search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோர வியாபாரிகள்"

    • ஸ்வநிதி யோஜனாவில் கடன் தொகையில் 7 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
    • ஆத்மநிர்பார் பாரத் 140 கோடி இந்தியர்களுக்கான திட்டம் என்றார் அமித் ஷா

    கடந்த 2020 ஜூன் மாதம், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லாமல் கடனாக வழங்கும் "ஸ்வநிதி யோஜனா" (SVANidhi Yojana) எனும் திட்டம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான அமைச்சரவையால் தொடங்கப்பட்டது.

    இத்திட்டத்தின்படி, முதல் முறை பெறும் கடனை அடைத்ததும், வியாபாரிகளுக்கு தொடர்ந்து ரூ. 20 ஆயிரமும், அந்த கடன் அடைந்ததும், ரூ. 50 ஆயிரமும் கடனாக வழங்கப்படும்.

    கடன் பெறும் தொகையில் 7 சதவீதம் மானியமாக அரசு வழங்கும்.

    குஜராத் மாநில அகமதாபாத் நகரில், அகமதாபாத் முனிசிபல் கார்பரேஷன் ஏற்பாடு செய்திருந்த இத்திட்டத்தின் பயனாளிகளின் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    ஆத்மநிர்பார் பாரத் (Atmanirbhar Bharat) எனும் சுயசார்புள்ள பாரதத்திற்கான திட்டத்தை பிரதமர் மோடி விளக்கி உள்ளார். இது ஒரு தொலைநோக்குள்ள திட்டம்.

    விண்வெளித்துறை மற்றும் ராணுவம் உட்பட அனைத்திலும் சுயசார்பு நாடாக இந்தியா மாற வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன் மூலம் நமது வர்த்தகம், தொழில்துறை மட்டுமின்றி 140 கோடி இந்தியர்களும் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும்.

    வறுமைகோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் நிலையை மேலே கொண்டு வர பிரதமர் மிகவும் கவனம் செலுத்தி திட்டங்களை வகுக்கிறார். தற்போது வரை வறுமையிலிருந்து 60 கோடி மக்களை மீட்டுள்ளார். உலகிலேயே கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக ஒரு உள்நாட்டு தடுப்பூசி இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

    இவ்வாறு அமித் ஷா கூறினார்.

    இக்கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும் பங்கு பெற்றார்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளை மத்திய நிதி மந்தரி வழங்கினார்.
    • பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக விருதுநகர் வந்த நிர்மலா சீதாராமனை கலெக்டர் ஜெயசீலன், பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 1,297 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் கடனு தவி வழங்கி பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி உதவிக்காக காத்திருக்கும் கடைக்கோடி ஏழைக்கும் உதவி சென்ற டைய வேண்டும் என திட்ட மிட்டார். ஏழை, எளிய மக்கள் உதவி பெறுவது அவர் கள் உரிமை என்ற அடிப்ப டையில் உதவி கிடைப்பதன் மூலம் அவர்கள் சுய சார்பு பெறும் தன்மை ஏற்படும் என்பதே பிரதமரின் திட்டமாகும்.

    அந்த வகையில் அவர் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறி வித்தார். கடந்த 2020-ம் ஆண்டு சாலையோர வியா பாரிகளுக்காக திட்டம் தொடங்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படு கிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி முடித்தால் ரூ. 20 ஆயிரமும், அதன் பின்னர் ரூ.50, ஆயிரமும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் தவணையாக 7,772 சாலையோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது தவணையாக 1,642 பேருக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது தவணை யாக 246 பேரும் ரூ.50 ஆயிரமும் பெற்றுள்ளனர்.

    இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது.

    தனிநபர் கடன் கொடுப்பதை அரசு தடுக்க முடியாது. அதற்காகத்தான் அரசே கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில். நிதித்துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி பேசினார். நிதித்துறை இணை செயலாளர் பர்ஷாந்த் குமார் கோயல் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீ வஸ்தவா வரவேற்றார்.

    இதனைத்தொடர்ந்து 10 மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுடன் மேடைக்கு அழைத்து சந்திரயான் விண்கல மாடலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தார்.

    • திட்டத்தின்படி எந்தவித ஜாமீனும் இல்லாமல் வங்கிகள் ரூ.10 ஆயிரம் முதல் தவணையாக வழங்கும்.
    • சென்னையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளார்கள்.

