search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allotment"

    • ரூ. 47 லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர னுக்கு வழக்கப்ப ட்டுள்ள அரசின் வாகனத்தி ன் சாவியை கலெக்டர் மகாபாரதி வழங்கி தொடங்கிவைத்தார். அப்போது நகராட்சி ஆணை யர் ஹேமலதா, துணை தலைவர் சுப்புராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், முழுமதி இமயவரம்பன், மேலாளர் லதா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து பழுதடைந்த மணிமண்டபத்தினை தமிழ்நாடு அரசின் உத்தரவு ப்படி, ரூ. 47லட்சத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெ றுவதை கலெக்டர் மகாபா ரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு பணியையும் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் பணிக ளை தரமாகவும், விரைவாக வும் முடிக்க அறிவுறு த்தினார்.

    இதில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.13 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு முதலமை ச்சர் அரசாணை வெளியி ட்டுள்ளார். அதன்படி, பொது ப்பணி த்துறையி னரால் தளவாட பொருட்க ள் வாங்கும் பணிகள் நடைபெற்று கொண்டி ருக்கின்றது.

    இந்த ஆய்வின்போது பொது ப்பணித்துறை செயற்பொ றியாளர் (கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகள்) பாலரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
    • உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தகுந்த தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் காரைக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிலாளர் நல சங்க கட்டிடத்தில் தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ், கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    இதில் தொழில் அதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற விதத்தையும், விற்பனை விகித முறையையும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படித்து முடித்த இளைஞர்கள் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை பயன்படுத்தி, தொழிற் முனைவோர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பங்கேற்ற காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

    சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்-ஹூப்ளி இடையே விரைவு ரெயில் சேவை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக இயக்கும் விதமாக ஹூப்ளியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஹூப்ளி நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டது.

    அப்போது, இந்த ரெயிலில் பயணித்த பயணிகளுக்கு எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. இனிப்புகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூரிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு போதுமான அளவுக்கு ரெயில் சேவை இல்லை என்கிற குறை இருந்து வந்தது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என ரெயில்வே வாரியத்திடம் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம்.

    இந்த கோடை கால நெருக்கடியைக் குறைப்பதற்காக தற்காலிக சிறப்பு சேவையாக 5 முறை தஞ்சாவூரிலிருந்து ஹூப்ளிக்கும், ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கும் சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ரயில் சேலம், பெங்களூரு வழியாக இயக்கப்படுகிறது. இதற்கு மக்களிடம் உள்ள வரவேற்பைப் பொருத்து, இச்சேவையை நிரந்தரமாக்குவதற்கு ரெயில்வே அமைச்சரை சந்தித்து முயற்சி செய்வேன்.

    தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இப்போது உழவன் விரைவு ரயில் மட்டுமே புறப்பட்டுச் செல்கிறது. வைகை, பல்லவன் போன்று சோழன் விரைவு ரயிலையும் இன்டர்சிட்டி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.

    தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்துதலுக்கு அளவீடு செய்யப்பட்ட இடங்களில் புதிய குடியிருப்புகள் உருவாகிவிட்டன. பொதுமக்களின் கருத்தை அறிந்து புதிய தடம் போடுவதற்கு வேலை நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், நிலைய மேலாளர் ஜாகீர் ஹூசைன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • குடவாசல் பகுதியிலேயே கல்லூரி கட்டுவதற்கான போதிய இடம் உள்ளது.

    திருவாரூர்:

    நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்ப–தாவது:-

    எனது கோரிக்கையை ஏற்று, 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடவாசலுக்குக் கல்லூரியை வழங்கினார்.

    குடவாசல் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தரப் பகுதி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட கல்லூரி குடவாசல் பகுதியிலேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் அனைவரின் கருத்தாகும்.

    மாறாகத் தவறான தகவல்களைச் கூறி குடவாசல் தொகுதியை விட்டு கல்லூரியை வெளியில் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இது ஒரு தவறான முன்னுதாரணம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிக்குப் புதிய கட்டிடம் கட்டுவற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    ஆனால் நீதிமன்ற வழக்கின் காரணமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.

