search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம சபைக் கூட்டங்கள்"

    • ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
    • கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்கும் பொருட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான வரும் 22-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    கூட்டம் நடை பெறும் இடம், நேரம் ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.

    கிராம சபைக் கூட்டங்க ளில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் (1.4.2022 முதல் 28.2.2023 வரை) குறித்து விவாதித்தல்,

    கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை கிராம சபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோ கத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 2021-22-ம் ஆண்டு மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில் கிராம ஊராட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட ஊரக நீர்நிலை களில் மேற் கொள்ளப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் மற்றும் 2023-24-ம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம்-2-ன் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள ஊரக நீர்நிலைகளின் விவரங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்தும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் சார்ந்த அனைத்து கட்டிடங்க ளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்து வதற்கான பயன் மற்றும் விழிப்புணர்வு குறித்து விவாதித்தல்.

    கிராம வளர்ச்சி திட்டம் இறுதி செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதார திட்டத்தின் கீழ் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை முழுமையாக தடை செய்தல்,

    பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல், அனைத்து வீடுகளிலும் இருந்து தரம் பிரிக்கப்பட்ட திடக்கழிவு களை மட்டுமே தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரம் செய்தல்,

    நம்ம ஊரு சூப்பரு சிறப்பு பிரச்சாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் நிலைத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுதல்.

    அனைத்து வீடுகளிலும் இரு உறிஞ்சுக்குழி கழிப்பறை முறையினை பயன்படுத்த வலியுறுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையினை தொடர்ந்து தக்க வைத்தல்,

    வீடுகளில் வெளியேறும் சாம்பல் நீரினை முறையே தனி நபர் உறிஞ்சுக்குழி அமைத்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல்,

    பொது இடங்களில் எச்சில் துப்பு வது சுகாதாரத்திற்கு கேடானது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட கிராம ஊராட்சியினை 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என கிராம சபையில் தீர்மா னம் நிறை வேற்றப்பட்டு கிராம ஊராட்சித் தலை வரால் சான்றிதழ் வழங்குதல்,

    ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் கிராம குடிநீர் உட்கட்ட மைப்பு பணிகளுக்கு 10 சதவீத சமூக பங்களிப்பினை வழங்குவதன் மூலம் கிராம ஊராட்சியின் குடிநீர் விநியோக பணிகளில் அனைவரும் பங்கேற்பதை உறுதி செய்தல், கிராம குடிநீர் விநியோக செயல்திட்டத்தினை கிராம சபை உறுப்பினர்களிடம் கலந்தாய்வு செய்து கிராம சபையின் ஒப்புதல் வழங்குதல்,

    கிராம ஊராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாக செயல் படுத்தப்படும் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமை யான விவரத்தினை கிராம சபையில் விரிவாக எடுத்து ரைத்து இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,

    பயிற்சி பெற்ற கிராம மகளிர் சுய உதவி குழுப் பெண்களை கொண்டு, ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டுள்ள கள ஆய்வு கருவிகளை பயன்ப டுத்தி 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்து உரிய பதிவேட்டில் பதிவு செய்வ தை உறுதி செய்தல்,

    கிராம ஊராட்சியினை 'வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி" என்ற நிலைக்கு மேம்படுத்த மேற்கொள்ளப் பட வேண்டிய அனைத்து பணிகளும் கட்டாயம் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தில் இடம் பெறுவதை உறுதி செய்தல், கிராம ஊராட்சியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள்,

    அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்தல், குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணி களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசால் நிர்ண யம் செய்யப் பட்டுள்ள மாதாந்திர கட்டணம் ரூ.30-க்கு குறையாமல் குடிநீர் கட்டணம் செலுத்த ப்படு வதை உறுதி செய்தல்,

    அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளிலும் குளோரின் கலப்பான் கருவிகளை பொருத்தி குடிநீரில் குளோரின் கலப்பதை உறுதி செய்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப் பொருட்கள் விவாதிக்கப்படும்.

    அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறை யாக நடைபெறு வதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் அலுவ லர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான அலுவ லர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ×