search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து தொடர்"

    • நியூசிலாந்து அணியை 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
    • ஆட்ட நாயகனாக சுபமன் கில்லும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்தது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி இளம் வீரர்களுடன் டி20 தொடரில் பங்கேற்றது.

    முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய இளம் படை அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது.

    235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

    இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. 2018-ல் சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இதனை தற்போது இந்திய அணி முறியடித்துள்ளது.

    ஆட்ட நாயகனாக சுபமன் கில்லும் தொடர் நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    • 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) சுப்மன் கில் சதம் அடித்து உள்ளார்.
    • விராட் கோலியின் அதிகபட்ச ரன்னையும் (ஒரு இன்னிங்ஸ்) சுப்மன்கில் முறியடித்தார்.

    அகமதாபாத்:

    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 126 ரன்னும் (12 பவுண்டரி, 7 சிக்சர்), ராகுல் திரிபாதி 22 பந்தில் 44 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி, மிச்சேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 12.1 ஓவரில் 66 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 168 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவின் சிறந்த வெற்றி யாகும்.

    டேரியல் மிச்சேல் அதிபட்சமாக 25 பந்தில் 35 ரன் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஹர்த்திக் பாண்ட்யா 4 விக்கெட்டும், அர்தீப்சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன்னிலும், லக்னோவில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று இருந்தது.

    ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்து இருந்தது.

    சதம் அடித்ததன் மூலம் சுப்மன்கில் புதிய சாதனை புரிந்தார். 20 ஓவர் போட்டியில் இளம் வயதில் செஞ்சூரி அடித்து அவர் இந்த சாதனையை புரிந்தார். 23 வயது 146 நாட்களில் சுப்மன்கில் சாதனை புரிந்தார். இதற்கு முன்பு சுரேஷ் ரெய்னா 23 வயது 156 நாட்களில் சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. அவரின் சாதனையை சுப்மன்கில் முறியடித்தார்.

    3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அவர் சதம் அடித்து உள்ளார். இதன் மூலம் ரெய்னா, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி ஆகியோர் வரிசையில் சுப்மன்கில் இணைந்தார். மேலும் விராட் கோலியின் அதிகபட்ச ரன்னையும் (ஒரு இன்னிங்ஸ்) சுப்மன்கில் முறியடித்தார். 

    • இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் விக்கெட்களை வீழ்த்தினார்.
    • இந்தியா சார்பில் ஹர்த்திங் பாண்டியா, உம்ரான் மாலிக், ஷிவம் மாவி சிறப்பாக பந்து வீசினர்.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 234 ரன்களை குவித்தது.

    இந்தியா சார்பில் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசினார். இவரை தொடர்ந்து ராகுல் திரிபாதி, கேப்டன் ஹர்த்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 33, 30 மற்றும் 24 ரன்களை எடுத்தனர். இதைத் தொடர்ந்து 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

    நியூசிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஃபின் ஆலென், தேவன் கான்வே தங்களின் விக்கெட்களை இழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன், கிலென் பிலிப்ஸ் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்த்திக் பாண்டியா பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி துவக்கத்திலேயே விக்கெட்களை கைப்பற்றினர்.

    இதன் காரணமாக வெற்றி இலக்கை துரத்த முடியாமலும், விக்கெட் சரிவை நிறுத்த முடியாமலும் நியூசிலாந்து அணி போராடியது. நியூசிலாந்து வீரர்கள் துவக்கத்திலேயே விக்கெட்களை இழக்க, அந்த அணியின் டேரில் மிட்செல் மட்டும் நிதானமாக ஆடி வந்தார். 12.1 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 66 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

    மூன்றாவது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்தியா சார்பில் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 4 விக்கெட்களையும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் ஷிவம் மாவி தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    • இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது.
    • இந்திய துவக்க வீரரான சுப்மன் கில் சதம் அடிக்க, இந்தியா 20 ஓவர்களில் 234 ரன்களை குவித்தது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்று பெற்றுள்ளன. இதனால் தொடரை யார் கைப்பற்றுவர் என்ற எதிர்பார்ப்பு இன்றைய போட்டியில் ஏற்பட்டு இருக்கிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பிரேஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்களை விளாசினார்.

    சுப்மன் கில்லுடன் ஆடிய ராகுல் திரிபாதி தன் பங்கிற்கு 22 பந்துகளில் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 24 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஐந்தாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 30 ரன்களை விளாசினார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்துள்ளது. இதை அடுத்து 235 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்க இருக்கிறது. 

    • இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு வெற்று பெற்றுள்ளன.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    மூன்றாவது டி20 போட்டிக்காக இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டு இருக்கிறார். நியூசிலாந்து அணியில் பென் லிஸ்டர் எனும் அறிமுக வீரர் களமிறங்குகிறார்.

    இந்திய அணி விபரம்:-

    1. சுப்மன் கில் 2. இஷான் கிஷன் 3. ராகுல் திரிபாதி, 4. சூர்யகுமார் யாதவ் 5. ஹர்த்திக் பாண்டியா, 6. தீபக் ஹூடா 7. வாஷிங்டன் சுந்தர் 8. ஷிவம் மாவி 9. குல்தீப் யாதவ் 10. உம்ரான் மாலிக், 11. அர்ஷ்தீப் சிங்

    நியூசிலாந்து அணி விபரம்:-

    1. ஃபின் ஆலென், 2. தேவன் கான்வே, 3. மார்க் சாப்மேன், 4. கிலென் பிலிப்ஸ், 5. டேரில் மிட்செல், 6. மைக்கேல் பிரேஸ்வெல், 7. மிட்செல் சாண்ட்னர், 8. இஷ் சோதி, 9. லோகி ஃபெர்குசன், 10. பென் லிஸ்டர், 11. பிளெயர் டிக்னர்

    • சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
    • இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வரும் சுப்மன் கில், டி20 போட்டிகளில் சுமாராகவே விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான கடந்த இரண்டு டி20 போட்டிகளில் கில் 7 மற்றும் 11 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிரித்வி ஷா-வை களமிறக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கலாம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சுப்மான் கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் டி20 போட்டிகளில் அவர் இதுவரை அதை செய்யவில்லை. அவர் இன்னும் ஒரு போட்டியில் விளையாடி சொதப்பினாலும் கூட நம்பிக்கையை இழந்துவிடுவார்.

    மற்ற 2 வடிவங்களில் சிறப்பாக விளையாடி வரும் ஃபார்மும் பாதிபடைந்துவிடும். இதுபோன்ற ஒரு வீரர் டி20 கிரிக்கெட்டில் ஆட வேண்டும் தான். ஆனால் அவருக்கு கடைசி போட்டியில் ஓய்வு கொடுத்து வைத்தால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பார். அடுத்த போட்டிகளிலாவது பழைய ஃபார்முடன் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுவரை ஐந்து டி20 போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 76 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், லக்னோவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வென்றது. இதன்மூலம் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 போட்டியில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேவேளையில் மற்றொரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பின் அணியில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் சுப்மன் கில்லா? பிரித்வி ஷாவா? என்பதை பாண்ட்யா தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, டி20 தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    • இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.
    • இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

    லக்னோ:

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. 100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

    20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது லக்னோ மைதானத்தில் கருப்பு மண் இருந்துள்ளது. அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக, பிட்ச் வடிமைப்பாளரை அழைத்த இந்திய அணி நிர்வாகம், ஸ்பின்னர்களுக்கு உதவும் சிகப்பு நிற மண்ணில் பிட்ச்-ஐ உருவாக்குமாறு கோரியுள்ளனர்.

    கடைசி நேரத்தில் பிட்ச்-ஐ மாற்றியமைத்த போது தான், பந்து மிக அதிகமாக ஸ்பின் ஆகும் வகையில் மாற்றிவிட்டனர். இதனால் பிட்ச்- உருவாக்கும் அதிகாரியை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது பிசிசிஐ. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

    • இந்திய அணியின் தொடக்கம் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக அமையவில்லை.
    • ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

    3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இரண்டு ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டு உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை (1-ந்தேதி) நடக்கிறது.

    இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகியோர் உள்ளனர்.

    ஆனால் இந்திய அணியின் தொடக்கம் இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்களான சுப்மன் கில், இஷான் கிஷன் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

    இதனால் அவர்கள் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி பேட்டிங்கில் கான்வே, பின் ஆலென், மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் பெர்குசன், டிக்னர், ஜேக்கப் டபி, சோதி, கேப்டன் சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பிரேஸ்வெல் பேட்டிங், பந்து வீச்சில் அசத்த கூடியவர்.

    நாளைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.

    • வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
    • ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே எடுத்தது.

    இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 19.5-வது ஓவரில் இந்திய அணி 101 ரன்கள் எடுத்து நியூசிலாந்தை வென்றது. சூர்ய குமார் யாதவ் 26 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 15 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்த போட்டியில் எந்த பேட்ஸ்மேனும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இது டி20 போட்டிக்கு தயார் செய்யப்பட்ட பிட்ச் இல்லை என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

    இந்நிலையில் ஒரு ரன் எடுக்க இளம் வீரர்கள் ரொம்ப கஷ்படுகிறார்கள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது தரக்குறைவான ஆடுகளம் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளரான சாகலை இரண்டு ஓவர் மட்டுமே ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஹர்திக் பாண்டியா செய்த தவறாக பார்க்கிறேன். காரணம் இரண்டு ஓவரில் அவர் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருக்கிறார்.

    ஆடுகளத்தை பொறுத்தவரை இது மோசமாக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக நீங்கள் அதை சவாலாக எடுத்துக் கொண்டு விளையாடி இருக்க வேண்டும். இப்போது உள்ள தலைமுறை வீரர்கள் வலைப் பயிற்சியின் போது சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி சிக்சர் அடிக்கலாம் என்று மட்டுமே பயிற்சி எடுத்து வருகிறார்கள். அதுதான் திறமை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

    ஆனால் சுழற் பந்துவீச்சை எப்படி சமாளித்து ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும் என்பது குறித்து யாரும் யோசிப்பதில்லை. என்னைக் கேட்டால் அதுதான் உண்மையான திறமை. வலைப்பயிற்சியில் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இளம் வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டும். பந்துகளை வீணடிக்காமல் சிங்கிள்ஸ் அடித்து விளையாடியிருந்தால் இந்திய அணி முன்கூட்டியே வெற்றி பெற்று இருக்கலாம்.

    என்று கம்பீர் கூறியுள்ளார்.

    • 2021-ம் ஆண்டு 238 பந்துகள் விளையாடிய வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் இருந்தது.
    • 2021-ம் ஆண்டு இலங்கை மற்றும் இந்தியா அணிகள் 207 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து ஆடிய இந்திய அணி கடைசி ஓவரின் 5-வது பந்தில்தான் வெற்றி பெற்றது. மைதானம் குறித்து இரு அணி கேப்டன்களும் அதிருப்தியை தெரிவித்தனர். இந்த வெற்றி மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்று சமன் செய்துள்ளது.

    இந்த போட்டியில் இரு அணிகளும் 8 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளது. ஆனால், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதன் மூலமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 239 பந்துகள் வரை விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத அணிகள் என்ற சாதனையை படைத்துள்ளன.

    டி20 கிரிக்கெட்டில் இந்தியா -நியூசிலாந்து 239 பந்துகள் சந்தித்து ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    ஒரு சிக்சர்கள் கூட அடிக்காத அணிகள் மற்றும் மைதானம் பின்வருமாறு:-

    2023 - 239 பந்துகள் - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் - லக்னோ ஒரு சிக்சர் கூட இல்லை.

    2021 - 238 பந்துகள் - வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் - மிர்பூர் - ஒரு சிக்சர் கூட இல்லை.

    2010 - 223 பந்துகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் - கார்டிஃப் - ஒரு சிக்சர் கூட இல்லை.

    2021 - 207 பந்துகள் - இலங்கை மற்றும் இந்தியா அணிகள் - கொழும்பு - ஒரு சிக்சர் கூட இல்லை.

    இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்க இருக்கிறது. 

    • ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
    • எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது.

    லக்னோ:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.

    லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 100 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    கேப்டன் சான்ட்னெர் அதிகபட்சமாக 19 ரன் எடுத்தார். அர்ஷ்தீப்சிங் 2 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

    இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் (அவுட் இல்லை), இஷான் கிஷன் 19 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 15 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர். பிரேஸ்வெல், சோதி தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த நிலையில் லக்னோ ஆடுகளம் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இந்த பிட்ச் மிகுந்த அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். போட்டி முடிந்த பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஆட்டத்தை முடித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மிகவும் தாமதமாகி விட்டது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை வெளியிட்ட னர். 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல.

    கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும். 120 ரன் என்பது நல்ல ஸ்கோராகும். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சு அதிகம் ஸ்பின் ஆனது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்.

    இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத்தில் வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    ×