என் மலர்
நீங்கள் தேடியது "பிரச்சினை"
- பிரச்சினை என்று வந்துவிட்டால் முதலில் அது உண்மையிலேயே பிரச்சினை தானா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்
- பொதுவாகப் பிரச்சினைகள், நம்மைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல; பலப்படுத்துவதற்காகவே வருகின்றன.
பிரச்சினைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை!; எனினும் அவற்றை எதிர்கொண்டு வாழ்வது எப்படி? என்பதை அறிந்து கொள்வதற்கு ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
நெல்லைத்தானே விதைத்தோம்! அதில் ஏன் புல்லும் முளைக்கிறது? என்று சலித்துக் கொண்டால் விவசாயம் பண்ணமுடியாது; பயிர்களோடு சேர்ந்து களைகளும் வளரும் என்பது இயற்கையின் விதி!; கூடவே அதிக மழை பெய்து பயிர்களை அழுகவும் வைக்கும்; மறுபுறம் மழையே பெய்யாமல் பயிர்கள் காய்ந்து கருகிடவும் நேரிடும்; எல்லா லாப நஷ்டக் கணக்குகளும் சேர்ந்ததுதான் வேளாண்மை; வணிகம் முதலான பிற தொழில்களும் அதைப் போன்றதுதான்.
வாழ்க்கையில் நல்லதையே நினைத்து, நல்லதையே திட்டமிட்டு, நல்லபடியாக நடக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும், சில தடைகளும் தடங்கல்களும் நம்மையும் மீறி நமக்கு எதிராகக் கிளம்பும்!; நமது திறமைக்கும் உழைப்புக்கும் கடுமையான பரீட்சைகள் வைத்துப், போராடி ஜெயிப்பதற்கு நம்மைத் தயார்படுத்தும். நல்லவற்றை மட்டுமல்ல; தோல்விகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் எதிர்நோக்கி இருப்பதே வாழ்க்கை.
பிரச்சினைகள் என்றால் என்ன?. வாழ்க்கையின் போக்கில் நமக்குத் தொந்தரவாக, இடையூறாக அமைகின்ற அனைத்துமே பிரச்சினைகள் தாம்; நாம் நினைத்தபடி நடந்து மகிழ்ச்சி தராமல், தோல்விகளைத் தந்து துன்பத்தில் ஆழ்த்தி விடுபவையும் பிரச்சினைகள்தாம்.
விடியலில் விழித்து, இரவு உறங்கப்போகும் வரை நாள்முழுக்க, நாம் நினைத்தது நினைத்தபடி, வகுத்தது வகுத்தபடி நடக்காமல், நழுவல்களும், சறுக்கல்களும், தடங்கல்களும் சின்னஞ்சிறு அளவிலோ, அல்லது பெரிய அளவிலோ நடக்கும். அவை நம்மைத் திகைக்க வைக்கவும் வருந்த வைக்கவும் செய்தால் அவையும் பிரச்சினைகள்தாம். பிரச்சினைகள் பெரும்பாலும் வெளியிலிருந்து வருவதில்லை; 'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்பது புறநானூறு. ஆனாலும் வருகின்ற பிரச்சினைக்கான பழியை யார்மீது தூக்கிப் போடலாம் என்று வெளியாள்களைத்தான் ஒவ்வொரு மனமும் துடிதுடிப்புடன் தேடிக் கொண்டிருக்கும்.

