என் மலர்
நீங்கள் தேடியது "Plus-2 exam in"
- ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 22923 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
- இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 10753 மாணவர்களும், 12170 மாணவிகளும் என மொத்தம் 22923 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
இதில் மாணவர்களில் 10353 பேரும், மாணவிகளில் 11878 பேரும் என மொத்தம் 22231 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.98 சதவீத தேர்ச்சி ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் 96.28 மாணவர்களும், 97.60 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அரசு பள்ளிகளில் 5190 மாணவர்களும் 6726 மாணவிகளும் என மொத்தம் 11916 பேர் தேர்வு எழுதியதில் மாணவர்கள் 4836 பேர் தேர்சி அடைந்து உள்ளனர்.
மாணவிகள் 6452 தேர்ச்சி அடைந்து உள்ளனர். மொத்தம் 11288 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.73 சதவீத தேர்ச்சி ஆகும்.






