search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தற்கொலை செய்துகொண்ட தீபா.

    இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    • கணவன்- மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
    • தீபா வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை சேர்ந்தவர் மாணிக்கராஜா (வயது 25) மரப்பட்டையில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தீபா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றது திருமணமாகி 2 மாதம் ஆகிறது.

    கணவன்- மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாணிக்கராஜா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தபோது தீபா வீட்டின் மாடி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனே தீபாவை அவரது கணவர் மாணிக்கராஜா பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு

    கொண்டு சென்ற போது தீபா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி உள்ளனர்.

    இது குறித்து தீபாவின் தாயார் கற்பகம் எனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பாபநாசம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

    இதுகுறித்து பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் தீபாவுக்கு திருமணமாகி 2 மாதம் ஆவதால் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×