search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைத்து"

    • காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் 3 உண்டியல்கள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை‌ கோம்பை அடிவாரத்தில் முத்து மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில் ஆகிய 2 கோவில்கள் உள்ளன. சித்திரை மாதத்தில் முத்து மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றி கிடாவெட்டி வழிபடுவது வழக்கம். இதேபோல் ஆடி 18 அன்று முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி வழிபட்டு வருகின்றனர்.

    முத்து மாரியம்மன் கோவிலில் 1 உண்டியல் மற்றும் முனியப்பன் கோவிலில் 2 உண்டியல்கள் உள்ளன. நேற்று இங்கு பூஜை முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் 3 உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    3 உண்டியல்களிலும் ரூ 20 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்திருக்கும் என தெரிகிறது. காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலில் 3 உண்டியல்கள் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

    பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போனது.
    • கண்காணிப்பு காமிராவில் பதிவான கொள்ளையர் உருவத்தை வைத்து விசாரணை நடந்த வருகின்றது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னுசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18- ந் தேதி இரவு 10 மணி அளவில் தனது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தர்மபுரி மாவட்டம் அரூரில் நடந்த உறவினர் வீட்டு காதுகுத்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார்.

    பின்னர் விழா முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது துணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த ரூ.50,000 பணம், அரை பவுன் மோதிரம், 1 விவோ செல்போன் ஆகியன திருட்டு போனது தெரியவந்தது.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் நோட்டமிட்டு வீடு புகுந்து செல்போன், பணம், நகைகள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணம் , செல்போன், நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் அந்த பகுதியில் நடமாடும் காட்சி கேமரா வில் பதிவாகி உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என போலீசார் தெரிவித்தனர். 

    பரமத்தி அருகே வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளத்தூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 78), வக்கீல்.

    இவர் கடந்த 9-ந் தேதி தனது தங்கையின் மகள் வீட்டு திருமணத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டு மீண்டும் 10-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் வீடு புகுந்து கைவரிைச காட்டி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெயராஜ் பரமத்தி போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை மெயின் கேட் அருகே செங்காட்டு முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கமாக நேற்று பூஜை நடைபெற்று இரவு அனைவரும் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை பூஜை செய்வதற்காக பொதுமக்கள் கோயிலுக்கு சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சேலம் இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றது யார் என்பதைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×