search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம் எஸ் டோனி"

    • நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார்.
    • இரட்டை சதமடித்ததை விட டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே தமக்கு மிகவும் பிடித்த தருணம் என்று கூறியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி களமிறங்குகிறது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலமையில் இந்தியா களமிறங்குகிறது.

    இத்தொடரின் முதல் போட்டி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்திய அணியில் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இஷான் கிஷன் மட்டும் விளையாடுகிறார். இடது கை அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளையாடி வரும் அவர் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரராக உலக சாதனை படைத்தார்.

    மேலும் தனது மாநிலத்தைச் சேர்ந்த டோனியை தனது குருவாக கொண்ட அவர் இரட்டை சதமடித்ததை விட 18 வயதில் தன்னுடைய பேட்டில் டோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியதே தமக்கு மிகவும் பிடித்த தருணம் என்று கூறியுள்ளார். அத்துடன் அவரது இடத்தை தம்மால் நிரப்ப முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து இஷான் கிஷன் பேசியதாவது:-

    நான் முதலில் 23 நம்பரை என்னுடைய ஜெர்சியில் கேட்டேன். ஆனால் அது ஏற்கனவே குல்தீப் யாதவ் பயன்படுத்தி விட்டதால் வேறு நம்பரை கேட்குமாறு என்னிடம் கூறினார்கள். அப்போது எனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு பிடித்த நம்பரை சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன 32 நம்பரை மறு வார்த்தை பேசாமல் எனது ஜெர்சியில் பயன்படுத்தி வருகிறேன். நான் எதற்காகவும் பயப்பட மாட்டேன். எனது வழியில் வரும் அனைத்து சவாலுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.

    டோனி குறித்து பேசும் போது, 18 வயதில் டோனியை முதல் முறையாக சந்தித்தது ஆட்டோகிராப் வாங்கியது என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவருடைய கையெழுத்து என்னுடைய பேட்டில் இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.

    நான் வளரும் போது என்னுடைய ரோல் மாடல் எம்எஸ் டோனி ஆவார். ஏனெனில் அவர் எங்கள் ஊரிலிருந்து எங்களது ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடியுள்ளார். எனவே இந்திய அணியில் அவரது இடத்தை நான் நிரப்ப விரும்புகிறேன். அதனால் தான் நான் இங்கு இருக்கிறேன். அவரைப் போலவே எனது அணிக்காக நான் நிறைய போட்டிகளை வெற்றி பெற்று கொடுக்க விரும்புகிறேன்.

    என்று அவர் கூறினார்.

    • தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார்.
    • அக்‌ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார்.

    மும்பை:

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 160 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

    இந்த போட்டியில் 94 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறியது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா மற்றும் அக்ஷர் படேல் 6-வது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

    சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 23 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களை குவித்தார். மறுமுணையில் அக்ஷர் பட்டேல் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை விளாசினார். இதனால் தான் இந்திய அணி 162 என்ற சவால் கொடுக்கும் ஸ்கோரை எட்ட முடிந்தது.


    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டிற்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் டோனி - யூசப் பதான் ஆகியோர் 2-வது இடத்தில் இருந்தனர். இவர்கள் 2009- ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்போது அக்ஷர் - ஹூடா ஜோடி 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்புடன் அதனை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    இந்த பட்டியலில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஜோடி முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6-வது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இன்றும் இந்திய அணியின் சிறந்த பேட்டிங் ஜோடியாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் ரிக்கி பாண்டிங்கை விட டோனி முன்னிலை பெறுகிறார்.
    • 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் டோனி படைத்தார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா 1999 உலகக் கோப்பை வென்று அசத்தியது. அவருக்குப்பின் பொறுப்பேற்ற ரிக்கி பாண்டிங் அவரையும் மிஞ்சும் வகையில் ஆஸ்திரேலியாவை வழி நடத்தி 2007, 2011 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தார்.

    2007-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தி முக்கிய நேரங்களில் தைரியமான முடிவெடுத்த எம்எஸ் டோனி இந்தியாவுக்கு முதல் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்தார்.

    மேலும் சச்சின் முதல் லக்ஷ்மன் வரை அனைத்து மூத்த வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய அவர் 2010-ல் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் அணியாக தரம் உயர்த்தி 2011இல் சௌரவ் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் மற்றுமொரு தாகத்தை தணித்தார்.

