search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டத்தில்"

    • வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. பலத்த சூறாவளி காற்றால் தாளவாடி பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.

    ஆனால் மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதேப்போல் வரட்டுப்ப ள்ளம், பவானி, நம்பியூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    வரட்டுபள்ளம்-21.60, பவானி-14, ஈரோடு-9.50, நம்பியூர்-2, குண்டேரி ப்பள்ளம்-2.

    • வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஈத்கா தொழுகை மைதானத்தில் முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஈகை திருநாளை கொண்டாடும் வகையில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    பக்ரீத் பண்டிகையை யொட்டி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் இன்று காலை ஏராளமான முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதேபோல ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிவாசல், ரெயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பா ளையம் பள்ளிவாசல், ஓடைப்பள்ளம், கருங்கல்பா ளையம், எல்லப்பாளையம், கொக்கராயன்பேட்டை, கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பாநகர், பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார்தோ ட்டம்,

    வி.வி.சி.ஆர்., திண்டல், ஆர்.என்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. பெரியார் நகர் பகுதியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போல கோபி, சத்தி, பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி உள்பட மாவட்டம் முழு வதும் 150-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்ற தோடு, ஈகை திருநாளை கொண்டாடும் வகையில், ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    இதேபோல் அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்து ள்ள மஜீதேனூர் பள்ளி வாசலில்இன்று காலை 7.30 மணி அளவில் அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டு ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமி யர்கள் சிறப்பு தொழுகைகள் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
    • இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழக சட்டசபையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் மது கடைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பகுதியில் உள்ள மது கடைகள், மத வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதேபோல் வருமானம் குறைவாக உள்ள கடைகள், பணியாளர்கள் எண்ணி க்கை குறைவாக உள்ள கடைகள், அருகருகே இருக்கும் கடைகள்.

    இது மட்டும் இல்லாமல் மது கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார் கூறப்பட்ட கடைகள் ஆகிய வற்றையும் கணக்கெடுப்பின் பணியின் போது அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன்படி எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்ற பட்டியலை ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அதிகாரி கள் சேகரித்தனர். அதன் பிறகு இது குறித்து ஆலோசி க்கப்பட்டது. இதில் இறுதியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்ப டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ஈரோடு மாநகரில் ஈரோடு ரெயில் நிலையம் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை, அகில் மேடு வீதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், சம்பத் நகரில் உள்ள ஒரு கடை, சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு கடை, சென்னி மலை ரோட்டில் உள்ள ஒரு கடை, கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஒரு கடை உள்பட மாநகர் பகுதியில் 8 கடைகளும், இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள 16 கடைகள் என 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் அருகருகே இருக்கும் மற்ற மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரசின் இந்த நட வடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்க ளும் வரவேற்பு தெரிவித்து ள்ளனர். 

    • இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.

    இ-சேவைமையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்தி ருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதே இன் நோக்கமாகும்

    இத்திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தொழில்முனைவோர் https://tnesevai.tn.gov.in/ (அல்லது) (https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    விண்ணப்பதாரர்கள் வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புற த்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறை யில் செலுத்தப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களுக்கு ரியபயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயி லாக வழங்கப்படும்.

    மேலும் அருகே உள்ள இ-சேவைமையங்களின் தகவல்களை "Mugavari" ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.inஇணைய தளத்தில் காணலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவி த்துள்ளார்.

    • திம்பம் மலைப்பகுதியில் சிறப்பு இலக்கு படை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யனூர் வனப்பகுதியில் ஏற்கனவே அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதியில் 2-வதாக சிறப்பு இலக்கு படை (அதிரடிப்படை) முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி ப்படை முகாமை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து இன்று காலை திம்பம் அதிரடி ப்படை முகாம் அலுவல கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு இலக்கு படை காவல்துறை தலைவர் முருகன், இலக்கு படை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இலக்கு படை சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இலக்கு படை போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    திம்பம் சிறப்பு இலக்கு படையில் இலக்கு படை இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் தலைமையில் 30 பேர் கொண்ட போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் திம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,229 மாணவர்களும், 12,428 மாணவிகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 24,657 பேர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிந்து வினாத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்ததையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 11,287 மாணவர்களும், 12, 022 மாணவிகளும் என மொத்தம் 23,309 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். மாநில அளவில் ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாணவர்கள் 92.30 சதவீதம் பேரும், மாணவிகள் 96.73 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று ள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 6,163 மாணவர்களும், 6,588 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 751 பேர் எழுதினர்.

