search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்ரீத் சிறப்பு தொழுகை"

    • வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஈத்கா தொழுகை மைதானத்தில் முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஈகை திருநாளை கொண்டாடும் வகையில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    பக்ரீத் பண்டிகையை யொட்டி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் இன்று காலை ஏராளமான முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதேபோல ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிவாசல், ரெயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பா ளையம் பள்ளிவாசல், ஓடைப்பள்ளம், கருங்கல்பா ளையம், எல்லப்பாளையம், கொக்கராயன்பேட்டை, கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பாநகர், பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார்தோ ட்டம்,

    வி.வி.சி.ஆர்., திண்டல், ஆர்.என்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. பெரியார் நகர் பகுதியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போல கோபி, சத்தி, பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி உள்பட மாவட்டம் முழு வதும் 150-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்ற தோடு, ஈகை திருநாளை கொண்டாடும் வகையில், ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    இதேபோல் அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்து ள்ள மஜீதேனூர் பள்ளி வாசலில்இன்று காலை 7.30 மணி அளவில் அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டு ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமி யர்கள் சிறப்பு தொழுகைகள் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×