    அதை விட 2013-ல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஐசிசி உலக கோப்பைகளை வென்ற முதல் கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் படைக்காத சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் களத்திற்கு வெளியே வாரியத்திலும் அணி நிர்வாகத்திலும் நடந்த அரசியல்களை ரிக்கி பாண்டிங்கை விட டோனி மிகச் சிறந்ததாக கையாண்டார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பாராட்டியுள்ளார்.

    இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

    ரிக்கி பாண்டிங்கிடம் அற்புதமான அணி இருந்தது. டோனியும் சிறந்த அணியை பெற்றிருந்தார். என்னைப் பொறுத்த வரை இருவரும் சிறப்பாக செயல்பட்டு நல்ல கேப்டன்ஷிப் சாதனைகளை படைத்துள்ளார்கள். அவர்களை நாம் பிரிக்க முடியாது. இருப்பினும் ரிக்கி பாண்டிங்கை விட இந்திய கிரிக்கெட்டில் எம்எஸ் டோனி நிறைய அரசியல் ரீதியான நிகழ்வுகளை கொண்டிருந்தார். அது தான் ரிக்கி பாண்டிங்கை விட டோனியை முன்னிலைப்படுத்தும் அம்சமாகும். ரிக்கி பாண்டிங்கின் மற்றொரு விஷயம் என்னவென்றால் அவரைச் சுற்றி நிறைய அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்கள்.

    உண்மையில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் எப்படி அசத்த வேண்டும் என்பதை தெரிந்திருந்தார்கள். அதனால் விளையாட்டின் சில அம்சங்களை மட்டுமே பாண்டிங் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. அவரது தலைமையில் பெரும்பாலான வீரர்கள் அணுகுமுறைகள், ஒழுக்கம், என்ன செய்ய வேண்டும் என்ற அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் டோனி தலைமையில் அப்படி ஒரு அணியில்லை. அது கடினமான ஒன்று. அத்துடன் இந்தியாவில் இருந்த அரசியலை கையாண்ட விதத்தில் அவரை விட டோனி முன்னிலை பெறுகிறார். சாரி ரிக்கி.

    இவ்வாறு பிராட் ஹாக் கூறினார்.

    • குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோரும் நேற்றிரவு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.
    • பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் டோனியும் பாட்டு பாடுவது, அவரும் இணைந்து நடனமாடுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துவிட்டார். ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில், துபாயில் நடைபெற்ற பார்ட்டியில் டோனி பங்கேற்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அந்த பார்ட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, டோனி மனைவி சாக்க்ஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளது அந்த வீடியோவில் தெரிந்தது. மேலும், பிரபல ராப் பாடகர் பாட்ஷா உடன் டோனியும் பாட்டு பாடுவது, இணைந்து நடனமாடுவதும் அந்த வைரல் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இதை அவரது மனைவி சாக்க்ஷி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போட்டிருந்த வீடியோ மூலம் தெரிய முடிகிறது.

    நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றிய கையுடன் ஹர்திக் பாண்டியா, டோனி உடன் துபாயில் இணைந்துள்ளார். ஹர்திக் பாண்டியா மட்டுமில்லாமல், அவரின் சகோதரர் குர்ணால் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோரும் நேற்றிரவு பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

    வரும் 2023 ஐபிஎல் தொடருக்கு பின் டோனி, அத்தொடரில் இருந்தும் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. எனவே, அவரது தலைமையில் 5ஆவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியனாகி, அவரை சிறப்பான முறையில் வழியனுப்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

    • ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார்.
    • இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள்.

    சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி தான் வாங்கிய புதிய எஸ்யூவி காரில் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் இரவு நேரத்தில் பயணம் மேற்கொண்டார்.

    ஐபிஎல் 2022 முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட்டில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சில இடங்களுக்குச் சென்றார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார் டோனி.

    இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) அடுத்த சீசனுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, ​​சிஎஸ்கே கேப்டன் சமீபத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் புதிதாக வாங்கிய எஸ்யூவியில் பயணம் மேற்கொண்டுள்ளார். டோனி சமீபத்தில் KIA SV6 என்ற காரை வாங்கியுள்ளார். இது முழுக்க மின்சார கார் ஆகும்.

