search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

    • குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது.
    • பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஹவ்ரா பீவி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.

    சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஹவ்ராபீவி சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஹவ்ராபீவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×