search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இதயம்"

    • வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும்.
    • டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது.

    கோடை காலத்தில் இருதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.விஸ்வநாதன்.

    அவர் கூறியதாவது:-

    வெயில் காலம் இருதய நோயாளிகளுக்கு நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் மருத்துவர்கள் சொன்ன மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.

    வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உடலில் ரத்த அழுத்தம், பொட்டாசியம், சோடியத்தின் அளவு மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மயக்கம், சோர்வு ஏற்படும். அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்.

    பொதுவாக இரண்டு வகையான இருதய நோயாளிகள் இருக்கிறார்கள். ரத்தத்தை வழக்கமான அளவில் 'பம்பிங்' செய்யும் இருதய நோயாளிகள் ஒருவகை. இதயத்தின் 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் மற்றொரு வகை. இவர்களில் 'பம்பிங்' திறன் நன்றாக உள்ள இருதய நோயாளிகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தலாம். 'பம்பிங்' திறன் குறைவாக உள்ள இருதய நோயாளிகள் 1.5 லிட்டர் தண்ணீர்தான் குடிக்க வேண்டும்.

    கூடுமானவரையில் டீ, காபியை தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி அருந்துவதாக இருந்தால், காலையில் எழுந்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, மற்ற வேலைகளை தொடங்கலாம். சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.

    காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருக்கும் என்பதால், இருதய நோயாளிகள் காலையில் நடைபயிற்சி செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலில் செல்லும் போது 'சன் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ரத்த அழுத்தம் குறையவும், அதிக வியர்வையினால் மயக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு 7 மணிக்கு பிறகு நடைபயிற்சி செல்லலாம். வெயில் காலத்தில் இருதய நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலை நேர நடைபயிற்சி மிகவும் நல்லது.

    காலை வேளை உணவாக எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, பேரிக்காய் பழங்களும் சாப்பிடலாம். என்றாலும் அதிகமாக சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோயாளியாக இருந்தால் இவற்றை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதியம் 11 அல்லது 12 மணி அளவில் காய்கறி சூப், மோர் அருந்தலாம். சிறந்த நீர்பானம் என்றால், அது மோர்தான், குறைவாக உப்பு சேர்த்து மோர் அருந்துவது மிகவும் நல்லது. மோர் குடிப்பதால் கொழுப்பு அதிகரிக்காது.

    இளநீரில் இருக்கும் பொட்டாசியம் சத்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதால் இளநீர் குடிக்கலாம். அதேசமயம், இளநீர் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் இளநீரை தவிர்க்க வேண்டும். தர்ப்பூசணி பழம் சாப்பிடுவதாக இருந்தால் குறைவாக சாப்பிடுங்கள்.

    நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரிக்காய் சாப்பிடலாம். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சர்க்கரையின் அளவு கூடாது என்பதால் சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.

    கோடை காலத்தில் மதிய உணவில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.

    பச்சை காய்கறிகளெல்லாம் 'கிரீன் சிக்னல்' மாதிரி. சாலையில் 'கிரீன் சிக்னல்' விழுந்ததும் நாம் செல்வது மாதிரி, பச்சை நிற காய்கறிகள் எல்லாமே உடலுக்கு மிகவும் நல்லது. பீன்ஸ், அவரைக்காய், கோவைக்காய், பாகற்காய், காராமணி, காலிபிளவர், கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். சாதத்தை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு எடுப்பது நல்லது. இதனால் வெயிலை தவிர்க்க முடியும் என்பதோடு, சிறிதுநேரம் தூங்கி எழுந்தால் மாலையில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    மாலையில் ஏதாவது பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு, அவரவர் விருப்பத்துக் ஏற்ப சர்க்கரை இல்லாமல் சிறிது டீ, அல்லது காபி அருந்தலாம்.

    இரவில் சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சாப்பிட்டு விட்டு 2 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். தூங்கச்செல்வதற்கு 1.30 மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு விடவேண்டும்.

    மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், இருதய நோயாளிகள் காற்றடைக்கப்பட்ட ரெடிமேட் குளிர்பானங்களை அருந்தக்கூடாது. பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதை விட பழங்களை அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது.

    வெயில் அதிகமாக இருக்கும் போது வீட்டினுள் குளிர்ச்சியான இடத்தில் இருங்கள். குளிர்சாதன வசதி இல்லாதவர்கள் வெயில் படாத காற்றோட்டமான அறையில் இருக்கவேண்டும். வீட்டுக்கு வெளியே மரத்தின் நிழலிலும் அமரலாம்.

    பொதுவாக எல்லா இருதய மற்றும் சர்க்கரை நோயாளிகளுமே 3 மாதத்துக்கு ஒருமுறை டாக்டரை சென்று பார்க்க வேண்டும். உடல் நிலைக்கு ஏற்ப அவர்கள் மாத்திரைகளை மாற்றிக்கொடுப்பார்கள் அல்லது ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடச் சொல்வார்கள்.

    இந்த யோசனைகள் இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி வயதான எல்லோருக்குமே பொருந்தும்.

    இவ்வாறு டாக்டர் என்.விஸ்வ நாதன் கூறினார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஓய்வெடுத்தாலும் வலி குறையாது.
    • நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும்.

    சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பின் அறிகுறிகள். இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன.

    பரம்பரை காரணம், அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலை, உயரமான இடங்களுக்குச் செல்வது, அதிகமாக உணர்ச்சி வசப்படுவது போன்றவற்றை குறிப்பிடலாம்.

    புகைப்பவர்கள், மதுகுடிப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடல் உழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு என மருத்துவ துறையினர் கூறுகின்றனர்.

    நிமோனியா எனும் நுரையீரல் அழற்சி, நுரையீரல் உறைக்காற்று நோய், நுரையீரல் உறை அழற்சி, கடுமையான காச நோய் ஆகியவற்றாலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும்.

    நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். நீண்டகாலமாக படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள் ஆகியோருக்கும் ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். குடல் புண் நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

    • தற்போது இதய நோய் என்பது வயது வித்தியாசமின்றி பலரையும் தாக்கத்தொடங்கிவிட்டது.
    • இதய நோயில் இருந்து நிவாரணம் பெற பல்வேறு சித்த மருந்துகள் உள்ளன.

    இதய நோய் வராமல் தடுக்கவும், இதய நோயில் இருந்து நிவாரணம் பெறவும் பல்வேறு சித்த மருந்துகள் உள்ளன. அவற்றில் மிக எளிமையான சித்த மருத்துவ முறைகளில் ஒன்று தான் குடிநீர் வகைகள். சித்த மருந்துகள் மற்றும் இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த குடிநீரை பயன்படுத்தி வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அந்த குடிநீர் வகைகள் வருமாறு:

    குடிநீர் 1: மருதம் பட்டை, நொச்சி இலை, தாளிக்கீரை, சாதிக்காய், சாதிபத்திரி, நாவல் விதை இவற்றை சம அளவில் எடுத்து நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் எடுத்து 100 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி குடிநீராக்கி 60 மில்லி அளவு காலை, மாலையில் குடிக்கலாம்.

    குடிநீர் 2: பேரீச்சை, சிங்காரக் கிழங்கு (பண்ணிமோந்தான் கிழங்கு), நிலப்பனை, தண்ணீர் விட்டான், வில்வப் பட்டை, தாமரைக் கிழங்கு, மருதம் பட்டை இவற்றை தலா 35 கிராம் எடை அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் இருந்து ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிநீராக்கி காலையில் மட்டும் குடிக்கவும்.

    குடிநீர் 3: வில்வப்பட்டை, தேவதாரம், குரோசாணி ஓமம், லவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி, மருதம்பட்டை இவைகளை தலா 35 கிராம் அளவு எடுத்து 1½ லிட்டர் தண்ணீர் சேர்த்து, எட்டில் ஒன்றாய்க் காய்ச்சி வடித்து 60 மில்லி வீதம் காலை, மாலை குடிக்கவும்.

    குடிநீர் 4: ஆட்டின் தமரகம் (இருதயம்) ஒன்றை எடுத்து அதை சிறிய துண்டுகளாக்கி அத்துடன் லவங்கப்பட்டை, சாதிக்காய், சாதிபத்திரி இவற்றின் பொடிகள் ஒரு சிட்டிகையும், உப்பு ஒரு சிட்டிகையும் சேர்த்து 200 மில்லி அளவு தண்ணீர்விட்டு நன்றாக காய்ச்சி சூப் போன்று தயாரித்து கொடுக்கலாம்.

    இது தவிர, வெண்தாமரை சூரணம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட வேண்டும். அதுபோல தேனில் ஊறவைத்த கர்ச்சூர் வகை பேரீச்சையை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு நோய் வரும் ஆபத்தை தடுக்கலாம்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, எம்.டி, (சித்தா)

    • 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய நோயாக இதய நோய்தான் உருவெடுக்குமாம்.
    • இதய நோய் வந்துவிட்டால் அதற்கு பைபாஸ் சர்ஜரிதான் இன்றிருக்கும் மிகச் சிறந்த சிகிச்சை.

    இந்தியாவில் இதயநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2030-ம் ஆண்டில் இந்தியாவின் மிக முக்கிய நோயாக இதய நோய்தான் உருவெடுக்குமாம். அப்போது, ஆண்களில் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைபவர்களில் 34 சதவிகிதம் பேரும், பெண்களில் 32 சதவிகிதம் பேரும் இதய நோயால் மரணம் அடைவார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    மன அழுத்தம், அதிக அளவு கொலஸ்ட்ரால், உடற் பயிற்சி ஏதும் இல்லாத நிலை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கூடுதல் எடை, புகைப் பழக்கம் மற்றும் மது அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

    ''இதய நோய் வந்துவிட்டால் அதற்கு பைபாஸ் சர்ஜரிதான் இன்றிருக்கும் மிகச் சிறந்த சிகிச்சை. ஆனால், அப்படிப்பட்ட பைபாஸ் சர்ஜரியை தவிர்க்கலாம்... உணவுப் பழக்கத்தை மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். இதய நோயை ஓட ஓட விரட்டி விடலாம்'' என்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவரான டீன் ஆர்னிஷ்.

