search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்திரபிரதேசம்"

    • சஜித்தை பிடிக்க முயன்ற போது சஜித் போலீசாரை தாக்க முயன்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் படாவுன் மாவட்டத்தில் உள்ள பாபா காலனியை சேர்ந்தவர் சஜித். முடி திருத்தும் கடை நடத்தி வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் இடையே ரூ.5 ஆயிரம் கடன் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை சஜித், வினோத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வினோத்தின் குழந்தைகளான ஆயுஷ் (வயது11), அஹான் (7), பியூஸ் (6) ஆகியோர் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சென்ற சஜித் திடீரென ஆவேசம் அடைந்து ஆயுஷ், அஹான் ஆகிய 2 குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பியூஸ் சத்தம் போடவே அவனையும் கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் பியூஸ் காயங்களுடன் தப்பினார். உடனடியாக அங்கிருந்து சஜித் தப்பி ஓடினார்.

    இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதியில் பொது மக்கள் திரண்டனர். அவர்கள் ஆவேசம் அடைந்து சஜித்தின் கடையை சூறையாடி தீ வைத்தனர். மேலும் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் சஜித்தை பிடிக்க முயன்ற போது சஜித் போலீசாரையும் தாக்க முயன்றார்.

    அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சஜித் என்கவுண்டரில் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. ராகேஷ் குமார் கூறுகையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளியை பிடிக்க துரத்தினர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். எனவே போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • ஆர்எஸ்எஸ், பாஜக நடத்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
    • ராமர் கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பாராட்டு.

    அயோத்தி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் இமாச்சல பிரதேச தலைவர் பிரதீபா சிங், கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. எனது கணவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங், கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு ஆலயங்களை அவர் புதுப்பித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நானும் எனது மகன் விக்ரமாதித்ய சிங்கும் இணைந்து பெற்றுள்ளோம். ஆனால், வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ராமர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதாக தெரிவித்தார். மேலும் "அயோத்தி ராமர் கோவில் இயக்கத்துக்கு எனது தந்தை ஆதரவாக இருந்துள்ளார். எங்களை பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் கிடையாது. இந்து மதத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் திசையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என கூறினார்.

    தேர்தல் ஆதாயத்துக்காக முழுமையடையாத கோவிலை திறந்து வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, உள்ளிட்டோர் அழைப்பிதழை நிராகரித்தது குறிப்பிடதக்கது

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளார் ஜார்கண்டை சேர்ந்த மூதாட்டி

    உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜன.22 ஆம் தேதி பிரம்மாண்டமாக திறக்கப்படுகிறது. இந்நிகழ்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி 30 வருட மவுன விரதத்தை ஜார்கண்டை சேர்ந்த 85 வயதான மூதாட்டி முடிவுக்கு கொண்டு வர உள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வசிக்கும் 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கும் வரை மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக, 1992ம் ஆண்டு சபதம் எடுத்துள்ளார். 1986 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு தனது வாழ்நாளை ராமருக்காக அற்பணித்துள்ள சரஸ்வதி தேவி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என நாளொன்றில் 23 மணி நேரம் மவுன விரதம் இருந்து வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு 24 மணி நேரமும் மவுன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜன.22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, தனது 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்..

    ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சரஸ்வதிதேவி ரயில் மூலம் அயோத்தி சென்றுள்ளார். ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அவரது மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

    ×