search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து தொடர்"

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 19.5 ஓவரில் 101 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    லக்னோ:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 0-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், 2-வது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டு கைப்பற்றினார்.

    இதையடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சுப்மன் கில் 11 ரன்னும், இஷான் கிஷன் 19 ரன்னும், ராகுல் திரிபாதி 13 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார்.

    இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன்மூலம் நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

    • இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

    லக்னோ:

    இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. ஒருநாள் தொடரையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

    முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது.

    177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றிபெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் காண்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளது.

    தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
    • டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

    அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இந்த அணியின் வெற்றிக்காக போராடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி வீரர்கள் யாரும் படைத்திடாத தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக 5-வது ஓவரில் மிரட்டலை கொடுத்த பின் ஆலனை 35 (23) ரன்களில் அவுட்டாக்கிய அவர் அடுத்து வந்த மார்க் சாப்மேன் கொடுத்த கேட்ச்சை சூப்பர் மேன் போல தாவி பிடித்து டக் அவுட்டாக்கினார். அத்துடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் வெறித்தனமாக போராடிய அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

    இதற்கு முன் தனது கேரியரில் 12 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வெறும் 47 ரன்கள் மட்டும் எடுத்த அவர் இந்த ஒரே போட்டியில் 50 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடினார். அதை விட இப்போட்டியில் மொத்தமாக 2 விக்கெட், 1 கேட்ச், 50 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் குறைந்தது 50 ரன்கள், 1 விக்கெட், 1 கேட்ச் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன் யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வேறு எந்த இந்திய வீரரும் இப்படி ஒரு சாதனையை படைத்ததே கிடையாது. இதுவரை ஜடேஜா கேரியரில் அரை சதம் அடித்ததில்லை. அதே போல் பேட்டிங் பந்து வீச்சில் அசத்தினாலும் யுவராஜ் சிங், பாண்டியா ஆகியோர் இதற்கு முன் கேட்ச் பிடித்ததில்லை. அந்த வகையில் வாஷிங்டன் சுந்தரை நினைத்து தமிழக ரசிகர்கள் மிகவும் பெருமை அடைகிறார்கள்.

    • ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது.
    • டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது.

    ராஞ்சி:

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது வாஷிங்டன் சுந்தர் கேள்வி ஒன்றுக்கு கடுப்பாக்கி பதிலளித்தார்.

    இது குறித்து செய்தியாளரிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர்:-

    இது ஏதேனும் ஒரு போட்டியில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது. நாங்கள் செய்த தவறை சரி பார்ப்போம். ஆனால் என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு போட்டி எப்போதாவது நிகழும். நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும்.

    ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தை நீங்கள் எப்போது ஆவது விளையாட நேரிடும். எங்கள் அணி வீரர்கள் இதுபோன்ற ஆடுகளத்தில் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி இருக்கிறார்கள். இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார்.

    வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ஏன் நியூசிலாந்து அணி ராய்ப்பூரில் 108 ரன்கள் ஆட்டம் இழந்தார்களே?

    இதன் காரணமாக நியூசிலாந்து அணி டாப் ஆர்டரை மாற்றினார்களா என்ன? இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது போன்ற மோசமான நாட்களில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். விளையாட்டில் எந்த அணியும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஒரே நாளில் 22 வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது. நாங்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டு தான் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறோம்.

    இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

    • இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களை எடுத்தனர்.
    • நியூசிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று துவங்கியது. முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 176 ரன்களை குவித்து இருந்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், அர்தீப் சிங், சிவம் மாவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    177 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் முறையே 4 மற்றும் 7 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறி கொடுக்க இந்தியா துவக்கத்திலேயே மூன்று விக்கெட்களை இழந்தது.

    சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியின் ஜகோப் டஃபி, மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். நிதானமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 20 பந்துகளில் 21 ரன்களை அடித்து பிரேஸ்வெல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

    இதையடுத்து இந்தியா 100 ரன்களை குவிக்கும் முன் ஐந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 18 ஓவர்கள் முடிவில் 127 ரன்களை எடுத்த இந்தியா எட்டு விக்கெட்களை இழந்தது. கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை போராடினார். இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களில் 11 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் லூகி ஃபெர்குசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஜகோப் டஃபி, இஷ் சோதி ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். 

    • துவக்க வீரரான ஃபின் ஆலன் வாஷிங்டன் சுந்தர் பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
    • இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. நியூசிலாந்து அணியில் துவக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் 35 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை வாஷிங்கடன் சுந்தரிடம் பறிகொடுத்தார். இரண்டாவது வீரராக களமிறங்கிய தேவன் கான்வே நிதானமாகி ஆடி அரைசதம் அடித்தார். 52 ரன்கள் அடித்த நிலையில் அர்தீப் சிங் பந்தில் தேவன் கான்வே ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல், தன் பங்கிற்கு 30 பந்துகளில் 59 ரன்களை குவித்தார்.

    20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், அர்தீப் சிங், சிவம் மாவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • ஏற்கனவே கடந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார்.
    • மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்காக இந்திய அணி சேர்க்கப்பட்டுள்ள இளம் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி உள்ளார்.