சுந்தர ஆவுடையப்பன்
"நோய் நாடி! நோய் முதல்நாடி! அது தணிக்கும் வாய்நாடி!" என்று நோய்க்கான மருத்துவ முறையைத் திருவள்ளுவர் மூன்று கட்டங்களில் நிரல்படுத்திக் கூறுவார். இதையே நமக்கு வருகிற பிரச்சினைகளுக்கும் பொருத்திப் பார்த்து நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாம். நோயாக இருந்தாலும் பிரச்சினையாக இருந்தாலும் துன்பம் தருகிற வகையில் இரண்டும் ஒன்றுதானே!. நமக்குத் தொழில் ரீதியாகவோ அல்லது வேறு எதன் ரீதியாகவோ ஏதாவது பிரச்சினைகள் வந்தால், உண்மையிலேயே அவை பிரச்சினைகள் தானா? அவை பிரச்சினைகள் என்றால் என்ன வகைப்பட்டவை? என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
பிறகு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யவேண்டும்; ஆணிவேரைப் பற்றித் தெரிந்து கொண்டால்தான், பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்துகொண்டு ஏற்றவாறு தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியலாம். மூன்றாவதாக அந்தப் பிரச்சினைகளை எந்தெந்த வழிகளில் சென்று தீர்த்துவைக்க முடியும் என்னும் வழிமுறைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே வருகின்ற பிரச்சினைகளுக்கும் சண்டைகளுக்குமான காரணங்களை எளிதில் கண்டறிந்துவிட முடியாது. சாப்பாட்டில் உப்புக்குறைவு என்று ஆரம்பிக்கும் சண்டைக்கு மூல காரணமாக, முப்பது வருடத்திற்கு முந்தி நடந்த திருமணத்தன்று வரதட்சணைப் பணம் ஆயிரம் ரூபாய் குறைவாகத் தந்ததாகக்கூட இருக்கலாம்.
குடும்பத்தில் கணவன்-மனைவியருக்கிடையே வருகின்ற சண்டைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு கண்டுவிடுவது நல்லது; இல்லையென்றால் அது கிளைவிட்டு வளர்ந்து, கொடிவிட்டுப் படர்ந்து ஏதேதோ பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணங்களாக வேர்விடக் கூடும். குடும்பச் சண்டைகளுக்கு வக்கீல் வைத்து வாதம் செய்து நீதிபதி வைத்துத் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் தேவையற்றது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கணவனும் மனைவியும் எந்தவிதமான நிபந்தனையுமின்றிச் சமாதானமாகப் போய்விடுவதே ஆகச் சிறந்த நல்ல காரியம்.
மனிதர்கள் பொதுவாகவே விட்டுக் கொடுத்துப் போவதன் மூலமும் அனுசரித்துப் போவதன் மூலமும், பொதுவெளியில் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிடலாம். சிலர் பிரச்சினைகளைப் பிரச்சினைகளாகவே பார்ப்பார்கள்; சில கெட்டிக்காரர்கள் பிரச்சினைகளைத் தீர்வுகளாகவே பார்ப்பார்கள். பிரச்சினைகளாகவே பார்ப்பவர்கள் எந்நேரமும் தீராத படபடப்புடனும் பரபரப்புடனுமே திரிவார்கள்; வெகுசீக்கிரத்தில் நோய்களுக்கும் மாத்திரைகளுக்கும் அடிமையாகிப் போவார்கள்; தீர்வுகளாகப் பார்க்கிறவர்கள் திசைகளுக்கே திசைகாட்டிகளாக வெற்றிமேல் வெற்றி குவிப்பார்கள்.
ஒரு குடும்பத்தில் ஒரு தந்தை, மகன். தந்தை எந்தவிதப் பரபரப்புக்கும் ஆளாகாமல் எப்போதும் அமைதியும் கனிவும் ததும்பத் திகழ்பவர்; மகன் எவ்வளவு பெரிய பிரச்சினை தனக்கு வந்தாலும் அப்பாவிடம் மனம் திறந்து சொல்லி அறிவுரைகளைப் பெற்றுக் கொள்பவன். மகன் வெளி வேலைகளுக்குச் செல்வதாலும், இளைய வயதினனாக இருப்பதாலும் அவனுக்கு அடிக்கடி பிரச்சினைகள் வரும்; அதுவும் பிரச்சினைகள் விதம்விதமாக வருவதும் உண்டு. சிறு குழந்தையாக இருக்கும் காலந்தொட்டே, பிரச்சினை என்று வந்துவிட்டால் மகன் மனக் கலக்கத்துடன் வந்து அப்பாவிடம் பிரச்சினை முழுவதையும் சொல்வான். எல்லாவற்றையும் முழுமையாகக் கேட்டுவிட்டு, தந்தை மகனிடம், " இவ்வளவுதானா பிரச்சினை?! வருத்தப்படாதே! விரைவில் தீர்ந்துபோகும்!" என்று ஆறுதலாகக் கூறுவார்; மகனும் எதிர்ப்பேச்சுப் பேசாமல் சென்றுவிடுவார்; பிரச்சினையும் அப்பா கூறியதுபோலவே சில நாள்களில் இல்லாமல் மறைந்து போய்விடும். தந்தை மகனிடையே இப்படித்தான் பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தைகள் காலம் காலமாய் நடந்து கொண்டிருந்தன. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் தந்தை கூறுகிற ஒரே ஒரு சொல்.. "இவ்வளவுதானா பிரச்சினை? விரைவில் தீர்ந்து போகும்!" என்பது மட்டுமே.
