என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து தொடர்"
- இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.
- இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியது.
முன்னதாக ஒருநாள் தொடரின் போது நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட இந்திய ஜெர்சியை அவருக்கு வழங்கினார்.
இந்நிலையில் நான் வியந்து பார்க்கும் ஒருவராக விராட் கோலி இருப்பார் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலியின் கையொப்பமிட்ட ஜெர்சி நிச்சயமாக எனது அலுவலகத்தில் சட்டமிட்டு வைக்கப்படும். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அவர் ஒவ்வொரு நாளும் விளையாடும் விதத்திற்காக விராட் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. கடந்த பல ஆண்டுகளாக நான் வியந்து பார்க்கும் ஒருவராக அவர் நிச்சயமாக இருக்கிறார் என அவர் கூறினார்.
- இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்கள் குவித்தார்.
- அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்பின்பு பேசிய இஷான் கிஷன், "சொந்த மைல்கல் சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியம்; நீங்கள் ஒரு சாதனையை நெருங்கியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. விளையாடும்போது சிக்சருக்கு அடிக்கக்கூடிய பந்தாக இருந்தால் அடித்துவிட வேண்டும், அப்போது சொந்த சாதனைக்காக சிங்கிள் எடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.
- 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.
திருவனந்தபுரம்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதேபோல், நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
- நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில் சஞ்சுவை இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வழி விடுங்க.. சேட்டான தொந்தரவு பண்ணாதீங்க என சூர்யகுமார் யாதவ் கூறியபடியே சஞ்சுவை வரவேற்று செல்வார். இதனை சஞ்சு சாம்சன் சிரித்தப்படியே நடந்து செல்வார்.
கேரளா சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன.
- இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 48 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
முதல் 3 ஆட்டங்களில் அதிரடி பேட்டிங்கால் மிரட்டி தொடரை வசப்படுத்திய இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (171 ரன்), அபிஷேக் ஷர்மா (152 ரன்), இஷான் கிஷன் அசத்தி வருகிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வேகமாக மட்டையை சுழற்ற ஆசைப்பட்டு விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். நடப்பு தொடரில் 16 ரன்களே எடுத்து இருக்கும் அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்.
பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி முறையே 2, 3 விக்கெட்டுகளையே வீழ்த்தி உள்ளனர். கடந்த ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு அளிப்பட்டதால் வாய்ப்பு பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி திரும்பினாலும் ரவி பிஷ்னோய் இடத்தை தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை சொந்தமாக்கி விட்டதால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
நியூசிலாந்து அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி தடுமாறி வருகிறது. அவர்களது பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எப்போதாவது தான் எடுபடுகிறது. பேட்டிங்கில் கிளென் பிலிப்ஸ் (145 ரன்), மிட்செல் சான்ட்னெர், மார்க் சாப்மேனும் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சில் ஜேக்கப் டப்பி, சோதி தவிர மற்றவர்களின் செயல்பாடு மெச்சத்தக்க வகையில் இல்லை.
இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர முழு பலத்தையும் வெளிக்காட்டும். அதேநேரத்தில் தொடரை இழந்து விட்ட நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மூன்றில் வெற்றி கண்டுள்ளது. ஒன்றில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா அல்லது அர்ஷ்தீப் சிங்.
நியூசிலாந்து: டிவான் கான்வே, டிம் செய்பெர்ட், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், கைல் ஜாமிசன், மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும்.
- களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், துவக்க வீரர் சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டம் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மாவைப் பார்த்து அதே வேகத்தில் ஆட முயற்சிக்கக் கூடாது என்றும் மூத்த வீரர் ரகானே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிர்முனையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுவதைப் பார்த்து, சஞ்சு சாம்சன் தானும் அவரைப் போலவே வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார். தயவு செய்து அபிஷேக் சர்மா செய்வதை நீங்களும் செய்ய முயற்சிக்காதீர்கள். சஞ்சு சாம்சனுக்கு என்று தனித்திறமை உள்ளது.
அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அவர் தனது பாணியில் விளையாடி ரன்களைக் குவித்தார். அதைத் தான் இங்கேயும் செய்ய வேண்டும். அபிஷேக் சர்மாவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளாமல், தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும்.
