search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய பிரதமர் மோடி"

    • மோடிக்கு லூவர் அருங்காட்சியகத்தில் பெரிய விருந்து அளிக்கப்பட்டது
    • ஜெய்பூரில் பிரான்ஸ் அதிபருக்கு பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    கடந்த வருடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டிற்கு 2-நாள் அரசியல் சுற்று பயணம் மேற்கொண்டார். "இந்தியா, உலக சரித்திரத்தில் ஒரு பெரிய நாடு" என அப்போது பிரான்ஸ் அதிபர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் (Louvre Museum) பிரதமர் மோடிக்கு மிக பெரிய விருந்து அளிக்கப்பட்டது. இதையொட்டி, அந்த அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்படுவது அதன் சரித்திரத்தில், 60 வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம்தான் முதல் முறையாக நடைபெற்றது.

    இந்நிலையில், வரும் ஜனவரி 26 அன்று இந்தியாவின் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

    இதில் பிரதம விருந்தினராக பங்கேற்கும் வகையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் (Emmanuel Macron) இந்தியாவிற்கு வர உள்ளார்.

    முன்னதாக ஜனவரி 25 அன்று பிரான்ஸ் அதிபருக்கு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில், மிக பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட உள்ளது.

    தற்போது இந்தியா வரும் மேக்ரானின் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராணுவ மற்றும் தொழில்துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

    இரு துறைகளுக்கும் தேவைப்படும் உபகரண உற்பத்தியில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என தெரிகிறது. குறிப்பாக, கனரக விமான எஞ்சின்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய பிரான்ஸின் உதவி பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேக்ரானின் வருகை சம்பந்தமான முன்னேற்பாடுகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரான்ஸ் அரசாங்க ஆலோசகர் எம்மானுவல் பான் (Emmanuel Bonne) ஆகியோர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

    • ஸ்வநிதி யோஜனாவில் கடன் தொகையில் 7 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
    • ஆத்மநிர்பார் பாரத் 140 கோடி இந்தியர்களுக்கான திட்டம் என்றார் அமித் ஷா

    கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி யோஜனா" (SVANidhi Yojana) எனும் திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ. 20 ஆயிரமும், அந்த கடன் அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும்.

    கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

    குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஆத்மநிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

    விண்வெளித்துறை மற்றும் ராணுவம் உட்பட அனைத்திலும் சுயசார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் நமது வர்த்தகம், தொழில்துறை மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களும் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.

    வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். தற்போது வரை வறுமையிலிருந்து 60 கோடி மக்களை மீட்டுள்ளார். உலகிலேயே கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கு பெற்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் அலுவலகத்திற்கு குழந்தைகள் வந்திருந்தனர்
    • மறக்க முடியாத தருணங்கள் என குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார் பிரதமர்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

    இன்று அவரை காண சில குழந்தைகள் அவரது அலுவலகத்திற்கு வந்தார்கள்.

    அவர்களுடன் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டார். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் சில 'மேஜிக்' செய்து காட்டினார். இதில் ஒரு நாணயத்தை குழந்தைகளின் நெற்றியில் ஒட்டி அதனை மறைய செய்தார். அதை குழந்தைகள் ரசித்தனர்.

    இந்த சம்பவத்தின் வீடியோவை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் பிரதமர் பதிவிட்டார். அது இணையத்தில் பரவி வருகிறது. அதில் "எனது இளைய நண்பர்களுடன் சில மறக்க முடியாத தருணங்கள்" என ஒர் குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட "ரக்ஷாபந்தன்" பண்டிகையின் போது சில குழந்தைகள் அவரை சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பொதுத்துறை வங்கிகள் விடுமுறை இன்றி இயங்கும் என மோடி அறிவித்தும் அவை இயங்கவில்லை
    • புதிய நோட்டுக்கள் வேறு நீள, அகல பரிமாணங்களுடன் வெளிவந்தன

    கடந்த 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று, இரவு சுமார் 08:15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஒரு திட்டமிடப்பட்டாத அவசர உரையாற்றினார்.