மகனும் இப்போது வளர்ந்து பெரியவனாகி விட்டான்; அனுபவங்களும் பெருகிவிட்டன. இப்போதும்கூடப் பிரச்சினை என்று வந்து விட்டால் தந்தையிடம் அவற்றைக் கூறாமல் இருப்பதில்லை; தந்தையும் கேட்டுவிட்டு, தனது வழக்கமான வார்த்தைகளைத் தெரிவிக்காமல் இருப்பதில்லை. ஆனால் முன்பெல்லாம் தனக்கு வந்திருக்கிற பிரச்சினைகளை ஒருவிதப் பதற்றத்தோடும் மனக் கலக்கத்தோடும் தந்தையிடம் தெரிவித்து வந்த மகன், தற்போதெல்லாம் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் லேசான புன்னகையோடு தெரிவிக்கத் தொடங்கி விட்டான். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா? மகனிடம் தந்தை கேட்டார். "நீங்களே சொல்லுங்கள்!" என்றான் மகன்.
"முன்பெல்லாம் பிரச்சினைகளைப் பிரச்சினைகளாகப் பார்த்தாய்!; அதனால் உனக்குப் பதற்றமும் வருத்தமும் மனசெல்லாம் பரவிக் கிடந்தது. நாளாக நாளாகப் பிரச்சினைகளின் தன்மைகளை உணரத் தொடங்கிவிட்டாய்!; கையாளவும் கற்றுக்கொண்டு விட்டாய்!. இப்போது நீ பிரச்சினைகளைத் தீர்வுகளாகக் காணத் தொடங்கி விட்டாய்!. அதனால் உன் முகத்தில் இப்போதெல்லாம் புன்னகை இழையோடத் தொடங்கி விட்டது. இனி எந்நாளும் வெற்றியே!" என்று வாழ்த்தினார் தந்தை.
அந்தத் தந்தையின் வார்த்தைகளில், 'இவ்வளவு தானா?!' என்கிற சொல்லுக்கு எவ்வளவோ மகத்துவம் இருக்கிறது. எதையும் பூதாகரம் பண்ணிப் பார்க்கும்போது பிரச்சினை பெரியது போலவும், தீர்ப்பதற்கு முடியாத பல சிக்கல்களை உடையதுபோலவும் தோன்றி விடுகிறது; மலைப்புத் தோன்றிவிட்டால் எப்போதுமே வெற்றி இலக்கை எட்டிப் பிடிக்க முடியாது. 'ஒரு நிமிடம்' என்பதை 'ஒரு நிமிடம்'தானே! என்று படக்கென்று தாண்டிச் சென்றுவிடவும் முடியும்; அல்லது 'அறுபது வினாடிகள்' இருக்கின்றனவே! என்று நீட்டிப் பகுத்து, உழன்று தவித்திடவும் கூடும்.
பிரச்சினை என்று வந்துவிட்டால் முதலில் அது உண்மையிலேயே பிரச்சினை தானா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்; பிறகு அது பிரச்சினைதான் என்று ஏற்றுக்கொண்டு துணிந்து எதிர்கொள்ளத் தயாராகிவிட வேண்டும். பிரச்சினை என்று வந்தவுடன் நம்மில் பலர் நமக்கு ஏன் வம்பு என்று அஞ்சி நழுவிவிடவே பார்ப்பார்கள்; பிரச்சினைகளை வெற்றிகொள்ளச் சிறந்த வழி, துணிச்சலுடன் எதிர்கொள்வது மட்டுமே!. பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி நாம் விலகிப்போக ஆரம்பித்தால் அந்தப் பிரச்சினைகள் மேலும் மேலும் வளருமேயொழிய தீர்ந்து போவதற்கு வாய்ப்பே கிடையாது.
