search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Career"

    • நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவமழை எதிர்பார்ப்பை பொறுத்து அமைகிறது.
    • தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதி விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்ட பகுதியாகும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு வேண்டி, பெருநகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.

    தொழில் கல்வி பயின்றவர்கள் தொழில்கள் மேற்கொள்ளும் முனையும் போது, போதுமான இட வசதிகள், அரசின் சலுகைகள், தொழில் செய்வதற்கான உரிமங்கள் பெறுவதில், தொழில் கூடங்கள் அமைப்பதில் பிரச்சினைகள் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

    விவசாயம் என்பது நன்னிலம் பகுதியை பொருத்தமட்டில் பருவ மழை எதிர்பார்ப்பைப் பொறுத்து அமைகிறது.

    இப்பகுதி மக்களின் வருமானம் இயற்கை சூழலை ஒத்து அமைந்துள்ளதால், விவசாயம் இல்லாமல் பிற தொழில் மேற்கொள்வதற்கு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் தொழில் கூடங்கள் அமைத்தால் சிறுகுறு தொழில் முனைவோர் பயன்பெறுவதற்கும், தொழில் மேற்கொள்வதற்கும், ஏதுவாக அமையும் என்று கருதுகின்றனர்.

    எனவே, விளைநிலங்கள் பாதிப்பில்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், சிறுகுரு தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், தொழில் கூடங்கள் அமைவதற்கு வழிவகை காண வேண்டும் என்று தொழில் முனைவோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×