search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allowed to operate in"

    • இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.

    இ-சேவைமையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்தி ருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதே இன் நோக்கமாகும்

    இத்திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தொழில்முனைவோர் https://tnesevai.tn.gov.in/ (அல்லது) (https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    விண்ணப்பதாரர்கள் வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புற த்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறை யில் செலுத்தப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களுக்கு ரியபயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயி லாக வழங்கப்படும்.

    மேலும் அருகே உள்ள இ-சேவைமையங்களின் தகவல்களை "Mugavari" ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.inஇணைய தளத்தில் காணலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவி த்துள்ளார்.

    ×