இந்த நேரத்தில் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும். இந்தத் தொடர் முழுவதும் மற்றும் உலகக்கோப்பையிலும் நீங்கள்தான் துவக்க வீரர், உங்கள் இடத்திற்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.
இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், சஞ்சு சாம்சனுக்குப் பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவரது பாணியில் விளையாட அனுமதித்தால் அவர் நிச்சயம் ஒரு மேட்ச் வின்னராக மாறுவார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் எப்படி ஆடுவார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எடுத்த உடனே அதிரடியாக ஆடாமல், முதல் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் களத்தில் நிலைத்து நிற்க வேண்டும். களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.
என்று ரகானே கூறினார்.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் 3 போட்டிகள் முடிவில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி 28-ந் தேதி நடக்கவுள்ளது.
காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் திலக் வர்மா இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் அடுத்து வரும் 2 போட்டிகளில் திலக் வர்மா இடம் பெற மாட்டார் எனவும் அடுத்த இரு போட்டிகளுக்கும் இந்திய அணியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் பயணிப்பார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
விஜய் ஹசாரே டிராபியின் போது ஏற்பட்ட வயிற்றுத் தசைப்பிடிப்பு காரணமாக திலக் வர்மா இந்த மாத தொடக்கத்தில் ராஜ்கோட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வில் இருக்கும் அவர், காயத்தில் இருந்து மீள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைக்கு முன்பு அவர் முழு உடற்தகுதியை எட்டுவார் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயருக்கு, தற்போதைய தொடரில் இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023 டிசம்பருக்குப் பிறகு ஐயர் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.
- எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணி எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தை விதைத்து வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி ஒரு சாம்பியன் அணி. அவர்கள் பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்திய அணி தற்போது போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் மட்டுமல்லாமல், எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறது. இந்தத் தொடர் ஒரு ஆரம்பம்'மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் இன்னும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காமலேயே இந்தியா எளிதாக வெல்வது அணியின் திறமையைக் காட்டுகிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என கவாஸ்கர் கூறினார்.
மேலும் போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டல், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா நினைத்தால் இரண்டு அணிகளைக் களமிறக்கலாம். அப்படி இரண்டு அணிகள் விளையாடினாலும், அந்த இரண்டு அணிகளுமே நிச்சயம் முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெறும். அந்த அளவிற்கு அவர்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்" என்று புகழ்ந்தார்.
அதற்குச் சிரித்துக்கொண்டே சுனில் கவாஸ்கர், "உண்மையில் என்னைக் கேட்டால், அரையிறுதி மட்டுமல்ல, அந்த இரண்டு இந்திய அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கோப்பைக்காகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் என்று சொல்வேன்" என்று அதிரடியாகக் கூறினார். அதாவது இந்திய அணியின் முதல் தர அணியும், இரண்டாம் தர அணியும் மோதினாலே அது உலகக்கோப்பை இறுதிப்போட்டி போலத் தான் இருக்கும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
- இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 (5) என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.
அந்த வகையில் இரு நாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 9-வது தொடர் இதுவாகும். இந்த வகையில் பாகிஸ்தான் முதலிடத்தில் (10 தொடர் வெற்றி) உள்ளது.
இரு நாட்டு தொடருடன், 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையையும் சேர்த்தால் இந்திய அணி தொடர்ச்சியாக தனதாக்கிய 11-வது தொடராக இது அமையும்.
154 ரன் இலக்கை இந்திய அணி 60 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்துள்ளது. முழு உறுப்பினர் நாடுகள் இடையே நடந்த டி20 கிரிக்கெட்டில் 150 ரன்னுக்கு மேலான இலக்கை 10 ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்த முதல் அணி இந்தியா தான்.
- டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
- 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். இதன்மூலம் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதையடுத்து பேசிய அபிஷேக் ஷர்மா, "12 பந்துகளில் அரை சதம் என்ற யுவராஜின் சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றது" என்று தெரிவித்தார்.
டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
- 14 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து இந்தியா எளிதில் வெற்றி பெற்று டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.






