search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்பார்ப்பு"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

    தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.

    பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

    மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.

    எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவமழை எதிர்பார்ப்பை பொறுத்து அமைகிறது.
    • தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதி விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பகுதியாகும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி, பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.

    தொழில் கல்வி பயின்றவர்கள் தொழில்கள் மேற்கொள்ளும் முனையும் போது, போதுமான இட வசதிகள், அரசின் சலுகைகள், தொழில் செய்வதற்கான உரிமங்கள் பெறுவதில், தொழில் கூடங்கள் அமைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

    விவசாயம் என்பது நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவ மழை எதிர்பார்ப்பைப் பொறுத்து அமைகிறது.

    இப்பகுதி மக்களின் வருமானம் இயற்கை சூழலை ஒத்து அமைந்துள்ளதால், விவசாயம் இல்லாமல் பிற தொழில் மேற்கொள்வதற்கு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் தொழில் கூடங்கள் அமைத்தால் சிறுகுறு தொழில் முனைவோர் பயன்பெறுவதற்கும், தொழில் மேற்கொள்வதற்கும், ஏதுவாக அமையும் என்று கருதுகின்றனர்.

    எனவே, விளைநிலங்கள் பாதிப்பில்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், சிறுகுரு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும் என்று தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது.
    • அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரு நூற்று மலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில், வசிஷ்ட நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகை யில், 263.86 ஏக்கர் பரப்பள வில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னமநாயக்கன்பா ளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பேளூர், குறிச்சி, கொட்ட வாடி, அத்தனுார்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்கள் நிலத்தடி நீராதாரமும், ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதியும் பெறுகின்றன.

    16 ஆண்டுகளுக்கு பிறகு

    16 ஆண்டுகளுக்கு பிறகு ஆனைமடுவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் 65.45 அடியில் 248.51 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு, வினாடிக்கு 110 கனஅடி வீதம் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் முழுவதும் வசிஷ்டநதியில் உபரிநீராக திறந்து விடப்பட்டது. இதனால் கடந்தாண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர், புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, வாய்க்கால் மற்றும் ஆற்றில் திறக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி, அணையின் நீர்மட்டம் 41 அடியாக குறைந்து போனது. அணையில் 80.73 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது.

    நீர்மட்டம் உயர்ந்தது

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து 3 மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணையில் 142 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது வினாடிக்கு, வெறும் 5 கனஅடி தண்ணீர் மட்டுமே அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    விவசாயிகள் எதிர்பார்ப்பு

    எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்தால் தான், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, அணை முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால், ஆனைமடுவு அணை மற்றும் வசிஷ்டநதி ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்களும், பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ஆனைமடுவு அணையின் நீர்மட்டம் 52.53 அடியை எட்டியுள்ளதால், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பெய்யும் பருவ மழையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் அணை நிரம்புவதற்கான வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது.
    • பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.

    திருப்பூர் : 

    கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து கடந்த 2009 பிப்ரவரி மாதம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

    அப்போது அவிநாசி தாலுகாவில் இருந்த அன்னூர் ஒன்றியம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன. புதிய மாவட்டம் பிரித்தபோது அன்னூரை ஒட்டி உள்ள பொங்கலூர் ஊராட்சி மக்கள் தங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்கும்படி கோரிக்கை வைத்தனர். இருந்தும் இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

    இதனால் 12 ஆண்டுகளாக கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக அந்த ஊராட்சி மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து பொங்கலூர் ஊராட்சி மக்கள் கூறியதாவது:- கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூர் ஊராட்சியில், தாசராபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், மொண்டிபாளையம், திம்மநாயக்கன்புதுார், பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்பட 9 ஊர்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.

    கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூரை அடுத்துள்ள ஆம்போதி ஊராட்சியும், பொங்கலூருக்கு முன்னதாக உள்ள பசூர் ஊராட்சியும் கோவை மாவட்டத்தில் உள்ளன. ஆனால் நடுவில் உள்ள பொங்கலூர் ஊராட்சி மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

    இப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லவும், தாலுகா அலுவலகம் செல்லவும், மூன்று பஸ்கள் மாறி அவிநாசி செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றாலும் 3 பஸ்கள் மாறி தான் செல்ல வேண்டும். அதேநேரம் கோவை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டால் மிக அருகிலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை அன்னூரில் உள்ளன. உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் கோவை மாவட்டத்தில் உள்ள பசூர் மற்றும் அன்னூரில் உள்ளன.

    எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க கோரி பொங்கலூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை, திருப்பூர் கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பி, 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது சிரமத்தை போக்க அரசு பொங்கலுார் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்றனர்.

    • கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்ப்பு.
    • இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இன்று காலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    கிராமப் பகுதிகளில் தாழ்வான தெருக்களில் தண்ணீர் சூழ்ந்தது.

    பல இடங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறியது.

    பூதலூர் ரெயில்வே கீழ்பாலத்திலும், ஜோதி நகர், ஜான்சி நகர், பாத்திமா நகர், இந்திரா நகரில் உள்ள தெருக்களிலும் மழை நீர் தேங்கியது.

    பூதலூர் மணியார் தோட்டம் 4-வது தெருவில் மழை நீர் தேங்கி நிற்பதையும், அங்கு மின்கம்பம் சேதமான நிலையில் உள்ளதையும் பூதலூர் தாசில்தார் பெர்ஷியா, வருவாய் ஆய்வாளர் முருகானந்தம் பார்வையிட்டு மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    கிராமப் பகுதியில் உள்ள தெருக்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் கொசு தொல்லை அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடுகிறது.

    இதனால் உடனடியாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக திருக்–காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் மேற்–ெகாள்ளப்பட்டு வரும் சம்பா நடவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அதேபோல இளம் சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட கூடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற வகையில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உரியவாறு ஆணைகளை பிறப்பித்து சிட்டா, அடங்கல்நகல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    • திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
    • நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும்

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட பருவ மழை நன்கு பெய்துள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதன் முழு கொள்ளளவான 120 அடியிலேயே நீடித்தது. அதேபோல் கர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் காவிரியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

    தொடர்மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதாலும் திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா சாகுபடி 50 ஆயிரம் ஹெக்டேராக ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதற்கான ஆயத்த பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

    குறிப்பாக திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் நகர், கல்லிக்குடி, மாந்துரை, அபிஷேகபுரம், கூகூர், தண்ணியம், முள்ளால், செம்பரை, காட்டூர், பூவாளூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் மண்ணச்சநல்லூர், நொச்சியம், கிளியநல்லூர், எதுமலை,

    மணிகண்டம் வட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு, பூங்குடி, மணிகண்டம், திருவெறும்பூர் வட்டத்தில் வேங்கூர், கீழகல்கண்டார் கோட்டை, முசிறி வட்டத்தில் அய்ய ம்பாளையம், குணசீலம், புத்தனாம்பட்டி, தொட்டியம் வட்டத்தில் காட்டுப்புத்தர், தொட்டியம், உப்பிலியபுரம் வட்டத்தில் எரகுடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

    நாற்றுகள் பாவுவதற்கு முன்பும், நடவுப் பணிக்கு முன்பும் அடியுரமாக டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களும், மேலுரமாக பொட்டாஷ், யூரியாவும் இடப்படும். ஆனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொடக்க வேளர்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவுக்கு உரங்கள் இல்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனை கண்டித்தும், போதிய அளவு உரங்கள் வழங்கவும் வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காலி உர சாக்குகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தாண்டு நல்ல பெய்து வருவதாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்ந்து வருவதாலும் சம்பா சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 ஆயிரம் ஹெக்டேர் வரையில் சம்பா சாகுபடி நடைபெறும் என வேளாண்மைத்துறையினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முருகேசன் கூறுகையில், மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டு சம்பாவுக்கும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் பரவலாக பெய்து வருவதால் சம்பா சாகுபடி பரப்பு வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு விதை கிராமத் திட்டத்தின் மூலம் 20 கிலோ சான்றளிக்கப்பட்ட விதைகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கி வருகிறோம்.

    திருச்சி-3 கோ.ஆர்.50, டி.கே.எம்.13, விஐடி1 ஆகிய நெல் ரகங்கள் உயிர் உரங்கள் வழங்கப்படுவதுடன் விதை நேர்த்தி செய்து வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு 330 மெட்ரிக் டன் விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 50 சதவீத விதைகள் பல்வேறு மானியத் திட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகளின் தேவையறிந்து அவற்றை பூர்த்தி செய்ய அந்தந்த வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி மகசூலை பெருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.

    ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.

    இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.

    இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    .நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

    • இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்த றியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

    ஈரோடு:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளியோர், விதவைகள், ஆதரவற்றோர், மிக மூத்தோர், அந்தி–யோதயா அன்னயோஜனா திட்ட கார்டுதாரர்கள் போன்றோருக்கு ரேஷன் கடைகள் மூலம், இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    அத்துடன் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 6 முதல் 8 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை கிடைத்தது.

