வுமன்ற செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×