search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெறலாம்"

    • குமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளர் சின்னத்துரை பேச்சு
    • கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை தாங்கினார். அவை தலைவர் சிவ.குற்றாலம் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் கே.ஏ.சலாம் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி மேலிட பொறுப்பாளரும், மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான தூத்துக்குடி சின்னத்துரை கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்பொழுது ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, நாங்கள் கொண்டு வந்த திட்டம் என்று வெளியில் சொல்லிக் கொள்கின்றனர்.

    மகளிர் உரிமை தொகை ரூ.1000 அனைவருக்கும் கொடுப்பதாக தேர்தலில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் தற்போது அனைவருக்கும் கொடுக்கவில்லை. மேலும் தற்பொழுது 1 அல்லது 2 மாதத்திற்கு ஒரு முறை மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆய்வு செய்யப்பட்டு அதில் வருமானம் அதிகமாக இருந்தால் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆகையால் இது ஒரு மோசடி திட்டம் ஆகும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் தெளிவான பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

    இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, இளைஞரணி மற்றும் கட்சியில் இருந்து 19 பேரை ஒரு பூத்துக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். மேலும் 50 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் 810 கமிட்டிகள் உள்ளன. இதை சரியான முறையில் ஒருங்கிணைத்து நாம் திட்டமிட்டு பணியாற்றினால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம். இதற்காக அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண் டும். அதன் பிறகு எடப்பாடி யார் சுட்டிக்காட்டுபவரே பிரதமராக முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மேரி கமலபாய், அல்போன்சாள், ஒன்றிய செயலாளர்கள் நிமால், மணி, மெர்லியன்ட் தாஸ், ஜார்ஜ், சுதர்சன், அணிச் செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், ரெஞ்சித், வினோஜ், மனோ, மகாஜி செல்வகுமார், ஜாண் மற்றும் நிர்வாகிகள் முத்தழகன், திருமலை யாண்டி பிள்ளை, முருகன், அண்ணா உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சில்வெஸ்டர் நன்றி கூறினார்.

    • அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது
    • சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது.

    ஈரோடு, செப். 20-

    கொடுமுடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:

    அங்கக வேளாண்மையில் இயற்கை உரமான உயிர் உரங்கள் ஓர் முக்கிய பங்கு வகுக்கிறது. காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்தி, மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்து, சாம்பல் சத்தை கரைத்து, நுண்ணூட்ட சத்துக்களை உறிஞ்சி கொடுக்கும் திறன் மிக்க பாக்டீரியாக்கள் மூலம் உயிர் உரம் தயாரிக்கப் படுகிறது.

    தழைச்சத்திற்கு அசோஸ் பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிர் உரங்களையும் மணிச்சத்திற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களையும் பயன் படுத்தலாம். மேலும் பொட்டாஷ் மண்ணில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிருக்கு அளிக்கக் கூடியது.

    சாம்பல் சத்துமண்ணில் அதிக அளவு இருந்தாலும் 2 சதவீதம் மட்டுமே பயிர்களால் எடுத்து கொள்ளும் வகையில் உள்ளது. அத்தகைய மண்ணில் கரையாத நிலை யில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து பயிர்கள் எடுத்து கொள்ளும் வகையில் அளிக்க வல்லது இந்த பாக்டீரியா மேலும் வறண்ட சூழ்நிலையில் பயிர்கள் வெப்பத்தை தாங்கி வளர வழி வகுக்கிறது.

    சரியான ஒளிச் சேர்க்கைக்கும் உதவுகிறது. மணிகளின் எடையை அதிகரித்து மகசூலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

    திரவ உயிர் உரங்களைக் கொண்டு நெல் விதை நேர்த்தி செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 50 மில்லி லிட்டர் கலந்து பின் தெளிக்கலாம்.

    ஒரு ஏக்கர் நாற்றுகளுக்கு 100 மில்லி லிட்டர, திரவ உயிர் உரத்தை தேவையான அளவு தண்ணீரில் கலந்து நாற்றின் வோப் பகுதி நன்கு நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

    அடி உரமாக ஒரு ஏக்கருக்கு 200 மில்லி லிட்டர் திரவ உயிர் உரத்தை தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயலில் இட வேண்டும்.

    ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி லிட்டர் திரவ உயிர் உரம் என்ற அளவில் கலந்து விதைப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து 15, 30 மற்றும் 45-வது நாட்களில் பயிர்களில் படும்படி தெளிக்கலாம். உழவர்கள் திரவ உயிர் உரங்களை பயன் படுத்துவதன் மூலம் அதிக மகசூல் எடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    ×