search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உறுதுணையாக இருப்பேன் - தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உறுதுணையாக இருப்பேன் - தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேச்சு

    • அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும்
    • ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    திடல் ஊராட்சிக்குட்பட்ட, திடல் கிராமத்தில் ஜல்ஜீவன் மிசன் 2020-2021 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக் கத்தொட்டி யுடன் கூடிய பைப்லைன் நீட்டித்தல் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்ப டும் போது மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகி மகிழ்ச்சி அடைகிறார்கள். மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப இப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் மற்றும் பைப் லைன் நீட்டிப்பு பணிகள் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பணிகளை அலுவலர்கள் சிறந்த முறையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு காலதாமதமின்றி வழங்கிட வேண்டும். பணிகள் தரமானதாகவும், மக்களின் குறைபாடுகளுக்கு ஆளாகாமலும் பணிகளில் ஆர்வம் காட்டி நிறைவேற்றிட வேண்டும். மக்களின் நியாயமான, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்று வதில் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன். சுந்தர்நாத் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×