search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார் வாலிபர் கைது"

    • வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    • ரூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை திருப்பூர் தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து கைது செய்தனர்.

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூரில் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

    இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் போலியான வீடியோக்கள் குறித்து திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஸ்குமார் (25) என்பவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போன்று போலியான வீடியோக்களை சித்தரித்து பதிவிட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தொடர்பு கொண்டு இது போலியான வீடியோக்கள் என்றும் உடனடியாக ட்விட்டர் கணக்கில் இருந்து அந்த வீடியோக்களை நீக்கம் செய்யவும் அறிவுறுத்தினர். ஆனால் ரூபேஷ் குமார் அதனை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து போலியான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ரூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்த திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    பீகாரில் இருந்து வெளியேறிய ரூபேஷ்குமார் தெலுங்கானாவில் பதுங்கி இருந்தார் அவரது செல்போன் எண்ணைக் கொண்டு அவர் இருந்த இடத்தை அறிந்த தனிப்படை போலீசார் தெலுங்கானாவில் வைத்து அவரை கைது செய்தனர் தற்பொழுது அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பீடா கடையில் இருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்வோர் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள் நடமாடுவதை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ள கும்பலை சேர்ந்த பலர் சிக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னை ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அந்த கடையை ரகசியமாக கண்காணித்து அந்த பீடா கடையில் இருந்து சிலர் ரகசியமாக வாங்கி செல்வதை போலீசார் பார்த்தனர்.

    பின்னர் பீடா கடையில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். கடையில் சோதனை செய்தபோது சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா பொட்டலமாக இல்லாமல் சாக்லேட் வடிவத்தில் தயாரித்து விற்பனை செய்துள்ளார்.

    இதையடுத்து பீடா கடை உரிமையாளர் சுரேந்தர் யாதவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அங்கிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை ஜாம்பஜார் பேலீசார் கைது செய்தனர்.

    மேலும் பீடா கடையில் இருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டையும் பறிமுதல் செய்தனர். சென்னையின் முக்கிய பகுதியான ஜாம்பஜாரில் பீடா கடையில் கஞ்சா விற்பனை ஜரூராக நடந்து வந்துள்ளது. இதே போல மற்ற பகுதிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ×