search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி திருவிழா"

    • தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தொடங்கியது.
    • 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருணகிரிபட்டினத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சக்தி கரகம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி பெண்கள் வரவேற்றனர்.

    வருகிற 31-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 1-ந் தேதி சக்தி கரகம், 2-ந் தேதி பால்குடம் நடைபெறும்.

    • தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.
    • முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.

    1. முண்டகக்கண்ணியம்மன் அவதாரம் நடந்த போது முதலில் அதை மயிலை கிராம மக்கள் எல்லை காவல் தெய்வமாகவே பார்த்தனர்.

    2. முண்டகக் கண்ணி அம்மன் முதலில் சென்னை கடலோரத்தில் தோன்றியதாகவும், அவள் சுயம்புவாக தோன்றிய இடத்தில் இருந்து கடல் உள்வாங்கி சென்று விட்டதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

    3. ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். அதே தினத்தன்று முண்டகக்கண்ணி அம்மனுக்கும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அன்னத்திலும் அம்மன் இருந்து அருள்புரிவதாக கருதப்படுகிறது.

    4. இத்தலத்தின் தல மரம் ஆலமரமாகும். தற்போது கல் மரம் ஒன்றும் தல விருட்சம் போல வளர்ந்து வருகிறது.

    5. முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயரில் சென்னையில் வேறு எங்கும் ஆலயங்கள் இல்லை. முண்டகக்கண்ணி அம்மன் என்றாலே அது மயிலை முண்டகக்கண்ணியைத்தான் குறிக்கும்.

    6. முண்டகக்கண்ணி அம்மனை ரோட்டில் போகும் போதே மிக எளிதாக தரிசிக்க முடியும். அதற்கு ஏற்ப கோவில் அமைப்பு உள்ளது.

    7. முண்டகக் கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் தான்.

    8. பெரியபாளையம் தலத்தில் செய்வது போல சில சமயம் இங்கும் பெண்கள் வேப்பஞ்சேலை அணிந்து, கோவிலை வலம் வந்து பிரார்த்தனை செய்வதுண்டு.

    9. அம்மை நோய், கண் நோய், ராகு-கேதுவால் ஏற்படும் திருமண தோஷ நிவர்த்தி ஆகிய மூன்றுக்கும் இத்தலம் மிகச் சிறந்த பரிகார தலமாக உள்ளது.

    10. முண்டகக் கண்ணியம்மனிடம் வைக்கப்படும் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து அபிகேஷகம், அங்க பிரதட்சனம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

    11. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் கபாலிஸ்வரர் கோவில், மாதவப் பெருமாள் கோவில் உள்ளன. அம்மனை வழிபட செல்லும் போது இத்தலங்களுக்கும் சென்று வரலாம்.

    12. முண்டகக்கண்ணி அம்மன் இப்போதும் ஓலைக் குடிசையிலேயே இருப்பதால், அவள் இதன் மூலம் எளிமையை தன் பக்தர்களுக்கு உணர்த்துவதாக ஐதீகம்.

    13. தாய்மையின் வடிவமாக முண்டகக்கண்ணியம்மன் அருள் பாலிப்பதாக பெண்கள் நம்புகிறார்கள்.

    14. மயிலை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டில் நடக்கும் எல்லா நல்ல நிகழ்ச்சிகளுக்கும் முன்பு முதல் பிரார்த்தனையை ஸ்ரீ முண்டகக் கண்ணி அம்மனுக்கு நடத்துவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.

    15. அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ள தெருக்களில் வசிக்கும் பெண்கள் காலை 5.45 மணிக்கெல்லாம் வந்து நடை திறந்ததும் அம்மனை கண்டு தரிசனம் செய்த பிறகே வேறு வேலை செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    16. அருள்மிகு முண்டக்கண்ணி அம்மனை மகா மாரியம்மன் என்றும் அழைக்கிறார்கள்.