    அமெரிக்க மருத்துவ அசோசியேஷனின் பத்திரிகையான 'ஜாமா'வில் இவரது விரிவான ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

    ''இன்றைய தேதியில் இதய நோயைக் கட்டுப்படுத்தும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரே உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டம் இதுதான்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

    ''பெரும்பாலானவர்களின் பரிந்துரை போல் நாங்கள் முற்றிலுமாக சைவத்துக்கு மாறச் சொல்வதில்லை. மீன் எண்ணெய் உள்ளிட்ட கொழுப்பற்ற அசைவத்தை அவ்வப்போது சேர்த்துக் கொள்ளச் சொல்கிறோம். சர்க்கரை, மதுபானம் உள்ளிட்டவற்றைக் கூட நிறுத்தச் சொல்லாமல் குறைத்துக் கொள்ளவே பரிந்துரைக் கிறோம்.

    70 முதல் 75 சதவீத கலோரியை கார்போஹைட்ரேட்ஸ் மூலமும் 15 முதல் 20 சதவீத கலோரியை புரோட்டீன்கள் மூலமும், பெறுவதே எங்கள் உணவுத் திட்டத்தின் நோக்கம். அதோடு கொஞ்சம் மனப் பயிற்சியும் அவசியம்'' என்கிறார் டாக்டர் டீன் ஆர்னிஷ்.

    இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றுபவர்களுக்கு இதயநோய் வராது என்பதோடு, மாரடைப்பின் விளிம்பு நிலையில் இருப்பவர்களைக் கூட மெல்ல மெல்ல குணமாக்கி, மாத்திரை கூடத் தேவைப்படாத நார்மல் மனிதர்களாக்கி விடுகிறதாம் இது.

    இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் இந்த உணவுத்திட்டத்தையும் மனப் பயிற்சியையும் டீன் உருவாக்கியது எப்படித் தெரியுமா? இந்தியாவைப் பார்த்துத்தான்.

    ''உலகின் மிக முக்கிய பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் இந்தியாவில் இருந்தே தொடங்குகிறது. இந்தியர்களை அடிப்படையாக வைத்தே, இந்த பிரச் சினைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம்'' என்று டாக்டர் டீன் ஆர்னிஷே குறிப்பிட்டிருக்கிறார்.

    • காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    • ஒரு நாளைக்கு 6 கிராம் அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பு ஏற்படுவ தற்கான காரணங்களான வாழ்க்கைச் சூழல், பணிச்சுமை, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற உணவு முறை, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இவை அனைத்தாலும் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைப் பதோடு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும் என்கிறார் நெல்லை ஷிபா மருத்துவமனை இதயநோய் சிகிச்சை மருத்துவர் கிரிஷ் தீபக்.

    மன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    பொதுவாக மாரடைப்பு ஏற்படும்போது திடீர் நெஞ்சுவலி (வழக்கமாக நெஞ்சிலிருந்து இடது கை அல்லது கழுத்தின் இடப்பாகத்திற்கு பரவும்), மூச்சுதிணறல், வாந்தி, மயக்கம், வியர்த்தல் போன்ற அறிகுறிகள் காணப்படும். சிலருக்கு நெஞ்சு வலி இல்லாமல், நெஞ்சு எரிச்சலோ அல்லது இடது கை குடைச்சலோ இருக்கும். இது மட்டுமல்லாமல் முதுகு எரிச்சல், வலது பக்க நெஞ்சுவலி, தாடைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வலி இல்லாமல் கூட மாரடைப்பு ஏற்படலாம்.

    மாரடைப்பை கண்டறிய

    இதய சுருள் படம் (ECG) எடுக்க வேண்டும். மேலும் ரத்தப் பரிசோதனை மூலமும் மாரடைப்பை கண்டறிய லாம். இதய ஸ்கேன் (ECHO) மூலம் நம் இதயத்தின் செயல்திறன், மாரடைப்பைக் கண்டறியலாம்.

    ஆஞ்சியோகிராம் / ஆஞ்சியோ பிளாஸ்டி

    ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்கும்போது இதய ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால், கை வழியாக ஒரு சிறிய டியூப்பை செலுத்தி, அதன் மூலம் ஒரு பலூனை உட்செலுத்தி ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு சென்று அதில் இருக்கும் கொழுப்பு படிவுகளை அகற்றி (விரித்து விடுதல்) அந்த இடத்தில் ஸ்டென்ட் வைத்து அடைப்பை சரி செய்யும் சிகிச்சை முறைக்கு ஆஞ்சியோபிளாஸ்டி.

    பைபாஸ் சர்ஜரி யாருக்கு தேவை?

    இதயத்திற்கான ரத்தக் குழாய்களில் 3 அல்லது 5 இடங்களில் அடைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே பைபாஸ் சர்ஜரி பரிந்துரை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையினால் சுலபமாக மற்றும் வலி இல்லாமல் அடைப்பை அகற்றலாம்.

    இதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் என்ன?

    இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதிகளவு உப்பு, நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள சால மீன், வால்நட்ஸ், கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பு திராட்சை, தக்காளி போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 6 கிராம் (3 டீஸ்பூன்) அளவிற்கு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு நாளைக்கு 4 முதல் 6 டீஸ்பூன் அளவில் சன் பிளவர் எண்ணெய், ரைஸ்பிராண்ட் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மாரடைப்பை தடுக்க என்ன செய்வது?

    மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பை வராமல் தடுக்க முடியும். மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய முயற்சிப்பதோடு, முடிந்தவரை எப்போதும் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ம ன அழுத்தத்தைக் குறைக்க வேலை நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள், இசை கேட்பது, படிப்பது போன்ற ஏதாவதொரு மனதுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடலாம்.

    மாரடைப்பை தடுக்க ரத்த அழுத்தம், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும். தினசரி 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி அரை மணி நேரமாவது நடைபயிற்சி, உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் கிரிஷ் தீபக்.

    Dr. கிரிஷ்தீபக் MD, DM.,FNB இதய மருத்துவர், ஷிபா மருத்துவமனை 9442139292

    • நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் ‘கிரீன் காரிடார்’ அமைக்கப்பட்டது.
    • மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்தவர் திருச்செல்வம் (வயது 33). இவர் கடந்த சில நாட்களுக்கு மோட்டார் சைக்கிளில் விருதுநகருக்கு சென்றபோது வாகனம் மோதியது. இதில் திருச்செல்வம் படுகாயம் அடைந்தார்.

    மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் திருச்செல்வத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து கண்கலங்கினர்.

    மூளைச் சாவு அடைந்த திருச்செல்வத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து அதற்கான நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி கோவை மருத்துவமனையில் சந்திரமோகன் என்பவருக்கு கல்லீரலும், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புனேவை சேர்ந்த பாவுராவ் நகாடி என்பவருக்கு இதயமும் தேவைப்படுவது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் திருச்செல்வத்தின் இதயம், கல்லீரலை பத்திரமாக அகற்றி ஆம்புலன்ஸ் மூலம், சாலை மார்க்கமாக கோவை மற்றும் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல உடனே நடவடிக்கை எடுத்தனர்.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி மற்றும் போலீசார் வழிகாட்டுதலில் மதுரையில் இருந்து இன்று காலை கல்லீரல், இதயத்துடன் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கோவை, புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றது. அதன் முன் போலீஸ் வாகனம் சைரன் ஒலித்தபடி சென்றது.

    நகர் பகுதியில் தங்கு தடையின்றி செல்வதற்காக மாநகர போக்குவரத்து சாலைகளில் 'கிரீன் காரிடார்' அமைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுரை மாநகரை 11 கி.மீ. தொலைவை ஆம்புலன்ஸ் வெறும் 7 நிமிடங்களில் கடந்து புதுக்கோட்டைக்கும், கோவைக்கும் விரைந்து சென்றது. இன்று மதியம் 2 மணிக்குள் ஆம்புலன்ஸ் உரிய இடத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது. 

    • ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம்.
    • ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 1 கோடியே 73 லட்சம் பேர் மாரடைப்பால் இறக்கின்றனர். ஆண்டுக்கு 10 லட்சம் குழந்தைகள் பிறக்கும்போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன.

    உலக அளவில் நிலைமை இப்படி என்றால், இந்தியாவில் மாரடைப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையை சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். ஒரு காருக்கு என்ஜின் எப்படியோ, அப்படித்தான் மனிதனுக்கு இதயம்.

    என்ஜினை சீராகப் பராமரிப்பது போல இதயத்தைப் பாதுகாக்கவும் சில வழிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இன்றைய நெருக்கடி மிகுந்த உலகில் மன அழுத்தம், மாரடைப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. எந்தச் செயலையும் பதற்றமின்றி, மனஅழுத்தமின்றி செய்யப் பழகிக்கொண்டாலே இதயத்துக்கு நல்லது. மவுனத்தை கடைபிடித்து, நிதானமாக செயல்பட்டால் மன அழுத்தம் இன்றி வாழலாம். ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். உடல் பருமனும், தொடர்ந்து சேரும் கொழுப்பும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். துரித உணவுப் பழக்கத்தைக் கைவிட்டு, சத்தான, சமச்சீரான உணவை உட்கொண்டால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

    தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்வது பொதுவாக எல்லாருக்குமே நல்லது. நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரிப்பது என ஆரோக்கியத்தைப் பராமரித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும் சூழலில் உள்ளவர்கள், அவ்வப்போது சில நிமிடங்கள் காலாற நடை போடுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். இவற்றையெல்லாம் முறைப்படி பின்பற்றி வந்தால், உங்கள் இதயம் கடைசிவரை ஆரோக்கியமாகவே இயங்கும்.

    • மாரடைப்புக்கும், ரத்த வகைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
    • மாரடைப்பு திடீரென்று ஏற்படக்கூடியது.

    மாரடைப்புக்கும், ரத்த வகைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஓ ரத்த வகை அல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. இது தொடர்பான ஆய்வுக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உட்படுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் ஏ அல்லது பி ரத்த வகை உடையவர்களுக்கு ஓ ரத்த வகையை கொண்டவர்களை விட மாரடைப்பு ஏற்படும் அபாயம் 8 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டது.

    2017-ம் ஆண்டிலும் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இதேபோன்ற ஆய்வை ஐரோப்பிய இருதயவியல் சங்கம் மேற்கொண்டது. அந்த ஆய்வில் ஓ ரத்த வகை அல்லாமல் பிற ரத்த வகை (ஏ, பி, ஏ.பி) கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 9 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது தெரியவந்தது. அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஏ மற்றும் பி ரத்த வகையை ஓ ரத்த வகையுடன் ஒப்பிட்டனர். அதில் பி ரத்த வகை உள்ளவர்களுக்கு மற்ற ரத்த வகையை கொண்டவர்களை விட மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

    அதிலும், ஓ ரத்த வகை கொண்ட நபர்களுடன் ஒப்பிடும்போது பி ரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் 15 சதவீதம் அதிகம். ஓ ரத்த வகையுடன் ஒப்பிடும்போது ஏ ரத்த வகை உள்ளவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் 11 சதவீதம் அதிகம். இதய செயலிழப்பு, மாரடைப்பு இரண்டும் இதய நோயின் வடிவங்களாகும். ஆனால் மாரடைப்பு திடீரென்று ஏற்படக்கூடியது.

    இதய செயலிழப்பு நோய் பாதிப்பு அதிகரிக்கும்போது நிகழும். மாரடைப்பு காரணமாக காலப்போக்கில் இதய செயலிழப்பு நேரிடலாம். ஐரோப்பிய கார்டியாலஜி சொசைட்டியின் கருத்துப்படி, ஓ-வகை ரத்தக் குழுக்கள் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஏற்படு வதற்கு அவை ரத்தக் கட்டிகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் காரணமாக இருக்கலாம். மாரடைப்புக்கு ரத்தக் கட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை தமனிகளின் செயல்பாட்டை தடுக்கின்றன. இதய தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படுகிறது.

    • இதய நலத்திற்காக வாழ்வியல் சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்
    • காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

    இதயம் நம் உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு. பிறந்தது முதல் இறக்கும் வரையில் இடைவெளி இன்றி நமக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு. அந்த இதயத்தை நல்ல முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இதய நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள், நம்மில் பலர் இதய நலத்திற்காக வாழ்வியல் மாற்றம் செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் கூறும் பொழுது, எனக்கு நேரமில்லை, நிறைய வேலைகள் இருக்கிறது, என் உடல் நலத்திற்காக அதிக நேரம் என்னால் ஒதுக்க முடியவில்லை, இந்த வேலை எல்லாம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் பல சமாளிப்பு வார்த்தைகளை கூறுவதை நாம் கேட்கிறோம். சரி, அதிக உடற்பயிற்சி, முழுமையான உணவு கட்டுப்பாடு, தியானம் மனம் தளர்த்தும் பயிற்சிகள் என்று பலவற்றையும் முறைப்படி கற்றுக்கொண்டு என்னால் பின்பற்ற முடியவில்லை என்று கூறும் நண்பர்களுக்காக, உங்கள் இதயத்தைக் காக்க நீங்கள் செய்யக்கூடிய சில சின்ன சின்ன மாற்றங்களை கீழ்வரும் கட்டுரையில் காணலாம்.

    காலை உணவு:

    காலை உணவு என்பது நாம் தவிர்க்கக் கூடாத அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் காலை உணவை நல்ல ஆரோக்கியமானதாகவும் குறைந்த அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நாம் பொதுவாக சாப்பிடக்கூடிய அதிகமான மாவுச் சத்துள்ள பொருட்கள், எண்ணெயில் செய்த பொருட்கள், அதிக இனிப்பு கொண்ட பொருட்கள் போன்றவற்றை முழுமையாய் தவிர்க்க வேண்டும். காலை உணவில் முழு தானியத்தால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவை அதாவது இட்லி, தோசை, சப்பாத்தி, முழு தானிய கஞ்சி, முழு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு போன்று ஏதாவது ஒன்றினால் செய்த காலை உணவை சாப்பிடுவது நல்லது.

    மேலும் காலை உணவில் அதிகமான அளவில் நார்ச்சத்து இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நம்முடைய கெட்ட கொழுப்பினால் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்புகளை சரி செய்ய உதவுகிறது. மேலும் அது ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து இதனால் இதயத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் நீடித்த அழற்சிகள் உடலில் இருந்தால் அவற்றை சரி செய்யவும் நார்ச்சத்து உணவுகள் நமக்கு உதவுகின்றன. எனவே காலை உணவை ஆரோக்கியமானதாக நார்ச்சத்து நிறைந்ததாக முழு தானியம் கொண்டதாக குறைந்த அளவாக இருந்தாலும் எடுத்துக் கொள்வது சிறந்தது. அத்துடன் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    தனிமையை தவிர்த்தல்:

    இன்று பலர் வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளை செய்யக்கூடிய நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இது பலருக்கும் அனுகூலமாக இருந்தாலும் அது மனதின் ஆரோக்கியத்தை குறைக்க கூடியதாகவும் அதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்க கூடியதாகவும் இருக்கிறது என்பது சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள். என்னுடைய வேலைகளை எல்லாம் நான் வீட்டிலிருந்தபடியே கணினி மூலம் செய்கிறேன் அதை தாண்டி சமூக ஊடகங்களில் ஆழ்ந்திருப்பதும் ஏதேனும் சமூக அமைப்புகளில் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீட்டிங்குகளையும் ஜூம், வாட்ஸ் அப், கூகுள் மீட் போன்றவற்றிலேயே நான் செய்து விடுகிறேன் என்று கூறுபவராகவும் நீங்கள் இருந்தால் இதை நீங்கள் நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