    அந்த உரையில், அப்போது வரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அப்போதிலிருந்து செல்லாது என்றும் மக்கள் தங்கள் வசமுள்ள நோட்டுக்களை 2016 டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.


    இதற்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரே ஒரு வாரம் மட்டும் அவ்வாறு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகள், மக்கள் சிரமத்தில் இருந்தும் தங்கள் விடுமுறையை விட்டுக்கொடுக்காமல் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டத்திற்கு புறம்பான வழியில் நடக்கும் "ஹவாலா" பணபரிமாற்றம், கள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், வருமானவரி கட்டாமல் பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்த கருப்பு பணம் ஆகியவற்றின் மூலம் நடக்கும் பரிமாற்றம் "கருப்பு பொருளாதாரம்" என அழைக்கப்படும். இதற்கு எதிராக எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு முக்கிய அம்சமாகவும், இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணத்தில் சம்மட்டி அடியை கொடுக்கவும், இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அப்போதைய இந்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.

    500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அதிகளவில் வைத்திருப்பவர்கள் வங்கியில் தங்கள் பணத்தை செலுத்தி விகிதாசார முறையில் தினமும் புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.

    ஆனால், கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் இதன் மூலம் தாங்கள் எதிர்காலத்தில் வருமான வரி துறையிடம் சிக்கி கொள்ள நேரிடும் என்பதால் இதற்கு முன்வரவில்லை. ஒரு சில வங்கி அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன் வங்கியில் இருந்து புதிய நோட்டுக்களை ரகசியமாக பெற்று கொண்டு, கணக்கில் காட்டாமல் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    2016 நவம்பர் 8லிருந்து டிசம்பர் 30 வரை, சுமார் 50 நாட்கள் மக்கள் வங்கிகளில் தங்கள் வசம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி கொள்ள மிக நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் பணம் இல்லாமல் தங்கள் தேவைகள் தடைபட்டு சிலர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், பெறவும் மக்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது.

    மத்திய ரிசர்வ் வங்கி அவசர அவசரமாக அச்சடித்து வெளியிட்ட புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புது நீள, அகல பரிமாணங்களை கொண்டிருந்ததால் பணம் வழங்கும் இயந்திரங்களையே (ATM) புதுப்பிக்க வேண்டியிருந்தது. இது குழப்பத்தை மேலும் அதிகரித்தது.


    இந்தியாவின் சில்லறை வர்த்தகத்திலும், மொத்த விற்பனையிலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த நோட்டுக்கள் திடீர் என செல்லாததாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தனர்.

    அன்றிலிருந்து இந்திய பொருளாதாரம் சுமார் 1 வருடத்திற்கு ஸ்தம்பித்தது.

    அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2023 ஜனவரி மாதம், "அரசின் நடவடிக்கையில் தவறு ஏதும் இல்லை" என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    ஆனால், அப்போது மக்களிடம் அறிமுகம் பெற தொடங்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறை, தற்போது வரை மிகவும் பிரபலமாக உள்ளது. உலகிலேயே வல்லரசு நாடுகளை காட்டிலும் அதிகமாக டிஜிட்டல் பணப்புழக்கம் இந்தியாவில்தான் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டிஜிட்டல் பணப்பரிமாற்ற வழிமுறையில் யாரிடமிருந்து, எவருக்கு, எப்போது, எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்பதை துல்லியமாக அறிந்து கொண்டு பண வழித்தடத்தை (money trail) கண்டறிவது அரசுக்கு சுலபம் என்பதால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுபவர்கள் எதிர்காலத்தில் அரசிடம் சிக்கி கொள்வார்கள் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



    2016, நவம்பர் 8 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களும் சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் திரும்ப பெற்று கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    அரசின் நோக்கங்கள் திட்டமிட்டபடி நிறைவேறியதா அல்லது தோல்வியுற்றதா என்பது குறித்து ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தற்போது வரை நிலவுகின்றன.

    இன்று நவம்பர் 8, பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட தினம். அரசின் முடிவை விமர்சித்தாலும், இந்தியர்கள் எங்கும் போராடாமல் அமைதி காத்து மத்திய ரிசர்வ் வங்கியுடன் ஒத்துழைத்தனர்.

    7 வருடங்கள் கடந்தும் மக்கள் அந்த காலகட்டத்தில் தாங்கள் பட்ட இன்னல்களை மறக்கவில்லை.

    • இன்று மோடியின் 73-வது பிறந்த நாளுக்கு பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்
    • விஸ்வகர்மா திட்டத்திற்கான இலச்சினையையும் இணைய முகப்பையும் அறிமுகப்படுத்தினார்

    2023 ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கலை மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் "விஸ்வகர்மா திட்டம்" எனும் புதிய திட்டம் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார்.

    இன்று அவரது 73-வது பிறந்த நாளையொட்டி பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதையொட்டி நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

    முதலில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்து சென்று யஷோபூமி துவாரகா செக்டார் 25 ரெயில் நிலையம் எனும் செக்டார் 21 மெட்ரோ ரெயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தை திறந்து வைத்தார்.

    அதற்கு பிறகு, டெல்லியின் துவாரகா பகுதியில் அமைக்கப்பட்ட "யஷோபூமி" என பெயரிடப்பட்டிருக்கும் உலகிலேயே மிக பெரிய சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தையும் (IICC) திறந்து வைத்தார். மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையம் 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதற்கு பிறகு விஸ்வகர்மா திட்டத்திற்கான இலச்சினையையும், சின்னத்தையும், இணைய முகப்பையும் டேக்லைனுடன் துவங்கி வைத்து உரையாற்றினார்.

    அப்போது மோடி குறிப்பிட்டதாவது:

    வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உபகரணங்கள் குறித்து உங்களுக்கு பயிற்சி தேவை. அதனை அரசு உங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கும். இப்பயிற்சியின் போது ரூ.500 வழங்கப்படுவதுடன் உபகரணங்களுக்கான தொகையாக ரூ.1500 உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் பொருட்களை பெயரிடுவதிலும், சந்தைப்படுத்துவதிலும் அரசு உங்களுக்கு உதவும். நீங்கள் உங்கள் உபகரணங்களை ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி இதில் சேரும் கலைஞர்களுக்கு அடையாள அட்டை, திறன் மேம்பாட்டு உதவி, உபகரண ஊக்கத்தொகையாக ரூ.15,000, பிணையில்லா கடனாக முதற் பகுதியாக ரூ.1 லட்சமும் பின்னர் ரூ.2 லட்சம் ஆகியவற்றுடன் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட உதவியும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் 18 வகையான கலை மற்றும் கைவினை தொழில்கள் இடம்பெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது
    • பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வெளியே வர நேரமாகி விடும் என தெரிவித்தார்

    இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லியிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவகம் உள்ள ராஜ் காட் பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதற்கு பிறகு புது டெல்லியில் உள்ள புகழ் பெற்ற செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி ஒரு நீண்ட உரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் முக்கிய விருந்தாளிகளுக்கு வழக்கம் போல் முன் வரிசையில் அமர இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் இருக்கை ஒதுக்கப்பட்டது.

    ஆனால், கார்கே நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கை காலியாக இருந்தது. பிரதமர் உரையாற்றி கொண்டிருக்கும் போது கார்கேயின் இருக்கை காலியாக இருந்த காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து கார்கே ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    "எனக்கு கண் பார்வை பிரச்சனை இருக்கிறது. அதனால் சுதந்திர தின விழாவிற்கு வருவதை தவிர்த்து விட்டேன். மேலும் எனது வீட்டிலும், காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலும் நான் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டி இருந்தது. நான் செங்கோட்டைக்கு வந்திருந்தால், அங்கு பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் படி உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சபாநாயகர் அகியோர் வெளியே சென்ற பிறகுதான் நான் வெளியே வந்திருக்க முடியும். அதற்கு பிறகு நான் காங்கிரஸ் கட்சி அலுவகத்திற்கு வந்து கொடி ஏற்றி வைத்திருக்க முடியாது. இந்த காரணங்களால் நான் பிரதமர் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை."

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று, முதல் முறையாக அக்கட்சி அலுவலகத்தில் கார்கே இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×