    ஆன்லைனில் வைரலான அந்த வீடியோவில், ராஞ்சியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் அணி வீரர் கேதர் ஜாதவ் ஆகியோருடன் எம்எஸ் டோனி காணப்பட்டார். சிஎஸ்கே வீரர்கள் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்காக வந்திருந்தனர். இருவரும் டோனியை சந்தித்தது மட்டுமல்லாமல், அவரது புதிய எஸ்யூவியில் பயணம் செய்யும் வாய்ப்பையும் பெற்றனர்.

    இருவரும் அடுத்ததாக நவம்பர் 19-ம் தேதி விஜய் ஹசாரே டிராபியின் எலைட் குரூப் போட்டியில் சர்வீசஸ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா அணிக்காக களமிறங்குவார்கள். மகாராஷ்டிரா தற்போது போட்டியில் தோல்வியடையாமல் உள்ளது மற்றும் சர்வீசஸ் அணியை வீழ்த்தினால் குழுவில் முதலிடத்தை பிடிக்க முடியும். ருதுராஜ் ஐபிஎல் 2020ல் தனது ஐபிஎல் அறிமுகத்தை தொடங்கினார். 2021ல் சிஎஸ்கேயில் நிரந்தர உறுப்பினரானார். மறுபுறம் ஜாதவ் சென்னை அணிக்காக மூன்று ஆண்டுகள் விளையாடினார்.

    • எம்.எஸ்.டோனி ஒரு கேப்டனாக வெற்றிகண்டுள்ளார்.
    • அதிக வாய்ப்புகளை கொடுத்தால் தான் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.

    மும்பை:

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி மிகவும் மோசமாக சொதப்பியது. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அரையிறுதி போட்டியில் தோற்றதை இன்றும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து அடுத்த முறையாவது இந்திய அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், யார் யாரையெல்லாம் மாற்ற வேண்டும் என விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளது.

    அதில் பலரின் வாய்களில் இருந்து வரும் பெயர் எம்.எஸ்.டோனி தான். அதாவது இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் டோனி ஓய்வு அறிவிக்கலாம். அதன்பின் அவரை இந்திய அணியின் இயக்குநராக முழு நேர பதவி கொடுக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்காக டோனிக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் புதிய யோசனையை வழங்கியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் மற்றும் விரேந்திர சேவாக் போன்ற வீரர்கள் மிகவும் சிறந்தவர்கள் தான். ஆனால் ஒரு பயிற்சியாளருக்கு தலைமை பண்பு மற்றும் வியூகங்கள் வகுப்பதில் அதிக அனுபவம் வேண்டும். அப்போது தான் வீரர்களுக்கு யோசனைக்கூற முடியும். அதற்கு டோனி தான் சரிபட்டு வருவார்.

    எம்.எஸ்.டோனி ஒரு கேப்டனாக வெற்றிகண்டுள்ளார் என்பதை பாருங்கள். எனவே அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வைக்க வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு நல்லதாக இருக்கும். இது ஒருபுறம் இருக்க டோனி சிஎஸ்கே அணிக்கும் ஆலோசகராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டு வருகிறது.

    இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை தரவேண்டும். அதில், ரிஸ்க் எடுக்காமல் எதுவுமே வராது. எல்லா முறையும் வெற்றி மட்டுமே வரும் என நினைக்கக்கூடாது. அதிக வாய்ப்புகளை கொடுத்தால் தான் சில சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க முடியும்.

    என சல்மான் பட் கூறியுள்ளார்.  

    • பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.
    • முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார்.

    கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த டி 20 உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 137 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 138 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தாலும் நிதானமாக விளையாடியது. பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான பேட்டிங்கால் இலக்கை 19-வது ஓவரில் அடைந்து இரண்டாவது முறையாக டி 20 சாம்பியன் ஆனது.

    இந்த வெற்றியின் மூலம் தன் தலைமையேற்ற முதல் ஐசிசி தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனாக ஜோஸ் பட்லர் மாறியுள்ளார். இதற்கு முன்னர் இதே சாதனையை 2007 ஆம் ஆண்டு இந்திய அண்யின் முன்னாள் கேப்டன் டோனி படைத்திருந்தார். அதே போல ஐசிசி டி 20 கோப்பையை வென்ற விக்கெட் கீப்பர் கேப்டன்களாக பட்லர் மற்றும் டோனி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.

    ×