    இதில் 5,452 மாணவர்களும், 6,242 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.71 ஆகும்.

    மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்கள் செல்போன்களிலும் தெரிந்து கொண்டனர். இன்னும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளியில் சென்று தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.

    • மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முழுவதும் வெயிலின் தாக்கம் இருந்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து ஆங்காங்கே இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக தாளவாடி அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தாலும், வெப்ப சலனம் அதிகமாக காணப்பட்டது. மாலை 5 மணிஅளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணிநேரம் ஈரோடு மாநகர் பகுதியில் கனமழை கொட்டியது.

    வீரப்பன்சத்திரம், பஸ்நிலையம், பெரியவலசு, பன்னீர்செல்வம் பூங்கா, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், ரங்கம்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, பெருந்துறைரோடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதேபோல் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது.

    பலத்த மழை காரணமாக ஈரோடு நாடார்மேடு கெட்டிநகர் பகுதியில் சாஸ்திரிநகர் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் மின் வயர்களும் அறுந்து விழுந்ததால் அந்த பகுதியில் மாலை 6 மணிஅ ளவில் இருந்து மின் வினியோகம் துண்டித்தது. நள்ளிரவிலும் மின் வினியோகம் சரி செய்யப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதேபோல் ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டு பின்பகுதியில் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.

    இதேபோல் மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    பவானியில் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தாளவடியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் தாளவாடி மலைப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    மாவட்டத்தின் முக்கிய அணைப்பகுதிகளான வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம், பவானிசாகர், கொடிவேரி அணைப்பகுதி போன்றவற்றில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 3 மணியிலிருந்து 4 மணி வரை ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது .அப்போது மின்னல் தாக்கியதில் புஞ்சைபுளியம்பட்டி அருகே பொன்னம்பாளையத்தில் உள்ள பழமையான மதிப்பாபுரி அம்மன் கோவில் கோபுரம் சேதம் அடைந்தது.

    மேலும் கோபுரத்தில் உள்ள சில சாமி சிலைகளும் சேதம் அடைந்தது. மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கிய நாள் முதல் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-54, தாளவாடி - 34.2, ஈரோடு - 23, பவானி - 10.8, குண்டேரி பள்ளம் - 8.2, வரட்டுபள்ளம் - 6.8, சென்னிமலை - 6.4, கோபி - 4.2, பெருந்துறை - 4, எலந்தகுட்டைமேடு-3.2, கொடிவேரி அணை - 3, சத்தியமங்கலம் - 2, பவானிசாகர் - 1.8.

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 22923 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
    • இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 10753 மாணவர்களும், 12170 மாணவிகளும் என மொத்தம் 22923 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10353 பேரும், மாணவிகளில் 11878 பேரும் என மொத்தம் 22231 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.98 சதவீத தேர்ச்சி ஆகும்.

    ஈரோடு மாவட்டத்தில் 96.28 மாணவர்களும், 97.60 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    அரசு பள்ளிகளில் 5190 மாணவர்களும் 6726 மாணவிகளும் என மொத்தம் 11916 பேர் தேர்வு எழுதியதில் மாணவர்கள் 4836 பேர் தேர்சி அடைந்து உள்ளனர்.

    மாணவிகள் 6452 தேர்ச்சி அடைந்து உள்ளனர். மொத்தம் 11288 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.

    • ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நேற்று முன்தினம் முழுவதும் மழை பெய்ய வில்லை.

    இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. மாலை 5 மணிக்கு பிறகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் 3-வது அகில் மேடு வீதியில் உள்ள டிரான்ஸ்பாரம் தீப்பிடித்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது.

