search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் ஏராளமான துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் 3 பேர் கைது
    X

    டெல்லியில் ஏராளமான துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் 3 பேர் கைது

    வடகிழக்கு டெல்லியில் 26 துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்களுடன் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். #hugecacheofarms #ThreeheldUsmanpur
    புதுடெல்லி:

    வடகிழக்கு டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் உள்ள இரு வீட்டில் நேற்று மாலை போலீசார் நடத்திய சோதனையில் 26 துப்பாக்கிகள், 800 தோட்டாக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த சலீம்(47), நசீம்(35), சைஸான்(23) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதான மூவரும் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள வடகிழக்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் அட்டுல் குமார் தாக்குர், இவர்களில் சலீம் என்பவன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 8 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவன் என குறிப்பிட்டார்.  #hugecacheofarms #ThreeheldUsmanpur
    Next Story
    ×