search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள்
    X

    மாணவர் ஒருவருக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திராயன் விண்கல மாதிரியை வழங்கினார்.

    விருதுநகரில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகள்

    • சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிகளை மத்திய நிதி மந்தரி வழங்கினார்.
    • பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி விருதுநகரில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாநில வங்கியாளர் கூட்டமைப்பின் சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள் வதற்காக விருதுநகர் வந்த நிர்மலா சீதாராமனை கலெக்டர் ஜெயசீலன், பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் வரவேற்றனர்.

    இதில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 1,297 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 71 லட்சம் கடனு தவி வழங்கி பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி உதவிக்காக காத்திருக்கும் கடைக்கோடி ஏழைக்கும் உதவி சென்ற டைய வேண்டும் என திட்ட மிட்டார். ஏழை, எளிய மக்கள் உதவி பெறுவது அவர் கள் உரிமை என்ற அடிப்ப டையில் உதவி கிடைப்பதன் மூலம் அவர்கள் சுய சார்பு பெறும் தன்மை ஏற்படும் என்பதே பிரதமரின் திட்டமாகும்.

    அந்த வகையில் அவர் ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறி வித்தார். கடந்த 2020-ம் ஆண்டு சாலையோர வியா பாரிகளுக்காக திட்டம் தொடங்கப்பட்டு அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படு கிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி முடித்தால் ரூ. 20 ஆயிரமும், அதன் பின்னர் ரூ.50, ஆயிரமும் வழங்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் முதல் தவணையாக 7,772 சாலையோர வியாபாரி களுக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது தவணையாக 1,642 பேருக்கு ரூ.20 ஆயிரமும், 3-வது தவணை யாக 246 பேரும் ரூ.50 ஆயிரமும் பெற்றுள்ளனர்.

    இத்திட்டத்தின் மூலம் அனைவரும் பயன்பெற அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் ஏழை,எளிய மக்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது.

    தனிநபர் கடன் கொடுப்பதை அரசு தடுக்க முடியாது. அதற்காகத்தான் அரசே கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில். நிதித்துறை செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி பேசினார். நிதித்துறை இணை செயலாளர் பர்ஷாந்த் குமார் கோயல் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அலுவலர் அஜய்குமார் ஸ்ரீ வஸ்தவா வரவேற்றார்.

    இதனைத்தொடர்ந்து 10 மாணவர்களை அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களுடன் மேடைக்கு அழைத்து சந்திரயான் விண்கல மாடலை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் உடனிருந்தார்.

    Next Story
    ×