    இதேபோல் ஸ்டார் தியேட்டர் அருகே உள்ள சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின்சார கசிவு ஏற்பட்டு மாட்டு வண்டியில் இருந்த மாடு மீது மின்சாரம் பாய்ந்து இறந்தது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக கோடை மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகின்றது. இதனால் நிலங்களில் உழவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் நேற்று மாலை மாவட்டம் முழுவதும் கோடை மழையானது கொட்டித்தீர்த்தது.

    அக்னி நட்சத்திரம் தாக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி காணப்பட்டது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 109 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டினர்.

    இந்த நிலையில் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழையானது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சோலார், வெண்டி பாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு:

    ஈரோடு-68, கோபி-12.2, பவானி-20, பெருந்துறை-24, சத்தி-2, தாளவாடி-6, நம்பியூர்-24, கொடுமுடி-22.2, கவுந்தப்பாடி-13.2, சென்னிமலை-5, எலந்தைகுட்டை மேடு-41,

    பவானிசாகர்-15.6, கொடிவேரிஅணை-4, குண்டேரிப்பள்ளம்-2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்து மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.69 ஆகும்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு விரதம் இருந்தனர்.

    30 நாட்களாக விரதம் இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களது ஒரு வருட சேமிப்பில் இரண்டரை சதவீதம் ஏழை மக்களுக்காக ஜகாத் எனும் இஸ்லாமிய வரியை செலுத்துவார்கள்.

    அதனைத்தொடர்ந்து இன்று ரம்ஜான் பண்டி கையையொட்டி காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தொழுவதற்கு முன்பு ஏழை மக்களின் வீட்டிற்கு சென்று ஒரு நபருக்கு 90 ரூபாய் என்ற அடிப்படையில் பித்ரா என்னும் வரியை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ரம்ஜான் சிறப்பு தொழு கையில் பங்கேற்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஈத்கா மைதானங்களில் இன்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 240 -க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் இன்று காலை ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட அரசு தலைமை ஹாஜி முகமது ஜிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஏராளமான சிறுவர்களும் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதற்காக வ.உ.சி. மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது.

    இதேபோல் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்தது.

    இதில் ஈரோடு பெரியார் நகரில் நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பிரியா ணியை தங்களது உறவினர்க ளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். கோபியில் ஈதுஹா பள்ளி வாசலிலும், சாமிநாதபுரம் பள்ளிவாசலி லும் ஊர்வ லமும், சிறப்பு தொழுகையும் நடை பெற்றது. இஸ்லாமி யர்கள் தொழுகை முடிந்தவு டன் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து க்களை பரிமாறிக் கொண்ட னர்.

    அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இருந்து அந்தியூர் பெரிய ஏரி சாலையில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்திற்கு இஸ்லாமியர்கள் டாக்டர்.சாகுல் ஹமீது தலைமையில், சையத் சையது கவுஸ் இமாம் முன்னிலையில் ஊர்வ லமாக சென்று ரம்ஜான் சிறப்பு தொழுகை செய்த னர்.

    பின்னர் கட்டி தழுவி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    சத்தியமங்கலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் சத்தியமங்கலம் மணி கூண்டு திடலில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்ப ட்டோர் புறப்பட்டு ஊர்வல மாக சென்று பழைய மார்க்கெட் வீதி, கோட்டு வீராம்பாளையம் ஆகிய முக்கிய இடங்களில் ஊர்வல மாக சென்று கோட்டு வீராம்பாளையம் அருகே உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    • ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான வரும் 22-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    கூட்டம் நடை பெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    கிராம சபைக் கூட்டங்க ளில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 28.2.2023 வரை) குறித்து விவாதித்தல்,

    கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோ கத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 2021-22-ம் ஆண்டு மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் கிராம ஊராட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட ஊரக நீர்நிலை களில் மேற் கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் 2023-24-ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம்-2-ன் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊரக நீர்நிலைகளின் விவரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்தும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் சார்ந்த அனைத்து கட்டிடங்க ளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்து வதற்கான பயன் மற்றும் விழிப்புணர்வு குறித்து விவாதித்தல்.