    கடந்தாண்டு இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான ஆர்டர் தாமதமாக வழங்கப்ப ட்டதால் உரிய நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. ஆனால் இந்த ஆண்டு முன்பே ஆர்டர் வரும் என விசைத்தறியார்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    நடப்பாண்டு பட்ஜெட்டிலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானிய கோரிக்கையிலும், இதற்கான அறிவிப்பும், நிதி ஒதுக்கீடு பற்றியும் தெரிவிக்காததுடன் நேற்று வரை ஆர்டர் வழங்கவில்லை. இதனால், பொங்கலின்போது ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் எழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

    பொங்கலின்போது வினியோகிப்பதற்காக, கைத்தறி மற்றும் துணி நூல் துறை மூலம் 1.80 கோடி வேட்டி, 1.80 கோடி சேலை ஆர்டர் வழங்கப்படும். இதில் 30 சதவீதம் கைத்தறியிலும், 70 சதவீதம் விசைத்தறியிலும் நெய்து வழங்கப்படும்.

    இந்த ஆர்டரில் 70 சதவீதத்துக்கு மேல் ஈரோடு, திருச்செங்கோட்டில் உற்பத்தி செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ரேஷன் கடைகளுக்கே நேரடியாக வழங்குவோம்.

    தற்போது ரயான் நூல் விலை உயராத நிலையில், துணி விலை மீட்டருக்கு 3 ரூபாய்க்கு மேல் சரிந்து, விசைத்தறியாளர்கள் கடும் நஷ்டத்திலும், தொடர்ந்து விசைத்தறியை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம்.

    வழக்கமாக பட்ஜெட்டில் நிதியும், எவ்வளவு எண்ணிக்கையில் வேட்டி, சேலை உற்பத்தி செய்வது என அறிவிக்கப்படும். மே மாதத்துக்குள் நூலுக்கு டெண்டர் விடப்பட்டு, அந்தந்த பகுதிக்கு நூலும், சொசைட்டி மூலம் நிதியும் வழங்கப்படும்.

    ஜூன் மாதம் உற்பத்தி தொடங்கினால் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற டையும். பொங்கலுக்கு முன் 90 சதவீதம் பேருக்கு சென்றடையும்.

    நடப்பாண்டு நிதி அறிவிப்பு இல்லை. டெண்டர் விடப்பட்டு, இறுதி செய்யாததால் நூல் வரத்துக்கு இன்னும் சில வாரங்களுக்கு மேலாகும். இருப்பினும் விரைவாக பணி வழங்கினால் முடங்கி கிடக்கும் விசைத்தறிகளுக்கு தொடர் வேலை கிடைக்கும்.

    கடந்தாண்டு போல இல்லாமல் விரைவாக வேட்டி, சேலையை உற்பத்தி செய்து வழங்க வாய்ப்பாகும். இதுபற்றி, அரசு விரைவான முடிவை அறிவிக்க வேண்டும்.

    இதன் மூலம் ஈரோடு பகுதியில் மட்டும் 30 ஆயிரம் விசைத்தறிக்கு மேல் பயன் பெறும். பல லட்சம் விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பெறுவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணை ெபாதுச் செயலாளர் பதவி ராஜன்செல்லப்பாவுக்கு கிடைக்குமா? என்று தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. துணைப்பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு இந்த பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.

    இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    மேலும் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமையே வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் மதுரை மாநகர மேயராகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவி இவருக்கு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • செஞ்சி பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டது.
    • தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர்.

     விழுப்புரம்:

    செஞ்சி பஸ் நிலையம் ரூ 6.74 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு பழைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பஸ் நிலையத்தை திண்டிவனம் சாலையில் உள்ள தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் அனைத்து பஸ்களும் வந்து சென்றுகொண்டிருந்தன. 

    இந்நிலையில் ஏற்கனவே செஞ்சி கடைவீதியில் கழிவுநீர் கால்வாய் விரிவுபடுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பணி தற்போது பஸ் நிலையத்தில் இருந்து கூட்டு ரோடு வரை தொடங்கியுள்ளதால் கூட்ரோடு பகுதியில் சிறு பாலம் அமைக்க சாலை தடுக்கப்பட்டதாலும் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரமுடியாமல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர். இதனால் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.

    எனவே செஞ்சி கூட்டுச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சென்னை செல்லும் பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×