என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஷவாயு தாக்கி 3 பேர் பலி"
வடகிழக்கு டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் உள்ள இரு வீட்டில் நேற்று மாலை போலீசார் நடத்திய சோதனையில் 26 துப்பாக்கிகள், 800 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த சலீம்(47), நசீம்(35), சைஸான்(23) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மூவரும் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள வடகிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் அட்டுல் குமார் தாக்குர், இவர்களில் சலீம் என்பவன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவன் என குறிப்பிட்டார். #hugecacheofarms #ThreeheldUsmanpur
நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அவசியமாகும். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு-புத்தகம், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், பாட திட்டத்தில் மாற்றம், பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு முறையில் மாற்றம் என பல திட்டங்களை சொல்லலாம்.
இருப்பினும் அரசு பள்ளிகள் மீதான பெற்றோரின் மனநிலை இன்னும் மாறா தழும்பாக தான் இருக்கிறது. இதனால் இன்றும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அரங்கேறி வருகிறது.
அரசு எவ்வளவு முயற்சி எடுத்தாலும், தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகம் அதிகரிப்பால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வகுப்பறைகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட ஒருசில அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
இது குறித்த விவரம் வருமாறு:-
1946-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது மேல்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர்.
தற்போது 374 மாணவர்கள் தான் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 6-ம் வகுப்பில் 3 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 7-ம் வகுப்பில் 5 மாணவர்களும், 8-ம் வகுப்பில் 20 மாணவர்களும், 9-ம் வகுப்பில் 40 மாணவர்களும், 10-ம் வகுப்பில் 56 மாணவர்களும், பிளஸ்-1 வகுப்பில் 119 மாணவர்களும், பிளஸ்-2-வில் 131 மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர்.
தலைமை ஆசிரியர் உள்பட 21 ஆசிரியர்களை கொண்ட இந்த பள்ளியில் சில வகுப்புகளில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மட்டும் தற்போது 26 உயர்நிலைப்பள்ளிகள், 15 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இதில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் அடங்கும்.
இதனால் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எந்தவித பயனும் இல்லை. 21 வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளியில் குறைந்த அளவிலான மாணவர்கள் இருப்பதால் பல வகுப்பறைகள் காலியாக இருப்பதை காணமுடிகிறது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என்பது ஒரு முக்கிய காரணமாகும் என்றனர்.
இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பா? அல்லது அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை குறைந்ததா? என கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் தாலுகா கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்சினி (வயது25) நிறைமாத கர்ப்பிணியான இவர் மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரியதர்சினிக்கு கருவில் 3 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு துறை தலைவர் மருத்துவர் பாக்கியவதி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளிக்க தொடங்கினர்.
இந்நிலையில் 8 வது மாதம் பிரியதர்சினிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவசர சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. முதலில் 1.300 கிலோ எடையில் பெண் குழந்தை, அடுத்த நிமிடம் 1.680 கிலோ எடையில் ஆண் குழந்தையும், அடுத்த ஒரு நிமிடத்தில் 1.250 கிலோ எடையில் பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த 3 குழந்தைகளுக்கும் மூச்சுதிணறல், மஞ்சள் காமாலை நோயுடன் பிறந்த தால் தனி மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பல்வேறு நவீனசிகிச்சைகள் தொடர்ந்து 21 நாட்கள் அளிக்கப்பட்டது. தற்போது 3 மூன்று குழந்தைகளும் இயல்பான நிலைக்கு திரும்பி உள்ளன.
இது குறித்து கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ‘‘ இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ. 9 லட்சம் செலவாகும். ஆனால் அனைத்து நவீன சிகிச்சைகளையும் முதல்வர் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 114 மாணவர்களும், 13 ஆயிரத்து 466 மாணவிகளும் என 24 ஆயிரத்து 580 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.
இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 10 ஆயிரத்து 530 பேரும், மாணவிகள் 13 ஆயிரத்து 110 பேரும் ஆவார்கள். மொத்த தேர்ச்சி விகிதம் 96.18 ஆகும்.
மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி கூறியதாவது-
திருப்பூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 23 ஆயிரத்து 640 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 96.18 ஆகும்.
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இருந்தது.
திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்தை பிடிக்க காரணமான முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த ஆண்டு அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தரமான ஆசிரியர்களை கொண்டு ஐ.ஐ.டி, என்.ஐ.டி. போன்ற உயர் கல்விக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 5 மாணவர்கள் ஐ.ஐ.டி. முதல் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்