search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
    X

    ஈரோடு சடையப்பா ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் நேற்று பெய்த மழை நீர் குளம்போல் தேங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

    • வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. பலத்த சூறாவளி காற்றால் தாளவாடி பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.

    ஆனால் மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதேப்போல் வரட்டுப்ப ள்ளம், பவானி, நம்பியூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    வரட்டுபள்ளம்-21.60, பவானி-14, ஈரோடு-9.50, நம்பியூர்-2, குண்டேரி ப்பள்ளம்-2.

    Next Story
    ×