என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் கும்பாபிஷேக பிரச்சினை
- கோவில் கும்பாபிஷேக பிரச்சினையில் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையில் மாமுண்டி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அந்தப்பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களின் முயற்சியின் பேரில் கோவில் திருப்பணிகள் நடந்தது. இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு முன்னுரிமை வழங்குவதாக புகார் எழுந்தது. இது குறித்து காஞ்சரம்பேட்டை அனைத்து சமுதாயத்தினரும் மலையாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.
இதையறிந்த போலீசார் மற்றும் வருவாய் அதிகாரி அந்த கிராம மக்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