ஒரு பிரச்சினையை மூன்று நாள்களில் தீர்க்க வேண்டும் என ஒரு நெருக்கடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். சிலர் முதல் நாளிலிருந்து வேலையைத் தொடர்ந்து, மூன்று நாள்களுக்கும் சமமாகப் பகிர்மானம் செய்து, பணியை ஆற்றி முடிப்பார்கள். சிலரோ மூன்று நாள்களில் முதலிரண்டு நாள்களுக்கு எந்த வேலையையுமே செய்யாமல் வெறுமனே சும்மா இருந்துவிட்டு, மூன்றாவது நாளில் மட்டும் அவசர கதியில் ஈடுபட்டு அவதிப்படுவார்கள்; சில வேளைகளில் மூன்றாவது நாளில் கச்சிதமாகச் செய்தும் முடித்து விடுவார்கள். வேறு சிலரோ முதலிரண்டு நாள்களில் ஆராய்ந்து திட்டமிட்டுக், கடைசிநாளில் முழு வேகத்துடன் ஈடுபட்டுத் திட்டமிட்டபடி முடித்தும் காட்டுவார்கள். இந்த மூன்று விதமான அனுகுமுறையும் சரியானவையா? அல்லது தவறானவையா? என்று எளிதில் சொல்லிவிட முடியாது.
'12, 13, 14 ஆகிய மூன்று நாள்களில் ஒரு பிரச்சினக்குத் தீர்வினைக் கண்டுபிடித்து முடித்துவிட வேண்டும்!' என்று ஒரு காலக்கெடு நமக்கு விதிக்கப்பட்டிருந்தால், பொதுவாக இந்த மூன்று நாள்களையும் நாம் எப்படி அணுகுவோம்?. வழக்கம்போல, மற்ற எல்லாரையும் போலவே 12,13,14 ஆகிய ஏறுவரிசையிலேயே அணுகு வோம். ஆனால் எனக்குத் தெரிந்த ஒரு வித்தியாச மனிதரோ, " அந்தப் பிரச்சினையை 14,13,12 ஆகிய மூன்று நாள்களில் முடிக்க வேண்டும்!" என்று மேலிருந்து கீழாகச் சொல் வார். அதாவது தீர்த்து வைக்கப்பட வேண்டிய இலக்கு நாளான மூன்றாவது நாளை முதல் நாளாக வைத்துக்கொண்டு அதற்கடுத்த துணை நாள்களாக மற்ற இரண்டு நாள்களைக் குறிப்பிடுவார். இதுதான் தீர்வினை மையப் படுத்திக்கொண்டு, அல்லது தீர்வினை முதன்மைப் படுத்திக்கொண்டு பிரச்சினையை அணுகும் முறை.
சிலர் பிரச்சினையை ஆராய்கிறேன்பேர்வழி என்று கூறி, இல்லாததும் பொல்லாததுமாய்ப் பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதுபண்ணிப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இவ்வகை அணுகுமுறை, தீர்வினை எட்டும் தொலைவை தூரப் படுத்திக்கொண்டே போகும். பொதுவாகப் பிரச்சினைகள், நம்மைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல; பலப்படுத்துவதற்காகவே வருகின்றன. அவற்றை நேர்முறைச் சிந்தையோடு அணுகினால், தீர்வுகளும் சிக்கல்கள் ஏதுமின்றி நேர்முறையாகவே எளிதில் அகப்பட்டு விடும்.
தொடர்புக்கு- 9443190098
- இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
- இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
- அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.
நாகர்கோவில், அக். 27-
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் செய்யது அலி (வயது 30), வாசிம் என்ற முன்னா என்ற ரபீக் (34).
