search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம்
    X

    செஞ்சி பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம்

    • செஞ்சி பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டது.
    • தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பஸ் நிலையம் ரூ 6.74 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு பழைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பஸ் நிலையத்தை திண்டிவனம் சாலையில் உள்ள தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் அனைத்து பஸ்களும் வந்து சென்றுகொண்டிருந்தன.

    இந்நிலையில் ஏற்கனவே செஞ்சி கடைவீதியில் கழிவுநீர் கால்வாய் விரிவுபடுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பணி தற்போது பஸ் நிலையத்தில் இருந்து கூட்டு ரோடு வரை தொடங்கியுள்ளதால் கூட்ரோடு பகுதியில் சிறு பாலம் அமைக்க சாலை தடுக்கப்பட்டதாலும் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரமுடியாமல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர். இதனால் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.

    எனவே செஞ்சி கூட்டுச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சென்னை செல்லும் பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×