search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரங்கள்"

    • இணையதளம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீட்டில் கலெக்டர் பங்கேற்றார்.
    • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் வத்திராயிருப்பு (வார்டு எண். 2) மற்றும் வ.புதுப்பட்டி (வார்டு எண். 7) பேரூராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு சாதாரண தற்செயல் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்குவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி ஒதுக்கீடு செய்தார்.

    ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விருதுநகர் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் நாராயணமடம் தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் இருந்து வத்திராயிருப்பு மற்றும் வ.புதுப்பட்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி, வருகிற 5-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான 3-ம் கட்ட பணிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்தார்.

    • அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
    • விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் மடத்துக்குளம் வட்டாரங்களில் நீண்ட கால பயிராக தென்னை, மாமரங்கள் பராமரிக்கப்படுகிறது.மேலும் கரும்பு, வாழை, சின்னவெங்காயம் மற்றும் ஒவ்வொரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பி.ஏ.பி., மற்றும் அமராவதி பாசனத்துக்கு நெல், மக்காச்சோளம், சோளம் மற்றும் தானியங்கள் சாகுபடியாகிறது.

    விவசாய சாகுபடியில் தற்போது அனைத்துப்பகுதிகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.நடவு முதல் அறுவடை வரைகுறித்த நேரத்துக்குஆட்கள் கிடைக்காதது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, தென்னந்தோப்பு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதும் அதிகரித்துள்ளது.

    இருப்பினும் சிறு, குறு விவசாயிகள், காய்கறி சாகுபடியாளர்களுக்குசீசன் சமயங்களில்தொழிலாளர் கிடைக்காமல் பாதிக்கின்றனர். எனவே படிப்படியாக, சாகுபடி பணிகளுக்கு கருவிகளையும், எந்திரங்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

    காய்கறி சாகுபடியில் மேட்டுப்பாத்தி அமைத்து, இடைவெளியில் களையெடுக்க கோனோவீடர்கருவியை பயன்படுத்துகின்றனர். அதே போல் தென்னை, மாமரங்களுக்கு இடையே, களைச்செடி, பார்த்தீனிய செடிகளை அகற்ற கட்டர் எந்திரத்தைபயன்படுத்துகின்றனர்.இவ்வகை எந்திரத்தை சொந்தமாகவும் வாங்கி பயன்படுத்துகின்றனர். சில பகுதிகளில் விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு 250 ரூபாய் வாடகைக்கு எந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    விவசாயிகள் கூறுகையில், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய வகை கருவிகள் உதவுகிறது. களையெடுத்தல் பணிக்கு பரவலாக எந்திரங்களை பயன்படுத்துகிறோம். அதே போல் விதை, நாற்று நடவு பணிக்கு கருவிகளை அறிமுகப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய கருவி, எந்திரங்களை விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு, கிராமம்தோறும் வழங்கினால்அனைத்து விவசாயிகளும் பயன்பெறுவார்கள் என்றனர்.

    • பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.
    • துணியில் டிசைன்களை மிக துல்லியமாக எந்திரம் பொறிக்கும்.

    திருப்பூர் : 

    பொது பயன்பாட்டு சேவை மையங்களை அமைத்து, பின்னலாடை உற்பத்தி துறையில் உள்ள தொழில் நுட்ப இடைவெளிகளை பூர்த்தி செய்யும் முயற்சியில் திருப்பூர் தொழில் துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

    தென்னிந்திய இறக்குமதி எந்திர பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா) பல்லடம் அருகே நாரணாபுரத்தில் நிட்டிங் பொது சேவை மையத்தை உருவாக்கியுள்ளது. அதிநவீன எந்திரங்களுடன் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    இதேபோல் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை உற்பத்தி துறையினர் 50 பேரை இணைத்து தாராபுரம் ரோடு பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில், அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளது.

    ரூ.16.25 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 8.56 கோடி, மாநில அரசு ரூ. 3 கோடி மானியம் வழங்குகின்றன. தொழில் துறை குழுவினர் ரூ. 4.69 கோடி முதலீடு செய்கின்றனர்.பொது பயன்பாட்டு மையம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் முதல் கட்ட மெஷினரிகள் வந்திறங்கின.

    மைய தலைவர் ராமசாமி, நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம், தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.சீனாவில் இருந்து ஆட்டோமேட்டிக் டிரையருடன் கூடிய ஆட்டோமேட்டிக் கிளாஸ் பிரின்டிங் எந்திரம், 2 காஸ் கியூரிங் எந்திரம் 2 என இரண்டு வகையான நான்கு எந்திரங்கள் வந்துள்ளன.கிளாஸ் பிரின்டிங் எந்திரத்தில் 76க்கு 36 இன்ச் என்கிற பெரிய பரப்பளவில் துணியில் பிரின்டிங் செய்ய முடியும்.

    பிறப்பிக்கும் கட்டளையை ஏற்று தானாக இயங்கி, துணியில் டிசைன்களை மிக துல்லியமாக இந்த எந்திரம் பொறிக்கும். பிரின்டிங் செய்யப்பட்ட துணியே உடன் இணைக்கப்பட்டுள்ள டிரையருக்கு அனுப்பி உலர்த்தியும் கொடுத்துவிடும். அதிவேக உற்பத்தி திறன் மிக்கது. புதுமையான பிரின்டிங் சேம்பிள் தயாரிப்புக்கு இந்த எந்திரம் கைகொடுக்கும். எந்திரங்களை நிறுவும் பணிகள் நடந்துவருகின்றன. ரவுண்ட் பிரின்டிங் எந்திரம், எம்ப்ராய்டரி எந்திரங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. முதல்கட்ட எந்திரங்கள் வந்துவிட்டதால் விரைவில் இப்பொது பயன்பாட்டு மையமும் இயக்கத்தை துவக்க உள்ளது.

    • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    ×