என் மலர்
உள்ளூர் செய்திகள்

முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
முனியப்பன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை மெயின் கேட் அருகே செங்காட்டு முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கமாக நேற்று பூஜை நடைபெற்று இரவு அனைவரும் சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை பூஜை செய்வதற்காக பொதுமக்கள் கோயிலுக்கு சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் சேலம் இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றது யார் என்பதைக் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