    சென்னை:

    சாலையோரங்களில் தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழங்கள் விற்பவர்கள், அயர்ன் கடை வைத்திருப்பவர்கள், இளநீர், கரும்பு ஜூஸ் போன்ற வியாபாரங்கள் செய்து வருபவர்கள் தண்டலுக்கு கடன் வாங்கி சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

    இதை தவிர்த்து அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின்படி எந்தவித ஜாமீனும் இல்லாமல் வங்கிகள் ரூ.10 ஆயிரம் முதல் தவணையாக வழங்கும். அதை முறையாக செலுத்தினால் 2-வது தவணையாக ரூ.20 ஆயிரமும், 3-வது தவணையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்ட பலன்கள் அவர்களை சென்றடைய பா.ஜனதாவினர் அவர்களுக்கு வங்கிகளில் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

    சென்னையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளார்கள்.

    கொளத்தூர், மாதவரம் தொகுதிகளில் 110 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மாதவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா வர்த்தக பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர் ராஜாகண்ணன், சஞ்சீவி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவிநாசி:

    அவிநாசியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த வேண்டும், பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வாரச் சந்தை வளாகத்துக்கு சாலையோரக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் அக்டோபா் 9-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

    இந்நிலையில், பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, பொறுப்பாளா்கள் சண்முகம், பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளா் கோபால், அதிமுகவைச் சோ்ந்த ஜெயபால், மூா்த்தி, மதிமுகவை சோ்ந்த பாபு, காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    இதில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ள கடையடைப்பை திரும்பப் பெற வேண்டும், அவிநாசி நகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையோர வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து சாலையோர வியாபாரிகளின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
    • முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23.9.2023 (சனிக்கிழமை) மற்றும் 24.9.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருப்பூர் ஏவிபி., சாலை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம், அய்யப்பன் கோவில் அருகில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் மண்டபம் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் (PMSVANIDHI) மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் பொழுது, மூன்றாவது கடன் ரூ.50,000 பெறலாம். அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்தவேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி.

    மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே.ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம், மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே, திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த நல் வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

    • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு., சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார்.

    20 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன் அலைக்கழிக்காமல் வங்கிகளில் வழங்க வேண்டும், மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே, தள்ளு வண்டி வழங்கியுள்ளது.

    அது போல் இங்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலையோர வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    • முகாமில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு கடன் உதவி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • முதலில் பணம் பெற்றுக் கொண்டு முறையாக கட்டும் வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து கடன்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி சாலை ஓர வியாபாரிகளுக்கு கடனுதவி திட்ட விழிப்புணர்வு மற்றும் விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

    நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சமுதாய அலுவலர் பாலமுருகன், கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து எவ்வாறு கடனுதவி பெறலாம்? என்ற வழிமுறைகளை விளக்கி கூறினர். மேலும் இதில் முதலில் பணம் பெற்றுக் கொண்டு முறையாக கட்டும் வியாபாரிகளுக்கு அடுத்தடுத்து கடன்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து வியாபாரிகளிடம் இருந்து கடன் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில் கவுன்சிலர்கள், நகரா ட்சி பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • வியாபாரம் பாதித்து வருவதாக கோரி கடந்த வாரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 85க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலையோரங்களில் காய்கறி கடைகளை போடுவதால் அவர்களின் வியாபாரம் பாதித்து வருவதாக கோரி கடந்த வாரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி இன்று உழவர் சந்தை அருகே வெளி ஆட்கள் கடை போட்டு உள்ளதை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு சாலையோர வியாபாரிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் விவசாயிகள் காலையில் தங்களிடம் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர் .அதை நாங்கள் வாங்கி உழவர் சந்தை விவசாயிகள் போன பிறகு விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். அதே நேரத்தில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விற்பனை செய்து வருகிறோம். இந்த நிலையில் எந்த விதத்திலும் சாலையோர வியாபாரிகளின் காய்கறி விற்பனையால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் தொன்று தொட்டு இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம்.

    மேலும் நகராட்சிக்கு சுங்க வரி செலுத்தி வருகிறோம் .இந்த நிலையில் எங்களை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தால் எங்களது வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும் எனக் கூறி தாராபுரம் _பொள்ளாச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் நடைபாதை கடை வியாபாரிகள் ஈடுபட்டனர் .அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதுரை , ஈரோடு மாநகராட்சியில் வழங்கியது போல திருப்பூர் மாநகராட்சியிலும் தள்ளு வண்டிகள் வழங்கிட வேண்டும்,

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் , சாலையோர வியாபாரிகளுக்கு மதுரை , ஈரோடு மாநகராட்சியில் வழங்கியது போல திருப்பூர் மாநகராட்சியிலும் தள்ளு வண்டிகள் வழங்கிட வேண்டும், கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும் , சாலையோர வியாபாரிகளிடம் மத்திய மாநில அரசு சட்டங்களை மீறி பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    • பணம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தி ருந்தனர்.
    • தற்போதுள்ள தட்டுப்பட்டால் தருமபுரி உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் விலையை ஏற்றி விற்கின்றனர்.