    குடவாசல் பகுதியில் இடம் கொடுப்பதற்கு பல நிலச் சொந்தகாரர்கள் முன் வந்திருக்கிறார்கள். குடவாசல் பகுதியிலேயே கல்லூரி கட்டுவதற்கான போதிய இடம் உள்ளது.

    குடவாசல் பகுதியை விட்டு கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவு செயல்படுத்தப்பட்டால், மாணவர்கள், பொது மக்களுடன் இணைந்து, தலைமையேற்று நானே போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    தேர்வுக்குத் தயாராக வேண்டிய நிலையில், தற்போது குடவாசல் கல்லூரி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    உடனடியாக அரசு அதிகாரிகள், குடவாசல் பகுதியிலேயேக் கல்லூரிக்–கானக் கட்டிடம் கட்டப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் மாணவர்கள் தேர்வுக்குத் தயாரக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தோட்டக்கலைத்துறை பூந்தோட்டத்தில் நாற்றங்காலுக்காக ஒரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • உரிய லாபம் ஈட்டி வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் ஆட்சியரக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்களைத் தொழில்முனைவோா்களாக மாற்றும் வகையில் 'தஞ்சை தாரகைகள் பசுமையகம்' தொடங்கப்பட்டது.

    இந்தப் பசுமையகத்தைத் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது ;-

    இத்திட்டத்தில் பசுமைக் குழுவில் பகுதி நேர தூய்மை பணியாளா்களாகப் பணிபுரியும் பிள்ளையாா்பட்டி ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களிலிருந்து குழு உறுப்பினா்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் உயா்த்துவதற்காக, அவா்களை தொழில் முனை வோா்களாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இக்குழுவி–னருக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ஆட்சியரக வளாகத்தில் தோட்டக்கலைத் துறை பூந்தோட்டத்தில் நாற்றங்காலுக்காக ஒரு பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பூந்தோட்ட நாற்றங்காலை பராமரிப்பதற்காகத் தோட்டக்கலைத் துறை மூலம் மருங்குளம் அரசு தோட்டக்கலைத் துறைப் பண்ணையில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். பின்னர் அவா்களை ஒருங்கிணைத்து பூந்தோட்ட நாற்றங்கால் உற்பத்தியாளா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அவா்கள் வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் இப்பூந்தோட்ட நாற்றங்காலை பராமரித்து, பூச்செடிகளை விற்பனை செய்து, உரிய லாபம் ஈட்டி வாழ்வாதாரங்களைப் பெருக்குவதற்கான வழிவகை செய்யப்பட்டு–ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மகளிா் திட்ட இயக்குநா் லோகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரங்கராஜன், வேளாண் துணை இயக்குநா் ஈஸ்வா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
    • இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் முத ற்கட்டமாக 9 போலீஸ் நிலையங்களுக்கு வரவே ற்பாளர்களை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டு அவர்க ளுக்கான பணியிடங்களை வழங்கினார்.

    இந்த வரவேற்பாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்களை வரவேற்று, அவர்களுக்கு உதவி புரியும் வகையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவர்களுக்கான பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மாவட்டத்தில் திருவாரூர் தாலுக்கா, கூத்தாநல்லூர், நன்னிலம், வலங்கைமான், அரித்துவாரமங்கலம், பரவாக்கோட்டை, நீடாம ங்கலம், வடுவூர் மற்றும் திருத்துறைப்பூண்டி என 9 போலீஸ் நிலையங்களுக்கு இந்த வரவேற்பாளர்களை நியமனம்
    செய்யப்பட்டுள்ளனர்.

    • ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • கீழ பட்டினச்சேரிக்கும் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம், நாகூர், பட்டினச்சேரியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள் விழுந்தன. ஆடுகள் பலியாயின.

    இதையடுத்து அங்குள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    கடல் அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது,

    பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன்.

    அப்போது பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை அரசு உணர்ந்துள்ளதாகவும் எனவே விரைவில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    அதன்படி விரைந்து அதை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    ஏற்கெனவே நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    அதன் அடிப்படையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    அதுபோல் கீழப் பட்டினச்சேரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தக் கோரிக்கையும் விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, நாகை நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் அஞ்சலைதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 2021 - 22ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக 5 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.இதற்கான பாராட்டு விழா தமிழக அரசின் கல்வித்துறை ஆணையரகம் சார்பில் சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உத்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி, கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மெரின் மற்றும் எலையமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 2023 - 24-ம் நிதியாண்டிற்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.
    • ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் பெருமாள் கீழ வீதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமயலறை கட்டடம் இல்லாததால், அருகிலுள்ள பள்ளியிலிருந்து சமையல் செய்து உணவு எடுத்துவரும் நிலை இருந்தது.

