search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா சாக்லேட்"

    • பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
    • குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு அடித்தளமாக கஞ்சா விளங்குகிறது. கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள், வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையை தொலைத்து, ரவுடிகளாக வலம் வருகின்றனர்.

    நாள் முழுவதும் போதையில் மிதக்கும் இளைஞர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே கொடூரமான குற்றங்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடுகின்றனர். குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாக திகழும் கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஜி.பி. சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கஞ்சா விற்பனை கும்பலை தேடி தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    இந்நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் வகையில் பெட்டிக்கடைகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    வடமாநிலங்கள் பலவற்றில் குடிசை தொழில்போல் கஞ்சா சாக்லேட்களை தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வரும் தொழிலாளர்கள் மொத்தமாக கஞ்சா சாக்லேட்களை வாங்கி வந்து, ஒரு சாக்லேட் ரூ.10-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை சாப்பிடுபவர்கள் 3 மணி நேரத்திற்கு போதையில் மிதக்கின்றனர். குறைந்த பணத்தில் அதிக போதை என்பதால், கஞ்சா சாக்லேட்டுக்கு அதிக கிராக்கி உள்ளது.

    சாதாரண பெட்டிக்கடையில் மற்ற சாக்லேட்டுகளுடன் கஞ்சா சாக்லேட்டும் சர்வ சாதாரணமாக டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக சமூக அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து புதுச்சேரி போலீசார் பெட்டி கடைகளில் கஞ்சா சாக்லேட்டுகளை சப்ளை செய்யும் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் அவினாசியை அடுத்து அணைப்புதூர் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணபட்டேல் (வயது 42) என்பவர் கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது தெரிய வந்தது.

    எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • 150 கிராம் எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த இன்டேல் குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் எடை உள்ள 10 பாக்கெட் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • சென்னை ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பீடா கடையில் இருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாடுவதை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ள கும்பலை சேர்ந்த பலர் சிக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த கடையை ரகசியமாக கண்காணித்து அந்த பீடா கடையில் இருந்து சிலர் ரகசியமாக வாங்கி செல்வதை போலீசார் பார்த்தனர்.

    பின்னர் பீடா கடையில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். கடையில் சோதனை செய்தபோது சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா பொட்டலமாக இல்லாமல் சாக்லேட் வடிவத்தில் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.

    இதையடுத்து பீடா கடை உரிமையாளர் சுரேந்தர் யாதவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஜாம்பஜார் பேலீசார் கைது செய்தனர்.

    மேலும் பீடா கடையில் இருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டையும் பறிமுதல் செய்தனர். சென்னையின் முக்கிய பகுதியான ஜாம்பஜாரில் பீடா கடையில் கஞ்சா விற்பனை ஜரூராக நடந்து வந்துள்ளது. இதே போல மற்ற பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ×