search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவுமுறை"

    • சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.
    • சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம்.

    சர்க்கரைவள்ளி கிழங்கை ருசிக்காக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பேண, அவசியம் சாப்பிட்டுவர வேண்டும். இதில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

    * பி-6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது.

    * ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் சரும பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது.

    * சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது.

    * இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி அவசியமானதாகிறது.

    * வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

    * இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் மூலம் அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டுகிறது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது. பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

    * சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ, சுட வைத்தோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம். அதிலிருக்கும் சத்துக்கள் முழுவதும் உடலுக்கு கிடைக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
    • இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டால், உணவுகளில் மிகவும் கவனம் தேவை.

    நீரிழிவு பாதிப்பு உள்ள நோயாளிகள் தங்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தைச் செய்தாலேயே நீரிழிவு நோயைப் பெருமளவு குறைக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    நெல்லை நேரடியாக வெயிலில் உலர்த்தி, வேக வைக்காமல், ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்குவதால் கிடைக்கும் அரிசி பச்சரிசி ஆகும். நெல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் ஊறிய நெல்லை அரைப்பதத்திற்கு வேகவைத்து, வெயிலில் உலர்த்தி, பின்னர் உமியை நீக்குவதால் கிடைக்கும் அரிசி புழுங்கல் அரிசி ஆகும்.

    நெல்லை வேகவைக்கும்போது உமியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, ஒரைசினால் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து உள்ளதாக திகழ்கிறது. புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) 38 ஆகும், ஆனால் பச்சரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 55 ஆகும்.

    புழுங்கல் அரிசியின் கிளைசிமிக் இன்டெக்ஸ் பச்சரிசியை விட குறைவாக இருப்பதாலும், புழுங்கல் அரிசியில் வைட்டமின் பி, ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நார்ச்சத்து பச்சரிசியை விட அதிகமாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது.

    புழுங்கல் அரிசி ஊற வைப்பது, வேக வைப்பது, உலர்த்துவது என்ற மூன்று நிலைகளை கடந்து பெறப்படுவதால் ஜீரணத்தை எளிதாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது. புழுங்கல் அரிசியில் ஆந்தோசையனின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அளவு அதிகமாக உள்ளது.

    இது செல்களில் ஏற்படும் அழற்சியையும், ஃபிரீரேடிகல்கள் பாதிப்பையும் குறைக்கிறது. பச்சரிசியை ஒப்பிட்டு பார்க்கும்போது, புழுங்கல் அரிசியில் அதிகமான அளவு கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ் ஆகியவை இருக்கிறது. இத்தகைய நன்மைகளை பெற்றிருக்கும் புழுங்கல் அரிசி, நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சரிசியை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன.
    • காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும்.

    காய்ச்சலை நாம் அணுகும் முறையால்தான் உணவுரீதியாகவும் நாம் தடுமாற்றம் அடைகிறோம். எனவே, காய்ச்சலை கையாளும் முறையில் மாற்றம் வேண்டும். காய்ச்சல்களில் பல வகைகள் இருக்கின்றன என்பது பலரும் அறிந்ததுதான். அது சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், தீவிரமான காய்ச்சலாக இருந்தாலும் நாம் பயப்படத் தேவையில்லை.

    காய்ச்சல் வந்தவுடன் நம்மில் பலர் அப்படியே படுத்துவிட்டு, சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருப்பார்கள். இதைத்தான் முதலில் தவிர்க்க வேண்டும். நமது உடலில் காய்ச்சல் ஏன், எதனால் ஏற்படுகிறது. அதை எப்படி சரிசெய்வது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    நமது சுற்றுப்புறத்திலுள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற ஏதாவதொரு கிருமி நம் உடலுக்குள் சென்றுவிட்டால் அதை நமக்கு உணர்த்தக்கூடிய ஓர் அறிகுறிதான் காய்ச்சல். அப்படி உடலுக்குள் சென்ற கிருமியை எதிர்த்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறபோது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதை காய்ச்சல் என்று சொல்கிறோம்.

    காய்ச்சலோடு தலைவலி, வாந்தி, குமட்டல், மூட்டுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கலாம். காய்ச்சலோடு சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் அல்லது ரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அது சிறுநீரக நோய்த் தொற்றாக இருக்கலாம். காய்ச்சலோடு வாந்தி, குமட்டல், பேதி போன்ற அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் ஏதாவது தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு கண் மஞ்சள் நிறமாக இருந்தால் கல்லீரலில் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம். காய்ச்சலோடு இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் நுரையீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

    உடலில் அதிக களைப்பு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்காமல் வெயில் காலங்களில் வெளியே செல்கிறபோதும் உடல் வெப்பநிலை அதிகரித்து காய்ச்சல் வருவதை Heat Stroke என்று சொல்கிறோம். அதேபோல அம்மை நோய்கள் ஏற்படுகிறபோது உடலில் கொப்புளங்களோடு காய்ச்சலும் வரும். எனவே, என்ன காரணத்தால் அல்லது எந்தக் கிருமியினால் காய்ச்சல் வந்துள்ளது என்பதை சரியாக கண்டறிவதற்கே இரண்டு நாட்கள் வரை ஆகும்.

    மலேரியா, டைபாய்டு, டெங்கு, சிக்கன்குனியா என்று நூற்றுக்கணக்கான காய்ச்சல் இருக்கிறது. எனவே, உடல் வெப்பநிலை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை தெர்மாமீட்டர் மூலம் கண்டறிவதோடு என்ன காரணத்தினால் அந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாக கண்டறிந்த பிறகே அதற்குரிய சரியான மருத்துவத்தை மேற்கொள்ள முடியும்.

    காய்ச்சலின்போது நீர்ச்சத்து தொடர்பான எல்லா உணவுகளையுமே நாம் புறக்கணிக்கிறோம். உடல் மேலும் குளிர்ச்சியடைந்து காய்ச்சல் அதிகமாகிவிடும் என்றும் தவறாக நம்புகிறோம். காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் உடலில் நீர்வறட்சி ஏற்படுகிறது. இந்த நீர்வறட்சியினால் ஏற்படுகிற பாதிப்புகள்தான் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகிற நிலைக்குக் கொண்டுபோய் விடுகிறது. எனவே, அதிகளவு நீர் அருந்துவதோடு நீராகாரங்களையும் எடுத்துக்கொள்வது நல்லது.

    இந்த நீராகாரங்கள் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களின்(Electrolyte) அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தண்ணீரின் சுகாதாரம் தொடர்பாக பல சந்தேகங்கள் இருப்பதால், கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடித்துக் கொள்ளலாம். முக்கியமாக, காய்ச்சல் வந்த பிறகு இரண்டு நாட்கள் வரை உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டும்.

    காய்ச்சல் வந்துவிட்டால் இதைத்தான் சாப்பிட வேண்டும். இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதே தவறான புரிதல். இதுபோன்ற நேரங்களில் நாம் இவற்றை எல்லாம் சாப்பிடக்கூடாது என்று நாமாகவே நினைத்துக்கொண்டு, சாப்பிடாமலேயே இருப்பதுதான் உடல் பிரச்னைகளை இன்னும் அதிகமாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

    காய்ச்சலின்போது மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை சாப்பிடுவதோடு தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறுகள், சூப் போன்ற நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்குள் புகுந்திருக்கிற கிருமிக்கு எதிராக செயல்படுகிறபோது, அதற்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைப்பதற்கு நாம் எப்போதும்போல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருக்கையில் நமது வாய்க்கு எதை சாப்பிடப் பிடிக்கிறதோ அதை சாப்பிடலாம்.

    நாம் வழக்கமாக சாப்பிடுகிற எல்லா விதமான உணவுகளையும் சாப்பிடலாம். நாம் சரியாக சாப்பிட்டால்தான் காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய முடியும். ஆனால், நமக்குப் பிடிக்கும் என்பதற்காக குளிர்பானங்கள், துரித உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்ற ஆரோக்கியக் கேடான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் அதிகக் காரமான உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்.

    • இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.
    • அளவுடன் சாப்பிட்டால் வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்

    சுண்டல் என்றாலே, பொதுவாகக் கருப்புக் கொண்டைக்கடலையைத்தான் கூறுவர்.

    உறுதியாகவும் இனிப்பு சுவை இல்லாமலும் இருப்பதால் உப்பு சேர்த்தோ, வேக வைத்தோ, வறுக்கப்பட்டோ சாப்பிடப்படுகிறது. பொரிகடலை கடைகளில் விற்கப்படும் உப்புக்கடலை, மிகவும் பிரபலமான ஒரு நொறுவை. உடைச்ச கடலை எனப்படும் பொட்டுக்கடலையும் அதற்கு இணையாகப் பிரபலமானதுதான்.

    கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மெக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.

    கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான போலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற பைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

    வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட கருப்புக்கடலையில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு. குளுக்கோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம். இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது.

    இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.

    சிறுநீர்ப்பெருக்கியாக செயல்படும் பண்பு இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கருப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு. இளம் கொண்டைக்கடலைக்குக் காமம் பெருக்கும் தன்மையும் உள்ளதாம்.

    • சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

    செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

    செர்ரி பழம் அனைவருக்கும் பிடித்தமானது. புளிப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். ஆழமான சிவப்பு நிறத்தை உடையது. செர்ரிகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை இழப்பிற்கு ஏற்றது.

    மேலும் வைட்டமின் சி, ஏ மற்றும் கே போன்றவைகள் காணப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் கால்சியம், பீட்டா கரோட்டீன் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதிலுள்ள வைட்டமின் சி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பொட்டாசியம் தசைகளின் சுருக்கத்திற்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும் உதவுகிறது.

    செர்ரிகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் காணப்படுகின்றன. இவை உயிரணுக்களுக்கு ஏற்படும் அன்றாட சேதத்தை சமாளிக்க உதவுகிறது. மேலும் செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

    செர்ரி பழங்களை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். செர்ரி பழத்தில் வைட்டமின் 'ஈ' நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண விரும்புபவர்கள் செர்ரி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

    தலைமுடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும், செர்ரி பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

    • ஒரு மாதத்திற்கு சர்க்கரையை அறவே நிறுத்திப்பாருங்கள்.
    • சர்க்கரை அதிக கலோரிகளை கொண்டது.

    நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் சர்க்கரை பல்வேறு விதங்களில் கலந்துள்ளது. இனிப்பு பொருட்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், குளிர் பானங்கள், பழங்கள், பழச்சாறுகள் என சர்க்கரையின் பங்களிப்பு தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. சர்க்கரை உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பல்வேறு உடல்நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

    இதுபற்றி டெல்லியை சேர்ந்த பிரபல மருத்துவர் அமிரிதா கோஷ் கூறுகையில், ''உண்ணும் உணவில் மறைமுகமாக கலந்திருக்கும் சர்க்கரைகள் உடலில் கலோரிகளை அதிகரிக்கச் செய்கின்றன. உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்பட பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையை குறைத்தால் உடல் நலனில் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்டாகும்.

    ஒரு மாதத்திற்கு சர்க்கரையை அறவே நிறுத்திப்பாருங்கள். உணவுப்பொருட்களில் எந்த வகையிலும் சர்க்கரை கலந்திருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒரு மாதம் உடலில் சர்க்கரையே சேராமல் இருந்தால் என்னவாகும் என்கிறீர்களா? உணவில் இருந்து சர்க்கரையை குறைக்கும் போது ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று உடல் எடை இழப்பு.

    ஆம்..! சர்க்கரை அதிக கலோரிகளை கொண்டது. அது தினமும் ஏதாவதொரு ரூபத்தில் உடலில் சேரும்போதும், அதன் அளவு அதிகரிக்கும்போதும் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும். சர்க்கரையை தவிர்க்கும்போது ஒட்டுமொத்தமாக குறைவான கலோரிகளையே உட்கொள்வீர்கள். அதனால் உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும்'' என்கிறார்.

    சர்க்கரை அதிகம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும், இன்சுலின் அளவை உயர்த்துவதற்கும் வழிவகுத்துவிடும். இதனால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.

    • பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள்
    • சில சமயங்களில் செரிமான நொதிகள் சரியாக சுரக்கப்படுவதில்லை.

    நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதன் காரணமாக உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளையும், நீர்ச்சத்துமிக்க உணவுப் பொருட்களையும் உட்கொள்வது உடலில் எலக்ரோலைட் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், வெப்பத்தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவும். கோடை காலத்தில் பலரும் செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். தர்பூசணி, முலாம்பழம், மாம்பழம் போன்ற பருவ கால பழங்களை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவும். நீரிழப்பை தடுக்கும்.

    கோடை காலத்தில் பலரும் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். அதனை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவது முக்கியம். இல்லாவிட்டால் உடல் உபாதை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். மதிய உணவுக்கு பிறகு மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

    இதுகுறித்து உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா, ''நாம் உண்ணும் உணவு சிக்கலின்றி செரிமானத்திற்கு உள்ளாக வேண்டும். கல்லீரலில் சுரக்கும் ஒரு வகை திரவம், செரிமான நொதிகள் மற்றும் வயிற்றில் சுரக்கப்படும் அமிலம் போன்றவை மூலம் உணவு உடைக்கப்படும்.

    சில சமயங்களில் செரிமான நொதிகள் சரியாக சுரக்கப்படுவதில்லை. அதனால் செரிமானம் சரியாக நடைபெறாது. அதன் காரணமாக வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற பிரச்சினைகள் உருவாகும். மாம்பழங்களில் அமிலேஸ், புரோட்டீஸ், லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் உள்ளன. அவை உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகளை உடைக்கவும், வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் போன்ற செரிமான கோளாறுகளை தடுக்கவும் உதவுகின்றன.

    மேலும் மாம்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. அது குடல் இயக்கத்தையும், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் ஒழுங்குபடுத்தும். மலச்சிக்கலையும் தடுக்கும். எனவே உணவு உட்கொண்ட பிறகு மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும்'' என்று தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மாம்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நீரிழிவு நோயை தடுக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும் மாம்பழத்தில் அதிகம் உள்ளன. அவை இதயம் மற்றும் கண் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியவை.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும்.
    • சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பிரெட், பாஸ்தா, கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்துவிட வேண்டும்.

    நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவுகளான கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ், பிரவுன் ரைஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

    மேலும் நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளான பீன்ஸ், அவரை, புரொக்கோலி (பச்சை பூக்கோஸ்), பாகற்காய் போன்ற காய்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தரைக்கு அடியில் விளையும் கிழங்குகளை குறைத்துக் கொள்ளவேண்டும். புரதம் அதிகமாக உள்ள பால், முட்டையின் வெள்ளைக் கரு, கோழிக்கறி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டக்ஸ்) குறைவாக உள்ள பழங்களை உண்ணலாம்.

    பட்டை தீட்டிய அல்லது பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினால் நல்லது. ஏனென்றால் கைக்குத்தல் அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு குறைவு.

    நீரிழிவு நோயாளிகள் கிழங்கு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால், கிழங்கு வகைகளை அறவே தவிர்க்கத் தேவையில்லை. சர்க்கரை வள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு போன்றவற்றைச் சிறிதளவில் வாரம் ஒரு முறை அல்லது ஒரு வேளை சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாகக் கிழங்கு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்காமல் இருப்பதே நல்லது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    • உணவைக் கவனமாக, நன்றாக மென்று சாப்பிட்டாலே இது போன்ற பிரச்னைகள் வராது.
    • சாப்பிடும் முறைகளில் காட்டும் அலட்சியம் நம் உயிரையே பறிக்க வாய்ப்புள்ளது.

    `எப்படி சாப்பிட வேண்டும்?', `சாப்பிடும்போது செய்யக் கூடியவை, கூடாதவை' என்பது பற்றி நிறைய கோட்பாடுகளே உள்ளன. இவை எவற்றையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் சாப்பிடும் முறைகளில் காட்டும் அலட்சியம் நம் உயிரையே பறிக்க வாய்ப்புள்ளது.

    நம்மில் பேசிக்கொண்டே சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை தான் அதிகம். மேலும், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், வேறு ஏதாவது வேலைகளில் கவனத்தைச் செலுத்திக் கொண்டும் சாப்பிடும் நமக்கும் ஆபத்து அருகில்தான் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எனவே, சாப்பிடும் முறைகளைப் பற்றியும், அதில் கவனக்குறைவாக இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    "நம்மில் பெரும்பாலானோர் செய்துகொண்டிருக்கும் தவறு பேசிக்கொண்டே சாப்பிடுவது. மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டு வெவ்வேறு வால்வுகள். உணவுப் பொருள்களை மெல்லும்போது மூச்சுக்குழல் வழியே சுவாசிப்போம். அதுவே மென்ற உணவை விழுங்கும்போது உணவுக்குழல் திறந்துகொள்ளும். அதே நேரத்தில் மூச்சுக்குழல் மூடிக்கொள்ளும். உணவு மூச்சுக்குழலினுள் செல்லாமல் இருக்க இயற்கையிலேயே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

    இதுவே நாம் வாயை மூடி மெல்லாமல் பேசிக்கொண்டே உணவைச் சாப்பிடும்போது நமக்குத் தெரியாமலே வாயின் வழியே காற்று உள்ளே செல்கிறது. இப்போது மென்ற உணவை விழுங்க முயலும் அந்த வாயில் காற்றும் இருப்பதால் உணவுக்குழல், மூச்சுக்குழல் இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கின்றன. இதனால் உணவுக்குழலினுள் செல்ல வேண்டிய உணவு வழிதவறி மூச்சுக்குழலினுள் சென்று தொண்டையை அடைத்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உணவு தொண்டையில் அடைத்துக்கொண்டவுடன் இயற்கையாகவே ஏற்படும் இருமல் மூலம் அந்த உணவுத்துகள் வெளியில் வந்துவிடும். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்படுத்திய உணவு சரியாக மெல்லப்படாத பெரிய அளவிலானது என்றால் இருமலின்போதும் வெளியில் வராது. எனவே, நம் சுவாசம் தடைப்படும். முப்பது விநாடிகள் நமது மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லவேயில்லை என்றால் மயக்கம் வந்துவிடும்.

    இதனால்தான் மூச்சுத்திணறல் வந்தவர் மயக்க நிலைக்குச் சென்றுவிடுகிறார். இந்த நிலையில் உள்ளவருக்கு முதலுதவி கொடுக்காமல்விட்டால் மரணம் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உணவு தொண்டையில் அடைத்துக்கொண்டு அதனால் மூச்சுத்திணறல் ஏற்படும்போது அவருக்கு அருகில் உள்ளவர் உடனே மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் மார்பிலும் கை வைத்து நன்றாக அழுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது நுரையீரலில் உள்ள காற்று வேகமாக வெளிவந்து, அடைத்துள்ள உணவுத்துகளை நீக்க வாய்ப்புள்ளது.

    மருத்துவத்துறையில் ஹெய்ம்லிச் மனுவர் (Heimlich Maneuver) என்ற சிகிச்சை முறை உள்ளது. இதில், உணவு தொண்டையில் அடைத்துக் கொண்டவரின் கைகளை முதுகின் பின்புறமாக அழுத்திப் பிடித்து அவரின் வயிற்றில் கைவைத்து நன்றாக அழுத்த வேண்டும். இப்படிச் செய்யும்போது தொண்டையில் அடைத்திருக்கும் உணவு வெளியில் வர வாய்ப்புள்ளது. இந்த முதலுதவி பயிற்சிகள் தற்போது பொதுமக்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

    உணவைக் கவனமாக, நன்றாக மென்று சாப்பிட்டாலே இது போன்ற பிரச்னைகள் வராது. அப்படியும் நாம் சாப்பிடும் உணவு தொண்டையில் அடைப்பதைப் போன்று உணர்ந்தால் தாராளமாகத் தண்ணீர் குடிக்கலாம். மேலும், கொஞ்ச கொஞ்சமாகச் சாப்பிட வேண்டுமே தவிர ஒரேயடியாக உணவை வாயில் திணிக்கக் கூடாது. பெரும்பாலும் பேசிக்கொண்டே சாப்பிடுவதைத் தவிர்த்தல் இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகள் மீதான ஆவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
    • முன்பு அசைவமாக இருந்த முட்டையை சைவ பட்டியலில் சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.

    உணவை பசிக்காக சாப்பிட்டு வந்த காலம் போய், ருசிக்காக சாப்பிடத் தொடங்கிவிட்டோம். வீடுகளில் சமைத்து சாப்பிடுவது குறைந்து, ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரிகமாக மாறிவருகிறது.

    குடும்ப விழா, கோவில் விழா என எத்தனையோ விழாக்களை கொண்டாடிய நாம் இன்று உணவு திருவிழாவையும் கொண்டாடுகிறோம். அறுசுவை உணவு என்ற நிலை மாறி, ஆயிரம் சுவைகளில் உணவு தயாரித்து வயிறு புடைக்க சாப்பிடுகிறோம். இதனால் உணவு திருவிழாவும் ஒருவித பண்டிகையாக மாறிவருகிறது. இந்த மனித பிறப்பே தினமும் வகை, வகையாக சாப்பிடத்தான் என்ற சிந்தனை கொண்டவர்களும் இருக்கின்றனர்.

    அசைவம்

    உணவில் எத்தனை வகைகள் இருந்தாலும் சைவம், அசைவம் என்று இரண்டாக பிரித்து விடலாம். இந்த இருவகை உணவுகளும் ஆதி மனிதன் காலத்தில் இருந்தே இருக்கிறது. விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை சாப்பிட தொடங்கியதில் இருந்தே அசைவம் இருக்கிறது.

    அதை நெருப்பில் சுட்டு சாப்பிட ஆரம்பித்ததும் அசைவ உணவு வகைகள் பிறக்க தொடங்கின. பச்சை மாமிசம், சுட்ட மாமிசம் என அசைவ உணவுகள் இரு வகையாக மாறின. பின்னர் நறுமண பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிட ஆரம்பித்ததும் அசைவ உணவு வகைகள் அதிகரிக்க தொடங்கின.

    ஆவல் அதிகரிப்பு

    சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்தில் ஒருநாள் அல்லது அதிகபட்சம் 2 நாட்கள் அசைவ உணவு சாப்பிடும் வழக்கம் இருந்தது. பண்டிகை, திருவிழா என்றால் உறவினர்களுடன் சேர்ந்து அசைவ உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் பண்டிகை, திருவிழா என்றால் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. மற்ற நாட்களில் கோழி முட்டை தான் அசைவ உணவாக இருந்தது.

    இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகள் மீதான ஆவல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வாரத்தில் ஒருநாள் கட்டாயம் சிக்கன், மட்டன் சாப்பிட வேண்டும். மேலும் 2 அல்லது 3 நாட்கள் மீன் சாப்பிட வேண்டும் என்ற விருந்து வேட்கை பலரிடம் இருக்கிறது. முன்பு அசைவமாக இருந்த முட்டையை சைவ பட்டியலில் சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.

    ஒருசிலர் நேரம் காலம் பார்க்காமல் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குகின்றனர். இதனால் ஊர்வன, பறப்பன, தாவி குதிப்பன உள்பட அனைத்தும் உணவாக மாறிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். வெளிநாட்டினரை போன்று விதவிதமாக சாப்பிடும் ஆவல் ஏற்பட்டுள்ளது. அசைவ உணவுகளுக்கு பஞ்சம் வந்துவிடுமோ? என்று அஞ்சும் அளவுக்கு பலரின் அசைவ உணவு வேட்டை இருக்கிறது.

    குழந்தைகள், இளைஞர்கள்

    தினந்தோறும் மீன், கோழி, ஆடு, மாடு என அசைவ உணவுகளை சமைத்து போட்டாலும் சலிக்காமல் சாப்பிடுகின்றனர். அதிலும் குழந்தைகள், இளைஞர்கள் விரும்பி சாப்பிடுவது அசைவ உணவாக தான் இருக்கிறது. பால் பற்கள் முளைத்த குழந்தைக்கு கூட பொரித்த சிக்கன்-65 துண்டுகளை கொடுக்கின்றனர்.

    எனவே அசைவ பிரியர்களை வாடிக்கையாளர்களாக வளைத்து போடுவதற்காக பெரிய ஓட்டல்களில் விதவிதமான உணவு வகைகளுடன் மெனு கார்டு வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் மதியம் பல ஓட்டல்களின் முன்பு அறிவிப்பு பலகையில் அன்றைய அசைவ உணவு வகைகளை எழுதி வைக்கின்றனர்.

    அதை பார்த்து ஓட்டல்களுக்கு படையெடுக்கும் அசைவ பிரியர்களும் உள்ளனர். ஓட்டல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறிய உணவகங்கள், சாலையோர உணவகங்களிலும் பலவித அசைவ உணவுகளை தயாரித்து அசத்துகின்றனர்.

    ஆட்டின் பாகங்கள் அனைத்தும் உணவு

    அசைவ உணவில் ஆட்டு இறைச்சிக்கு நிகரான சுவையில் எதுவுமே இல்லை என்பது பெரும்பாலான அசைவ பிரியர்களின் கூற்றாக இருக்கிறது. இதனால் ஆட்டு இறைச்சி கடைகளில் குறைவில்லாத கூட்டம் காணப்படுகிறது. ஆட்டு இறைச்சியின் விலை கிலோ ரூ.1,000 ஆக உள்ளது. ஆட்டின் இறைச்சி மட்டுமின்றி ஈரல், நுரையீரல், மூளை, குடல், கால்கள், தலை உள்பட (தோல், புழுக்கை தவிர) அனைத்து பாகங்களும் உணவாகி விடுகிறது. ஆட்டின் பாகங்களை விதவிதமாக சமைத்து சப்பை கொட்டி சாப்பிடுகிறோம்.

    ஒரே ஓட்டலில் அசைவம்-சைவம்

    முன்பெல்லாம் சைவம், அசைவத்துக்கு தனித்தனியாக ஓட்டல்கள் இருந்தன. ஏதேனும் ஓரிடத்தில் தான் அசைவம், சைவத்துக்கு ஒரே ஓட்டல் இருக்கும். அங்கும் சைவம், அசைவ உணவுகளை சாப்பிட தனித்தனி இடவசதி இருந்தன. இதனால் சைவ, அசைவ ஓட்டல்களை தேடிப்பிடித்து மக்கள் உணவு வகைகளை சாப்பிட்டனர். ஒருசில ஓட்டல்களின் பெயரை கூறியதும் அது சைவமா? அல்லது அசைவமா? என்று கூறிவிடும் வகையில் இருந்தது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அசைவ உணவுகளை சாப்பிடுவோர் அதிகரித்து விட்டதால், சைவம் மற்றும் அசைவம் என இருவகை உணவுகளும் ஒரே ஓட்டலில் விற்கப்படுகின்றன. சைவ ஓட்டல், அசைவ ஓட்டல் என்ற நிலைமாறி சைவம்-அசைவம் ஓட்டல் என்று மாறிவருகிறது.

    அபாயம்

    சந்தை, மார்க்கெட், கடைவீதிகள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் அசைவ உணவு வாசனை மூக்கை துளைக்கிறது. திண்டுக்கல் உள்பட ஒருசில ஊர்களில் காலை 7 மணிக்கே பிரியாணி விற்கும் அளவுக்கு அசைவ பிரியர்கள் அதிகரித்து விட்டனர்.

    அதிலும் ஓட்டல்கள், உணவகங்கள், சாலையோர உணவகங்களில் கோழி இறைச்சி, மீன்களை பொரித்து விற்கின்றனர். அதை சாப்பிடுவதற்கு தனியாக அசைவ பிரியர்கள் கூட்டமே இருக்கிறது. மேலும் மது குடிப்பவர்களின் பிடித்த உணவும் பொரித்த இறைச்சி தான்.

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அதேபோல் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கெட்டு, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் இருப்பதை பலரும் மறந்துவிட்டனர்.

    நோய்கள்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவை வரைமுறை இல்லாமல் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கூடுகிறது. இதனால் உடல்பருமன், இதய நோய், ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், பித்தப்பை கல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.

    அதிலும் குழந்தைகளுக்கு அசைவ உணவுகளை அதிகம் கொடுப்பதால் அவர்கள் வாலிப பருவம் வரும்போது பலவித உடல் பாதிப்புகளை சந்திக்கின்றனர். அதன்மூலம் நோயாளிகளும், மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதற்கு அலட்சிய போக்கே காரணம் ஆகும்.

    நமது உடலுக்கு ஏற்ற சத்தான உணவுகளை சாப்பிடுவதே ஆரோக்கியத்தை தரும். எனவே உணவில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த உலகில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகி, நீண்டகாலம் நோய்நொடியின்றி வாழ அசைவ உணவுகளை குறைப்போம். வாழ்வில் வளம்பெறுவோம்.

    அளவோடு இருந்தால் ஆபத்து இல்லை

    அசைவ உணவு பற்றி ஒய்வுபெற்ற நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், அசைவத்தில் புரோட்டீன், பி-12, நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு ஆகியவை இருக்கின்றன. எனினும் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். அதிலும் இதய கோளாறு உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, மீன் ஆகியவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் அவற்றை சாப்பிடலாம். அதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

    மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து இதய நோய் வந்துவிடும். இதுதவிர செரிமான பிரச்சினை ஏற்பட்டு உடல் உபாதைகளை உண்டாக்கும். அதனால் 50 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இதய நோயாளிகள் முட்டையில் மஞ்சள் கருவை சாப்பிடாமல், புரோட்டீன் நிறைந்த வெள்ளைக்கருவை சாப்பிடலாம். இதுதவிர ஐஸ்கிரீம், பால் பொருட்களை சாப்பிடாமல் இருப்பதும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

    அசைவ உணவுகளை தவிர்க்கும் அதேநேரத்தில் புரோட்டீன் நிறைந்த சோயாபீன்ஸ், பயறு வகைகள், பாலாடை கட்டி, காளான் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். அதேபோல் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், கீரைகளை அதிக அளவில் எடுத்து கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும். அதிலும் எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை சாப்பிடுவதை கைவிடுவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது, என்றார்.

    சிக்கன்-65 கடைகளில் அலைமோதும் கூட்டம்

    அசைவ பிரியர்களின் நாவை அடிமையாக்கும் வகையில் சிக்கன்-65 கடைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் கூட சிக்கன்-65 கடைகள் உருவாகிவிட்டன. நாவை நடனமாட வைக்கும் ருசி, கண்களை பறிக்கும் நிறத்தில் கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுத்த சிக்கன்-65 துண்டுகளை சாப்பிடுவதற்கு மாலை நேரங்களில் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு கேடு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் எண்ணெயில் பொரித்த சிக்கன்-65 வகைகளை வாங்கி சுவைத்து, வயிற்றை நிரப்பும் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

    திருமண வீடுகளில் அசைவம்

    திருமண விழாவில் மணமக்கள் கழுத்தில் அணிவது முதல் மணமேடை அலங்காரம் வரை அனைத்திலும் பூக்கள் முக்கிய இடம் வகிக்கும். மணமகள் மட்டுமின்றி திருமணத்துக்கு வரும் பெண்கள் அனைவரும் கூந்தலில் சற்று கூடுதலாகவே பூக்களை சூடிஇருப்பார்கள். திரும்பிய திசையெல்லாம் பூக்கள் காட்சி அளிப்பதே திருமண விழாவின் சிறப்பு. இதனால் திருமண வீடுகளில் 3 நாட்கள் பூ வாசனை வீசும்.

    இதற்கடுத்து திருமண விழாவில் அறுசுவை உணவு விருந்து மணம் வீசும். இந்த அறுசுவை விருந்தில் உணவு சாப்பிட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அசைவ உணவு பழக்கம் திருமண வீடுகளையும் விட்டுவைக்கவில்லை. சமீபகாலமாக திருமண வீடுகளில் கூட அறுசுவை உணவுக்கு பதிலாக அசைவ விருந்து அளிக்கப்படுகிறது.

    சிக்கன் பிரியாணி, கறிக்குழம்பு சாதம், சிக்கன் கூட்டு, சிக்கன்-65 என திருமண விருந்தில் அசைவ வாசனை ஆட்களை அசைத்து விடுகிறது. இதை உற்றார், உறவினர்கள் குடும்பத்துடன் வந்து விளாசுகின்றனர். ஆரோக்கியமான அறுசுவை விருந்து, அசைவ விருந்தாக மாறி வருகிறது. இந்த அசைவ விருந்து பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் பூ வாசனை, அறுசுவை விருந்து மணம் மறைந்து அசைவ உணவின் வாசனை தான் வீசுகிறது. திருமண விழாவில் அனைத்து வயதினரும் சாப்பிடுவார்கள் என்பதால் முன்னோர்கள் சைவ விருந்து அளித்தனர். ஆனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் அதிகரித்து வரும் இந்த காலத்தில் அசைவ விருந்து அளிப்பது நோயாளிகளை சங்கடப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. எனவே திருமண விழாவுக்கு வரும் அனைவரும் ஆரோக்கியமாக வாழ அறுசுவையுடன் சைவ விருந்து அளிப்பதை அனைவரும் பின்பற்றலாமே?

    • உடல் எடையைக் குறைக்க உதவும்.
    • வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது.

    உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் விதவிதமானவை. அவற்றில், எப்போதும் முதல் இடம் முளைகட்டிய பயறுகளுக்கே! விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள் இது. சாதாரணப் பயறுகளைவிட இவற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், தயாமின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.

    ஆரோக்கிய விரும்பிகள் இவற்றைத் தேடிச் சென்று வாங்குகிறார்கள். `சாதாரண பயறுகளைவிட முளைவிட்ட பயறுகள் அப்படி என்ன ஸ்பெஷல்?' இந்த ஒற்றைக் கேள்வியைக் கேட்டால், அதிலிருக்கும் சத்துக்கள், கிடைக்கும் பலன்கள், அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

    பலன்கள்:

    * முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

    * வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    * இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

    * அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன..

    * முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்..

    * இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients), சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்து, செல் பாதிப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது.

    * அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது.

    * இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. `அனீமியா' என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது. உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, நடுக்கத்தைச் சரிசெய்கிறது.

    முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை (Sprouted grains) வேக வைத்து சாப்பிடலாம் .

    சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் (Cereals) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

    முளைகட்டிய தானியங்களை நேரடியாக சாப்பிடுவதென்றால் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனெனில், இது செரிமானம் அடைவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் வயிறு உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், ஜீரணம் ஆகாமல் அடிக்கடி ஏப்பம் வருதல், சில நேரங்களில் வயிறு இரைந்து பேதி செல்லல் போன்றவைகள் ஏற்படலாம். அதனால் முளைகட்டிய தானியங்களை லேசாக வேகவைத்து சாப்பிட்டால் ஒருவர் 50 கிராம் அளவு வரை சாப்பிடலாம்.குறிப்பாக முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிட காலை நேரம் உகந்தது. மாலை வேளையிலும் தேநீர் சாப்பிடும் நேரத்தில் உட்கொள்ளலாம்.

    • முதுகுவலியை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது.
    • இயல்பான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம்.

    ஐ.டி.துறையில் வேலை செய்யும் பலர், இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதுடன் முதுகுவலியையும் உணர்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே கவனிப்பது நல்லது. மேலும் இயல்பான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமாகவே, ஆரம்ப கால முதுகுவலியை விரட்டலாம். இதோ அதற்கான சில வழிகாட்டுதல்கள்...

    பால் பொருட்கள் : கால்சியம் குறைபாடு எலும்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உயிரணுக்களுக்கு எரிபொருளாக உதவுவதோடு, முதுகுவலிக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படும். எனவே பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்களை, அன்றாட உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.

    புரதம் நிறைந்த உணவு : தினை, உளுத்தம் பருப்பு, பீன்ஸ், எள் போன்றவை புரதச்சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. அவை முதுகுவலி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை சரிசெய்து விரைவாக குணமடைய உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது.

    பழங்கள் : புளூபெர்ரி, அன்னாசி மற்றும் திராட்சை போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட பழங்கள் உங்கள் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஏனெனில் அவை வலி நிவாரணியாகவும், முதுகுவலியை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் எல்லாவற்றையும் போலவே, அளவோடு சாப்பிடும்போது பலன் அதிகபட்சமாக இருக்கும்.

    மூலிகைகள் : இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இலவங்கப்பட்டை, துளசி போன்றவற்றிலும் உள்ளது. நாம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களான மஞ்சள் போன்றவை வலியைக் குறைத்து நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. அவற்றை மிதமாக உட்கொள்வது அவசியம்.

    பச்சை காய்கறிகள் : வைட்டமின்-சி மற்றும் பி-12 நிறைந்த சில காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய், கீரை, புரோக்கோலி போன்றவற்றால் முதுகெலும்பு வலுப்பெறுகின்றன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் சேதமடைந்த செல்களை சீரமைக்கவும் உதவும்.

    ×