    கிராம வளர்ச்சி திட்டம் இறுதி செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதார திட்டத்தின் கீழ் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை முழுமையாக தடை செய்தல்,

    பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல், அனைத்து வீடுகளிலும் இருந்து தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவு களை மட்டுமே தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரம் செய்தல்,

    நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரச்சாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் நிலைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுதல்.

    அனைத்து வீடுகளிலும் இரு உறிஞ்சுக்குழி கழிப்பறை முறையினை பயன்படுத்த வலியுறுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை தொடர்ந்து தக்க வைத்தல்,

    வீடுகளில் வெளியேறும் சாம்பல் நீரினை முறையே தனி நபர் உறிஞ்சுக்குழி அமைத்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல்,

    பொது இடங்களில் எச்சில் துப்பு வது சுகாதாரத்திற்கு கேடானது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட கிராம ஊராட்சியினை 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என கிராம சபையில் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டு கிராம ஊராட்சித் தலை வரால் சான்றிதழ் வழங்குதல்,

    ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கிராம குடிநீர் உட்கட்ட மைப்பு பணிகளுக்கு 10 சதவீத சமூக பங்களிப்பினை வழங்குவதன் மூலம் கிராம ஊராட்சியின் குடிநீர் விநியோக பணிகளில் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல், கிராம குடிநீர் விநியோக செயல்திட்டத்தினை கிராம சபை உறுப்பினர்களிடம் கலந்தாய்வு செய்து கிராம சபையின் ஒப்புதல் வழங்குதல்,

    கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல் படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமை யான விவரத்தினை கிராம சபையில் விரிவாக எடுத்து ரைத்து இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,

    பயிற்சி பெற்ற கிராம மகளிர் சுய உதவி குழுப் பெண்களை கொண்டு, ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ள கள ஆய்வு கருவிகளை பயன்ப டுத்தி 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து உரிய பதிவேட்டில் பதிவு செய்வ தை உறுதி செய்தல்,

    கிராம ஊராட்சியினை 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என்ற நிலைக்கு மேம்படுத்த மேற்கொள்ளப் பட வேண்டிய அனைத்து பணிகளும் கட்டாயம் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தில் இடம் பெறுவதை உறுதி செய்தல், கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்,

    அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல், குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணி களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் நிர்ண யம் செய்யப் பட்டுள்ள மாதாந்திர கட்டணம் ரூ.30-க்கு குறையாமல் குடிநீர் கட்டணம் செலுத்த ப்படு வதை உறுதி செய்தல்,

    அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் குளோரின் கலப்பான் கருவிகளை பொருத்தி குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறை யாக நடைபெறு வதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் அலுவ லர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான அலுவ லர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
    • தேர்வு அறைகளில் கண்காணிக்க 150 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கி வரும் ஏப்ரல் 5-ந் தேதி முடிவடைகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 221 பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 948 மாணவ, மாணவிகள் 105 மையங்களில் எழுதுகின்றனர். இதேபோல் தனித்தேர்வ ர்கள் 496 பேர் பொதுத்தேர்வு எழுதுவதற்கு 3 தனி மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன.

    முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. தேர்வு வினாத்தாள்கள் 7 கட்டுப்பாடு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    இன்று காலை மாணவ-மாணவிகள் சீக்கிரமாக எழுந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள கோவில்க ளுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் பள்ளிக்கு சென்று சிறிது நேரம் மீண்டும் படித்தனர்.

    இதனையடுத்து ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு தேர்வு எழுத சென்றனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.

    முதல் 10 நிமிடங்கள் வினா தாளை படிப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரி பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.

    தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கவும், கண்காணிக்கவும் 105 முதன்மை கண்காணிப்பாளர்கள், 110 துறை அலுவலர்கள், 1,447 அறை கண்காணிப் பாளர்கள், 150 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இந்த குழுவினர் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக ஸ்கிரைப் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    தேர்வு மையங்களில் குடிநீர், தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவை செய்யப்பட்டிருந்தது. விடைத்தாள்களை பாது காப்பாக வைப்பதற்காக மாவட்டத்தில் 4 பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    ×