    இந்த தொடருக்கு முன்னதாக மகராஷ்டிரா - ஹைதராபாத் அணிகள் மோதிய ராஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் 8, 0 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டிக்கு பின்னர் அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.

    காயம் காரணமாக ஏற்கனவே கடந்த ஆண்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வாய்ப்பை இழந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அணியில் இடம் கிடைத்திருக்கும் இந்த சூழலில் மீண்டும் அவர் வாய்ப்பை இழக்கிறார். 

    • நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா டி20 அணிக்கு தேர்வாகி உள்ளார்.
    • சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

    ராஞ்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டி தொடரை இந்தியா முழுமையாக (3-0) கைப்பற்றியது.

    அடுத்து இந்தியா-நியூசிலாந்து அணிகள் மூன்று ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது.

    இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்ஸ்மேன் பிரித்வி ஷா அணிக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    இது தொடர்பாக கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த தொடரில் அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார். பிரித்விஷா வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

    முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களுக்கு (முகமது ஷமி, முகமது சிராஜ்) ஓய்வு கொடுத்து இருப்பதால் எங்களுக்கு நெருக்கடி எதுவும் இல்லை.

    புதிய பந்தில் பந்து வீசுவதை நான் எப்போதும் ரசித்து வருகிறேன். பல ஆண்டுகளாக நான் வலைகளில் பந்து வீசும் போதெல்லாம் புதிய பந்தை தேர்வு செய்கிறேன்.

    கடந்த ஆட்டத்தில் இரண்டு முக்கிய பந்து வீச்சாளர்கள் ஓய்வில் இருந்ததால் தொடக்கத்தில் நான் பந்து வீச தயாராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால் அது எப்போதும் அழுத்தமாக இருந்ததில்லை. பயிற்சியில் ஈடுபட்ட நாங்கள் டோனியை சந்தித்தோம். அவரை சந்தித்து பேசியது உற்சாகமாக இருந்தது.

    நாங்கள் ஒன்றாக விளையாடிய போது அவரிடம் இருந்து நிறைய கற்று கொண்டேன்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.

    • இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • இரு அணிகளிடையிலான முதல் டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.

    ராஞ்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 டி20 தொடரின் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    டி20 போட்டியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் ஜொலிக்கிறார். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தால் கட்டுப்படுத்துவது கடினம். ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. பந்து வீச்சில் அர்தீப்சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

    நியூசிலாந்து டி20 அணிக்கு சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ராஞ்சியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் செய்துள்ளது.
    • ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 295 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்களை வாரி வழங்கினார். ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    இந்தியா தரப்பில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் (2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 19 சிக்சர்) செய்துள்ளது. இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இங்கு பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.

    • சுப்மன் கில்லின் பேட்டிங் அணுகுமுறை நன்றாக இருந்தது.
    • அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம்.

    இந்தூர்:

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது.

    இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன் குவித்தது.

    தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் அடித்தனர். சுப்மன் கில் 78 பந்தில் 112 ரன்னும் (13 பவுண்டரி, 5 சிக்சர்), ரோகித் சர்மா 85 பந்தில் 101 ரன்னும் (9 பவுண்டரி, 6 சிக்சர்), ஹர்த்திக் பாண்ட்யா 38 பந்தில் 54 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். ஜேக்கப் டபி, டக்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 41.2 ஓவர்களில் 295 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர் கான்வே சதம் அடித்தது பலன் இல்லாமல் போனது. அவர் 100 பந்தில் 138 ரன்னும் (12 பவுண்டரி, 8 சிக்சர்), சான்ட்னெர் 34 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டும், யசுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது. ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    கடந்த 6 ஆட்டங்களில் நாங்கள் எல்லா விஷயத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் பெஞ்சில் வைக்கப்பட்ட போது அதற்கான வாய்ப்பை பெற்றவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

    ஷர்துல் தாகூர் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அவரை சிலர் 'ஏ' மெஜிசியன் என்று அழைக்கிறார்கள். குல்தீப் யாதவ் ஒவ்வொரு முறையும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். ஒட்டு மொத்தத்தில் பந்து வீச்சாளர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டார்கள்.

    சுப்மன் கில்லின் பேட்டிங் அணுகுமுறை நன்றாக இருந்தது. இளம் வீரரான அவர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

    அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளோம். இந்த தொடர் அதிக வித்தியாசம் இருக்காது. ஆஸ்திரேலியாவை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    • நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தேவன் கான்வே 138 ரன்கள் குவித்தார்.
    • ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    இந்தூர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்து, 385 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 101 ரன்களும், ஷுப்மன் கில் 112 ரன்களும் விளாசினர்.

    இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் தேவன் கான்வே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். மறுமுனையில் ஹென்றி நிக்கோல்ஸ் 42 ரன்கள், டேரில் மிட்செல் 24 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். சதம் கடந்து முன்னேறிய தேவன் கான்வே 138 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல் 26 ரன்களிலும், சான்ட்னர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    41.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி 295 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

    இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றதால், மூன்று போட்டி கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது.

    ×