    இந்த முறையில் செயல்படும் பொழுது குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தனிமையான உணர்வும் இதனால் மன அழுத்தமும் ஏற்படும். இது இதய நலத்தையும் பாதிக்கிறது. எனவே அவ்வப்பொழுது சில மீட்டிங்குகளை நேரில் சென்று மனிதர்களை சந்திக்கும் விதமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நண்பருடன் சென்று காபி அல்லது டீ அருந்துவது, நண்பர்களுடன் மதிய உணவு வெளியில் சென்று உண்பது, மாலை நேரங்களில் ஒரு சிறிய நடைபயிற்சியை மேற்கொள்வது அந்த நேரத்தில் பலவிதமான மனிதர்கள் வந்து போகக்கூடிய இடங்களில் சிறிது நேரம் அமர்ந்திருப்பது, பொருட்கள் வாங்க அவசியம் இல்லை என்றாலும் கடைவீதிகளில் அல்லது மால்களில் சிறிது நடந்து விட்டு புதிய மனிதர்களையும் பொருட்களையும் பார்த்து வருவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளை நம் அன்றாட நடைமுறையில் புகுத்திக் கொண்டால் மனநலம் மட்டுமின்றி இதய நலனையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

    மனம் உடல் தளர்த்தும் தியானம்:

    மனம் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அலைநீளத்தில் செயல்படுகிறது. பெரும்பாலான நேரம் நம் மனம் பீட்டா அலையில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே இந்த அலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நம் உடல் தளர்வாக இருப்பதில்லை. நம் உடல் தசைகள் ஒரு கடினத் தன்மையுடன் தயார் நிலையில் இருந்து கொண்டிருக்கும். உடல் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது தான் நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உடலின் தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது, அது அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக ரத்தஅழுத்தம், மற்றும் மூளை இதயத்திற்கான ரத்தக்குழாய்களில் அடைப்பு போன்றவற்றை தவிர்க்க உதவுகிறது. உடல் தளர்வாக இருக்க வேண்டும் என்றால் அது மனதினால் மட்டுமே முடியும். மனம் தளர்வாக இருக்கும் பொழுது மட்டுமே அதை உடலும் கற்றுக் கொள்கிறது. எனவே மனதைக் கொண்டு தா ன் உடலை தளர்த்த வேண்டும். மனதை தளர்த்த தியானம் நமக்கு உதவுகிறது.

    • பயம், மகிழ்ச்சி, கோபம், நெகிழ்ச்சி, இரக்கம் என எல்லா உணர்வுகளும் பிறப்பது மூளையில்தான். சிந்தனைகளும் பிறப்பது மூளையில்தான்.
    • அறிவுப்பூர்வமான செயல்பாடுகளை மட்டும் நாம் மூளையின் செயலாகச் சொல்கிறோம். உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்கு இதயத்தைக் குறியீடாக்குகிறோம்.

    மனம் என்பதற்கு இன்னொரு சொல்லாகவே இதயம் என்ற சொல் பயன்பட்டு வருகிறது. என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தைத் தொலைத்துவிட்டேன் என்றுதான் கவிஞர்கள் எழுதுகிறார்கள். அங்கு தொலைந்தது மனம்தான். இரக்கப்படுவது மனதுதான். ஆனால் இரக்கமில்லாதவனிடம் 'இதயமே இல்லையா உனக்கு?' என்று கேட்கிறோம்.

    அதே போல் உலகெங்கிலும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எமோஜி ஹார்டீன் அதாவது இதயம் ஆகும். சமூக ஊடகங்களில் இப்போதெல்லாம் வெறும் நீலநிற லைக்கைவிட சிகப்பு நிற இதயக் குறியீடே பெரிதும் விரும்பப்படுகிறது. அதாவது உணர்வுகளை வெளிப்படுத்துவது இதயம்தான் என்னும் பொருளில் இதயத்தின் அடையாளமாக ஹார்டீன் எமோஜி பயன்படுத்தப்படுகிறது.

    நமது இதயம் அந்த ஹார்டீன் படம் போல் அழகாக இருக்காது என்பது வேறு விஷயம். உண்மையிலேயே உணர்வுகளைத் தோற்றுவிப்பது இதயம் அல்ல. நமது மனதின் இருப்பிடமான மூளைதான் அது.

    பயம், மகிழ்ச்சி, கோபம், நெகிழ்ச்சி, இரக்கம் என எல்லா உணர்வுகளும் பிறப்பது மூளையில்தான். சிந்தனைகளும் பிறப்பது மூளையில்தான். ஆனாலும் அறிவுப்பூர்வமான செயல்பாடுகளை மட்டும் நாம் மூளையின் செயலாகச் சொல்கிறோம். உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளுக்கு இதயத்தைக் குறியீடாக்குகிறோம்.

    உண்மையில் இரண்டும் மூளையில்தான் நடக்கிறது. ஆனாலும் மனதில் ஏற்படும் உணர்வுகளை வெளிப்படுத்தும் முக்கிய உறுப்பாகவும் அவ்வுணர்வுகளால் பாதிக்கப்படும் பிரதான உறுப்பாகவும் இருதயமே இருக்கிறது.

    பயப்படுவது மூளையாக இருந்தாலும் அந்த பயத்தால் அதிகமாகத் துடிப்பது இதயமாகத்தான் இருக்கிறது. அதே போல் பதட்டம் அதிகமாகும் போது இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது . இதுவும் இருதயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆக மனதில் ஏற்படும் மாறுதல்கள் இதயத்தில் வெளிப்படுகிறது.

    இது எதனால் நடைபெறுகிறது? நம்முடைய உடம்பில் உள்ள எல்லா உறுப்புகளையும் நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. அதே போல் இதயத்தையும் நரம்புகள் கட்டுப்படுத்துகின்றன. தன்னிச்சையாக இல்லாமல் அனிச்சையாக கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலம் இதனைச் செய்கிறது. பதற்றம் அடையும் போது மூளையிலிருந்து இருதயத்துக்குத் தகவல்கள் செல்கின்றன.

    ஏன் பதட்டப்படும் போது இருதயம் அதிகமாகத் துடிக்க வேண்டும்? பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு மனிதனுக்கு இருந்த இரண்டே பிரச்சனைகள்தான். ஒன்று உணவு தேடுதல், இன்னொன்று உணவாகிவிடாமல் தப்பித்தல். இந்த இரண்டுக்கும் அவன் ஓட வேண்டும். அதற்கு அவனது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் நன்றாக இருக்க வேண்டும். அதற்காக இருதயம் வேகமாகத் துடிக்கிறது. அதற்கு அட்ரீனலின் என்ற வேதியல் சுரப்பு சுரக்கும்.

    அந்தக் காலத்தில் ஈ.எம்.ஐ பிரச்சனை, போட்டித் தேர்வுகள் , மாதாந்திர டார்கெட் என வேறு எந்த டென்ஷனும் கிடையாது. ஒரே பிரச்சனையான மிருகங்களின் தாக்குதலுக்கு ஓட வேண்டும். அவ்வளவுதான்.

    ஆனால் தற்காலத்தின் நெருக்கடிகள் உடல் சார்ந்தவை அல்ல. பெரிதும் மனம் சார்ந்தவை. ஆனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும்போதும் நம் உடல் ஆதி மனிதனின் உடல் போன்றே எதிர்வினை ஆற்றுகிறது. ஆகவேதான் மன அழுத்தத்தினால் இருதயமும் பாதிக்கப்படுகிறது.

    அதிகமாகக் கவலை பதட்டப்படுவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகம். அதே போல எல்லாமே மிகக் கச்சிதமாக இருக்கவேண்டும் என நினைக்கும் ஆளுமை கொண்டவர்களுக்கும் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதீதக் கவலை மற்றும் பதற்றத்தினால் மாரடைப்பு மட்டுமின்றி இருதயத் துடிப்பு தாறுமாறாகப் போகும் arrhythmia பிரச்சனைகளும் ஏற்படலாம்.

    நேரடியாக மட்டுமின்றி மன அழுத்தத்தினால் தூக்கமின்மை ஏற்படும், உணவுக்கட்டுப்பாடின்றி உண்பார்கள் சிலர், காஃபீ டீ அதிகம் குடிப்பது, சிகரெட் மது போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு எனப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்துமே நேரடியாகவோ மறைமுகமாகவோ இருதயத்தைப் பாதிக்கக் கூடியவை.

    மனஅழுத்தத்தினால் இருதயம் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் சில பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    1. உடற்பயிற்சி மிக முக்கியம். மனதுக்கும் நல்லது இருதயத்துக்கும் நல்லது.

    2. தூக்கமும் மிக முக முக்கியம். நீண்ட நேரம் கண்விழித்திருப்பது இதயத்திற்குக் கெடுதி தருவது.

    3. ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் உங்களுக்கே உங்களுக்காக.

    4. சின்ன விஷயங்களுக்காக பெரிதாகக் கவலைப்படாதீர்கள்.

    5. சிகரெட், மது போன்ற போதைப்பொருட்களை அளவுக்கு அதிகமாக உபயோகிக்காதீர்கள்.

    6. மன அழுத்தம் இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்காதீர்கள்.

    -டாக்டர் ஜி. ராமானுஜம்

    • இதய நோய்களால் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழக்கின்றனர்.
    • தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
    • இந்த 10 கட்டளைகளை பின்பற்ற டாக்டர் வேண்டுகோள்.

    உலகில் புற்றுநோய், காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களைவிட இதய நோய் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகம். இதய நோய்களால் சராசரியாக ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது அடுத்த 10 ஆண்டுகளில் 2.30 கோடியாக உயரும் என்கின்றன மருத்துவ ஆய்வு முடிவுகள்.

    புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே இதயக் கோளாறுகளால் ஏற்படும் 80 சதவீத மரணங்களைத் தவிர்க்க முடியும் என்கிறது உலக இதயக் கூட்டமைப்பு.

    ரத்தக் கட்டிகள் இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதமும் ஏற்படலாம். அதேபோல் காலில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அந்தக் கட்டிகள் உடைந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். இதயத் தசைகளின் 'பம்பிங்' திறன் குறைவு, சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படவும் சாத்தியம் உண்டு.

