search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதிவு பெற்ற என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் தொழில் நுட்ப கருத்தரங்கம்
    X

    பதிவு பெற்ற என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் தொழில் நுட்ப கருத்தரங்கம்

    • 28 ஆண்டுகால உள் நாட்டு வெளிநாட்டு அனுபவங்களை 3 பகுதிகளாக பிரித்து வழங்கினார்.
    • உறுப்பினர்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் உரிய பதில்களை விளக்கி தெளிவு படுத்தினார்.

    நாகர்கோவில் :

    பதிவு பெற்ற என்ஜி னீயர்ஸ் அசோசியேசன் சார்பில் நாகர்கோவில் செட்டிகுளம் ரோட்டரி டவுன் ஹாலில் வைத்து நவீன காங்கிரீட் தொழில் நுட்பமான பி.டி.ஸ்லாப் டெக்னாலாஜியைப் பற்றிய தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

    பதிவு பெற்ற என்ஜினீயர் சங்க தலைவர் என்ஜினீயர் ரஜீஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொருளாளர் கண்ணன் வரவேற்று பேசினார். என்ஜினீயர் செந்தில்குமார், சிறில் கிறிஸ்துராஜ் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக என்ஜினீயர் மாதன் பங்கேற்று பி.டி.ஸ்லாப் தொழில் நுட்பத்தை பற்றிய தனது 28 ஆண்டுகால உள் நாட்டு வெளிநாட்டு அனுபவங்களை 3 பகுதிகளாக பிரித்து வழங்கினார். மேலும் உறுப்பினர்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் உரிய பதில்களை விளக்கி தெளிவு படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் இயக்குனர் ராபர்ட் கென்னடியின் பிறந்த நாள் விழாவும் இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது. பின்னர் சிறப்பு விருந்தினர், கவுரவ விருந்தி னர்களுக்கு பொன்னாடை யும் நினைவுப் பரிசுகளும் தலைவர் ரஜீஷ்குமார் மற்றும் என்ஜினீயர்கள் சோமன் குமார் ஆகியோர் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் கோவிந்தன் நன்றி கூறினார்.

    Next Story
    ×