    எனவே, உயர்நிலைப் பள்ளிக்கு சமயலறை கட்டடம் கட்ட வேண்டுமென நாகை எம்.எல்.ஏவிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சமையலறை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார்.

    இதில் நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில் குமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
    • அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல்:

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு இடம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நடப்பாண்டில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த 20 மாணவ, மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் பெயர் விவரம் வருமாறு:-

    புதுச்சத்திரம் அரசு பள்ளி மாணவர் முகேஷ், ராசிபுரம் அண்ணா சாலை அரசு பள்ளி மாணவர் தரண்ராஜ், மாணவி ரம்யா ஸ்ரீ, பள்ளிப்பாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவி ரோகிணி தங்கம், பாச்சல் அரசு பள்ளி மாணவி பூமிகா, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நவீன் குமார், கமலகாந்த், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்தி, கொல்லிமலை மாதிரி பள்ளி மாணவர் வெற்றி முருகன், ஆர். புதுப்பாளையம் அரசு பள்ளி மாணவர் ஜெயபாரதி, முத்துக்காப்பட்டி அரசு பள்ளி மாணவர் சுந்தரமூர்த்தி, சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி சுந்தரி, பாண்டமங்கலம் அரசு மகளிர் பள்ளி மாணவி வேத ஸ்ரீ, வளையபட்டி அரசு பள்ளி மாணவி சினேகா, திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளி மாணவர் நாகேஸ்வரன், வேலகவுண்டம்பட்டி அரசு பள்ளி மாணவி சபித்ரா, வெண்ணந்தூர் மற்றும் எருமப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் கோமதி, நித்தியா ஸ்ரீ, வெண்ணந்தூர் அரசு பள்ளி மாணவர் கவின் கண்ணா, வலையபட்டி அரசு பள்ளி மாணவி திரிஷா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
    • செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதிப்பிரிவு பொன்னையராஜபுரம், உப்பிலிபாளையம் 272 அடுக்குமாடி குடியிருப்புகள், வெள்ளக்கிணறு பகுதி நிலை 2 மற்றும் நிலை 3, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் உடுமலைப்பேட்டை எஸ்.எம்.டி. திட்டங்களும் மற்றும் தற்பொழுது கட்டப்பட்டு வருகின்ற சுயநிதி திட்டங்களான கணபதி சுயநிதி திட்டங்கள் பகுதி I, II, III மற்றும் சிங்காநல்லூர் சுயநிதி திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், மற்றும் மனைகளுக்கு 5.10.2022 மற்றும் 21.10.2022 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான குடியிருப்புகள் குலுக்கல் முறையில் 10.11.2022 அன்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    இக்குலுக்கல் சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரின் அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என கோவை வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்கள்.

    • சிறுபான்மை மக்களுக்கான கடன் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தகுதி அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பரிசீலனை செய்து கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    கும்பகோணம்:

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்திருப்பனந்தாளில் நடைபெற்றது. முகாமிற்கு ராமலிங்கம், எம்.பி தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர்வனிதா ஸ்டாலின் , பேரூராட்சி துணை தலைவர்கலைவாணி சப்பாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்யாணசுந்தரம் எம்.பி. முகாமை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராகதலைமை அரசு கொறடா கோவி. செழியன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முகாமில்பொது கால கடன் திட்டம், சிறுதொழில் வியாபாரம், பெண்களுக்கான சிறு கடன் வழங்கும் திட்டம், சுயஉதவிக்குழு தனிநபர்கடன்பு திய பொற்காலத் திட்டம்,கறவை மாடு கடன் திட்டம், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயத்தொழில் தொடங்க கடன் திட்டம், நெசவாளர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான கடன் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுவரை ரூ.95 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்து கடன் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.முகாமில் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் சின்னதுரை, தி.மு.க பிரதிநிதிகள் மிசா மனோகரன், குமார், சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு, ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், மகேஸ்வரி அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×