    இதய நோய் ஏற்படாமல் இருக்க உணவுக் கட்டுப்பாடு, முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், நல்ல எண்ணம், நல்ல சுற்றுச்சூழல் ஆகியவை முக்கியமாகும். நம் உடல் உறுப்புகளில் முக்கியமானது இதயம். மூளைச்சாவு அடைந்தவர்களுக்குக் கூட இதயம் வேலை செய்து கொண்டிருக்கும். எனவே, இந்த இதயத்தைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது நம் தலையாய கடமை.

    தினமும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போதைய உணவு உள்ளிட்ட பல்வேறு பழக்கவழக்கத்தால் 15 வயது முதலே மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் செய்தால் மாரடைப்பு ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம். இடது கை, தோள் பட்டையில் வலி ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் உணவுகள், அசைவ உணவுகளை தவிர்த்தல் நல்லது. 19 வயது நபருக்கு கூட பைபாஸ் சர்ஜரி செய்யும் நிலை உள்ளது. உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய்களை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இதயம் இதமாக இருக்க 10 கட்டளைகள்

    1. உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

    2. வெள்ளைச் சர்க்கரையைத் தவிருங்கள்.

    3. கொழுப்புச் சத்து மிகுந்த உணவைத் தவிருங்கள்.

    4. புகைப் பழக்கத்தை கைவிடுங்கள்.

    5. மது அருந்தாமல் இருங்கள்.

    6. மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    7. உடல் பருமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

    8. குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்குங்கள்.

    9. தினசரி 1 மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

    10. மனித நேயத்துடன் செயல்படுங்கள்.

    இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் இதயத்தை இதமாக வைத்துக்கொள்ள முடியும் என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர்.

    • உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.
    • இதயம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

    உயிர் வாழ்வதற்கு முக்கியமான உடல் உறுப்புகளில் ஒன்றாக இதயம் விளங்குகிறது. உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும். இதயம் செயல் இழந்து போனாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ மரணம் ஆட்கொண்டுவிடும். ஆக்சிஜன் நிறைந்திருக்கும் ரத்தத்தை உடல் முழுவதும் கடத்திச் செல்வதுதான் இதயத்தின் முக்கியமான வேலையாகும். இதயம் பற்றிய மேலும் சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

    * கைவிரல்களை உள்ளங்கைக்குள் மடக்கி வைக்கும் அளவுக்குத்தான் ஒருவரின் இதயம் அமைந்திருக்கும்.

    * இதயம் தினமும் 1 லட்சத்து 15 ஆயிரம் முறை துடிக்கும்.

    * இதயம் ஒவ்வொரு நாளும் சுமார் 7 ஆயிரத்து 570 லிட்டர் ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.

    * உடலில் இருந்து துண்டிக்கப்பட்டாலும் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் தன்மை கொண்டது.

    * 'ஓப்பன் ஹார்ட் சர்ஜரி' எனப்படும் இதய அறுவை சிகிச்சை முதன் முதலில் 1893-ம் ஆண்டு நடந்தது.

    * சீரான அளவில் சுருங்கி விரிந்து ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை உடலில் உள்ள செல் களுக்கு கடத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டால் இதயத்தின் செயல்பாடு முடங்கி போய்விடும். இதயம் செயலிழந்து மரணத்திற்கு வித்திடும். இம்மாதிரியான சமயங்களில் 'பேஸ் மேக்கர்' எனப்படும் செயற்கை உயிர் காக்கும் கருவி பயன்படுத்தப்படும். செயற்கையான மின் சமிக்ஞைகள் மூலம் ரத்த ஓட்ட செயல்பாட்டை சரி செய்யும் இந்த 'பேஸ் மேக்கர்' கருவி 1958-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

    * 'பேஸ் மேக்கர்' கருவியை முதன் முதலில் பொருத்தியவர், ஆர்னே லார்சன். சுவீடனை சேர்ந்த இவர் இந்த கருவியை பயன்படுத்தி 43 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். தனது 86-வது வயதில் 2001-ம் ஆண்டு இறந்தார். இதயத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத நோய் பாதிப்புக்கு ஆளாகிதான் அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    * 3,500 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மியில் இதய நோய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    * பாலூட்டி இனங்களில் திமிங்கலம் மிகப் பெரிய இதயத்தை கொண்டுள்ளது.

    * பெரும்பாலான மாரடைப்புகள் திங்கட் கிழமை நிகழ்கின்றன.

    * மனித இதயத்தின் எடை ஒரு பவுண்டுக்கும் (450 கிராம்) குறைவானது. இருப்பினும் ஆணின் இதயம், பெண்ணின் இதயத்தை விட சுமார் 50 கிராம் எடை கூடுதலாக இருக்கும்.

    * கண்ணின் விழித்திரை (கார்னியா) தவிர உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் இதயத்தில் இருந்து ரத்தத்தை பெறுகின்றன.

    * இதயத்தின் வால்வுகள் திறக்கும்போதும் மூடும்போதும் 'லப் டப்' என்னும் சத்தம் ஏற் படுகிறது.

    * ரத்த நாள அமைப்பு மெல்லிய இழைகளால் ஆனது. அதனை நீட்டித்தால் சுமார் 60 ஆயிரம் மைல்களுக்கு மேல் நீளும்.

    * இதய புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதானது.

    * புன்னகைப்பது இதயத்திற்கு நல்லது. வாய் விட்டு சிரிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

    ×