    தருமபுரி,

    ஈரோடு ஜவுளி சந்தை தமிழக அளவில் பிரபலமானது.

    ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை சந்தை நடைபெறுவது வழக்கம்.

    ஒவ்வொரு வாரமும் இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியா பாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அங்கு அமலில் உள்ளன. ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தி ருந்தனர்.

    மூன்று நிலைகளில் கண்காணிப்பு குழுவினர், ஐந்துக்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு செல்ல பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமை தான் நீடிக்கும் என்பதால் வியாபாரிகள் கவலையோடு உள்ளார்கள்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு சென்று துணிகளை கொள்முதல் செய்யாமல் இருப்பதால் தற்போதுள்ள தட்டுப்பட்டால் தருமபுரி உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் விலையை ஏற்றி விற்கின்றனர்.

    அத்தியாவசிய வேண்டு தல்கள், சுப காரியங்களுக்கு வேறு வழியின்றி கிராமப்புற மக்கள் இவற்றை கூடுதல் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    • உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இது குறித்து உடுமலை நகராட்சித் தலைவா் மு.மத்தீன், ஆணையா் சத்யநாதன் ஆகியோா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவுற்றவுடன் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையை அரசின் பல்வேறு உதவித் திட்டங்களுக்கும், பாரத பிரதமரின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வங்கியில் கடனுதவி பெறவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கணக்கெடுப்பு பணிக்கு வியாபாரிகள் தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, குடியிருப்பு முகவரி குறித்த ஆதாரத்துடன் தயாா் நிலையில் இருக்குமாறும், தங்களுடைய வியாபார இடத்துக்கே வந்து புகைப்படம் எடுத்து கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு நகரமைப்பு பிரிவிலோ அல்லது சமுதாய அமைப்பாளா்களையோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் படகு இல்லம் அருகில் 40 கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அந்த இடத்தில கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் கொடுக்கவும் என்று கூறினார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு படகு இல்ல சாலை மற்றும் அண்ணா பூங்கா சாலை ஓரத்தில் உள்ளூர் பொதுமக்கள் சிலர் கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர்‌.

    ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    இந்த கடைகள் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் ஏரியின் அழகை மறைக்கப்படுவதாகவும் எழுந்த புகாரின்‌ அடிப்படையில் அந்த ஆக்கிரமைப்புகளை ஊராட்சி மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றினர்.

    அதன் பின்பு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு ஏற்காடு கோடை விழாவுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் நேரு தலைமையில் சாலையோர வியாபாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது.

    கடைகள் நடத்த உத்தரவு

    அதில் ஊராட்சிக்கு சொந்தமான கடைகள் குத்தகைக்கு விடப்படும் அந்த கடைகளை எடுத்துக் கொள்ளவும் என்றும் அங்கு கடை கிடைக்காதவர்களுக்கு அவரவர்கள் கடை நடத்தி வந்த சாலை ஓரத்தில் குறிப்பிட்ட அளவிற்கு இடம் ஒதுக்கி தரப்படும் என்றும் அந்த இடத்திற்கு அரசுக்கு வாடகை செலுத்தி கடை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

    ஆனால் ஊராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கி தராததால் மீண்டும் போராட்டம் நடத்தப்பட்டு சேலம் கலெக்டரிடம் இது குறித்து மனு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து இன்று ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையாளர் முருகன் தலைமையில் வட்டாட்சியர் விஸ்வநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் சாலையோர வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளிடம் படகு இல்லம் அருகில் 40 கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் கொடுக்கவும் என்று கூறினார்.

    ஆனால் வியாபாரிகள் சிலர் அண்ணா பூங்கா சாலையில் தான் இடம் வேண்டும் என்று கூறினார். அப்போது நெடுஞ்சாலை துறையினர் அங்கு நடை பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் அதனால் அங்கு கடைகள் வைக்க அனுமதி இல்லை என்றும் மறுத்துவிட்டது.

    அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் ஒதுக்கும் இடத்தில கடை வைத்துக்கொள்வது குறித்து பதிலளிக்க ஒரு வரம் அவகாசம் வழங்கியுள்ளது. கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    ×