என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்.
திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மதுரை , ஈரோடு மாநகராட்சியில் வழங்கியது போல திருப்பூர் மாநகராட்சியிலும் தள்ளு வண்டிகள் வழங்கிட வேண்டும்,
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதிகளிலும் சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் , சாலையோர வியாபாரிகளுக்கு மதுரை , ஈரோடு மாநகராட்சியில் வழங்கியது போல திருப்பூர் மாநகராட்சியிலும் தள்ளு வண்டிகள் வழங்கிட வேண்டும், கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும் , சாலையோர வியாபாரிகளிடம் மத்திய மாநில அரசு சட்டங்களை மீறி பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு. சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Next Story