கொலை
நண்பர்களான இவர்கள் நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தனர். இந்த நிலையில் செய்யது அலிக்கும், ரபீக்கி ற்கும் தொழிலில் பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக அடிக்கடி பிரச்சினை எழுந்து உள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ரபீக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செய்யதுஅலியை குத்தி கொலை செய்தார். இதைதொடர்ந்து, ரபீக் அங்கிருந்து தப்பிஓடி தலைமறைவாகி விட்டார்.
கைது
இந்த கொலை சம்ப வம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது. இது குறித்து கோட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான ரபீக்கை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதற்கிடையே டெல்லி யில் ஒரு கொலை வழக்கில் ரபீக் கைது செய்யப்பட்டார். இது பற்றிய தகவல் குமரி மாவட்ட போலீசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் கோட்டார் கொலை வழக்கு தொடர் பாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து டெல்லி போலீசார் ரபீக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தி இருந்தனர். விசாரணைக்குப் பின்னர் ரபீக் திகார் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பலத்த பாதுகாப்புடன்...
இந்த நிலையில் கொலை வழக்கு இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்கை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவன் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டான்.
- இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
- இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி மகன் நாகராஜ் (வயது 42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் ஆனத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அங்கு பணம் வரவில்லை. வங்கி ஊழியர்களிடம் பணம் ஏன் வரவில்லை என்று கூறி பிரச்சினை செய்து விட்டு அரசூர் - பண்ருட்டி சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது விழுப்பு ரத்தில் இருந்து அரசூர் வழியாக பண்ருட்டி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பஸ் கண்ணாடியை உடைத்து பஸ் டிரைவர் கண்டக்டரை தாக்கினார்.
பஸ் செல்லாதவாறு வயர்களையும் பிடுங்கி எறிந்தார். இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை பார்த்த நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நாகராஜை தேடி வருகின்றனர்.
- 5 முறை சமாதான கூட்டம் நடத்தியும் பலனில்லை
- கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் பழமை வாய்ந்த பட்டவையா மற்றும் கொம்புக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி நடைபெற்ற நிலையில் அப்போது இருந்தே கோவிலில் வழிபாடு மற்றும் திருவிழா கொண்டாடுவதில் கோயில் உரிமைக்காரர்களான தானான், சின்னத்தானான் வகையறாக்களுக்கும் சிவந்தான், ஏகன் வகையறாக்களுக்கும் பிரச்சனை நிலவி வந்தது.இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு பட்டவையனார் கோவில் வளாகத்தில் கல்வெட்டு வைக்க முயன்ற சிவந்தான் கரைகாரர்களுக்கும், அதைத்தடுக்க முயன்ற தாணான் கரைகாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் தாண ன் மற்றும் சிவந்தான் கரைகளைச் சேர்ந்த 8 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி மற்றொரு தரப்பை சேர்ந்த மக்கள் அன்னதானத்திற்காக வெட்டி வைத்திருந்த காய்கறிகளை சாலையில் கொட்டி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை நெடுஞ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.இக்கோயில் பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே, ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் 2 சமாதான கூட்டமும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சமாதான கூட்டமும் நடைபெற்றது, இந்நிலையில் மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பல்வேறு வகையில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன் , ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி மற்றும் கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவ லர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு சமாதான கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றதுஇந்த சமாதான கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் கோயில் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
- கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் கதவு திறக்காமல் போன விவகாரம்...
- விரைவில் விசாரணை தொடங்க உள்ளது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத் திலிருந்து பல்வேறு வெளிநா–டுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது.அதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்குவதற்கு தயாரானார்கள். ஆனால் விமானத்தில் கதவுகள் திறக் கப்படவில்லை. ஊழி–யர்கள் முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கிடையே விமானத் திற்குள் சிக்கிக்கொண்ட பயணிகள் பெரும் அவ–திக்கு ஆளானார்கள். பின்னர் உடனடியாக இது பற்றி தொழில்நுட்ப வல்லு–நர்களுக்கு தகவல் தெரி–விக்கப்பட்டது. அவர்கள் வந்து சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கதவை திறந்தனர். அதன் பிறகே பயணிகள் வெளியே வர முடிந்தது.இந்த விவகாரம் தொடர் பாக விமான நிலைய ஆணையக் குழுவின் சார் பில் விசாரணைக்கு உத்தர–விடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த விமான நிலைய ஆணைய குழுவினர் விசாரணையை தொடங்குவார்கள் என்று தெரிகிறது.
- கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
- தீபா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை சேர்ந்தவர் மாணிக்கராஜா (வயது 25) மரப்பட்டையில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தீபா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது திருமணமாகி 2 மாதம் ஆகிறது.
கணவன்- மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணிக்கராஜா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது தீபா வீட்டின் மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே தீபாவை அவரது கணவர் மாணிக்கராஜா பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற போது தீபா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து தீபாவின் தாயார் கற்பகம் எனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பாபநாசம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் தீபாவுக்கு திருமணமாகி 2 மாதம் ஆவதால் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரணை நடத்தி வருகிறார்.
- கோவில் கும்பாபிஷேக பிரச்சினையில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையில் மாமுண்டி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அந்தப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களின் முயற்சியின் பேரில் கோவில் திருப்பணிகள் நடந்தது. இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து காஞ்சரம்பேட்டை அனைத்து சமுதாயத்தினரும் மலையாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
இதையறிந்த போலீசார் மற்றும் வருவாய் அதிகாரி அந்த கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்
- ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
திடல் ஊராட்சிக்குட்பட்ட, திடல் கிராமத்தில் ஜல்ஜீவன் மிசன் 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக் கத்தொட்டி யுடன் கூடிய பைப்லைன் நீட்டித்தல் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்ப டும் போது மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகி மகிழ்ச்சி அடைகிறார்கள். மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் மற்றும் பைப் லைன் நீட்டிப்பு பணிகள் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பணிகளை அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். பணிகள் தரமானதாகவும், மக்களின் குறைபாடுகளுக்கு ஆளாகாமலும் பணிகளில் ஆர்வம் காட்டி நிறைவேற்றிட வேண்டும். மக்களின் நியாயமான, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்று வதில் உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். சுந்தர்நாத் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
- பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
அவிநாசியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த வேண்டும், பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வாரச் சந்தை வளாகத்துக்கு சாலையோரக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் அக்டோபா் 9-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இந்நிலையில், பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, பொறுப்பாளா்கள் சண்முகம், பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளா் கோபால், அதிமுகவைச் சோ்ந்த ஜெயபால், மூா்த்தி, மதிமுகவை சோ்ந்த பாபு, காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ள கடையடைப்பை திரும்பப் பெற வேண்டும், அவிநாசி நகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையோர வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து சாலையோர வியாபாரிகளின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது.
- பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஹவ்ரா பீவி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.
சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஹவ்ராபீவி சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹவ்ராபீவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.
- இருவருக்குமிடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
- தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் பிரகலாதனை தாக்கியுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரகலாதன் என்பவருக்கும் இடையே இட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று மணிமாறன் அந்த இடத்தில் இருந்த வேலியை அகற்றியுள்ளார் . இதில் மணிமாறன் மற்றும் பிரகலாதன் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறில் மணிமாறன் அவரது மகன் உள்ளிட்டோர் சேர்ந்து பிரகலாதனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர் .
இதில் பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் பாகசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
- பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்
- பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
கன்னியாகுமரி:
திருவட்டார் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற தலைவர் பெனிலா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
செயல் அலுவலர் மகாராஜன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜ், கவுன்சிலர்கள் சுவாமிதாஸ், றாபி, ஸ்டாலின் ஜோஸ், ராஜம்மாள், புஷ்பம், ஜெஸ்டின் ராஜ், ராஜேந்திரன், பரமேஷ்வரி, உஷாகுமாரி, ராஜிலா, சுரேஷ், மணிகண்டன், செல்வி, சிந்து, லில்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை சரி செய்ய திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பது என்றும், திருவட்டார் காவல் நிலையம் அருகில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி புதியதாக அமைப்பது என்றும், பேரூராட்சிக்கு உட்பட்ட பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், விவசாய நிலங்கள் வளம் பெற பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள குளம், ஏரிகளை உடனே தூர் வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