    17. ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அபிஷேகம் நடத்த பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் தினமும் இத்தலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கட்டணம் செலுத்தி அபிஷேகம் நடத்தி மன ஆறுதல் பெறுகிறார்கள்.

    18. முண்டகக்கண்ணி அம்மனுக்கு தினமும் காலை அபிகேஷம் நடத்தும் போது பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை என்று அம்மன் மனம் குளிரும் வகையில் அபிஷேகம் செய்வார்கள்.

    19. மாலையில் தினமும் அம்மனை வெள்ளி அல்லது தங்க கலசத்தால் அலங்கரிப்பார்கள். இதனால் முண்டகக்கண்ணி அம்மனை காலையில் அபிஷேகப் பிரியை, மாலையில் அலங்காரப் பிரியை என்று மயிலைப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

    20. ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுமார் 5 ஆயிரம் பெண்கள் முண்டகக்கண்ணி அம்மனுக்கு வளையல் சார்த்தி வழிபாடு செய்வதாக தெரிய வந்துள்ளது.

    21. முண்டகக்கண்ணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2003ம் ஆண்டு நடந்தது. 12 ஆண்டுகள் கடந்து விட்டதால் வரும் தை மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    22. இத்தலத்தில் ஆடித் திருவிழா மிகவும் விமரிசையாக நடக்கும்.

    23. முண்டகக்கண்ணி அம்மனை வழிபட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

    24. தினமும் இத்தலத்தில் அன்னதானம் போடப்படுகிறது. நீங்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தினால் 100 பேருக்கு அன்னதானம் அளிக்கலாம்.

    25. 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் முண்டகக்கண்ணி அம்மனை தொடர்ந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    26. இத்தலத்தில் ரூ.1500 கட்டணம் செலுத்தி தங்க ரதம் இழுக்கலாம்.

    27. முண்டகக்கண்ணி அம்மன் தோன்றிய சுயம்புவின் முகப்புத் தோற்றத்தில் நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் நடக்கும் போது உன்னிப்பாக கவனித்தால் இதை காணலாம்.

    28. வெப்பத்தை தான் தாங்கிக் கொண்டு, மக்களுக்கு குளிர்ச்சியை அளிக்கவே முண்டகக்கண்ணி அம்மன் ஓலைக்குடிசையில் வீற்றிருப்பதாக முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

    29. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முண்டகக்கண்ணி அம்மனிடம் வேண்டிக் கொண்டு, நோய் நிவர்த்தியானதும், அந்த உடல் உறுப்பு போன்ற வெள்ளி கவசங்களை வாங்கி உண்டியலில் போடுகிறார்கள்.

    30. சில பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் ஏற்படலாம். அந்த தோஷ நிவர்த்திக்கு மாங்கல்யத்தை கழற்றி உண்டியலில் போட்டு வருகிறார்கள். இதன் மூலம் முண்டகக்கண்ணி அம்மன் அந்த பெண்ணின் மாங்கல்ய தோஷத்தை தீர்ப்பதாக ஐதீகம்.

    31. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிகச் சிறந்த பரிகாரத்தலமாக மட்டுமல்ல, சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் உள்ளது.

    32. இத்தலத்தில் உள்ள தங்கரதம் முழுக்க-முழுக்க பக்தர்கள் கொடுத்த உண்டியல் பணம் மூலம் செய்யப்பட்டதாகும். அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

    33. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு, ஆடு, கோழி சுற்றி விடுதல், பாவாடை சாத்துதல், முடி காணிக்கை கொடுத்தல், வேப்பிலை சாத்துதல், தொட்டில் பிள்ளை, மஞ்சள் காப்பு, பூங்கரகம் எடுத்தல் போன்ற நேர்ச்சை கடன்களை நிறைவேற்றுவது உண்டு.

    34. இத்தலத்தில் கூழ்கஞ்சி வார்த்தல் செய்ய வேண்டுமானால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

    35. பக்தர்கள் விரும்பினால் கோடி தீபம் விளக்கு ஏற்றலாம். ஒரு விளக்குக்கு ரூ.2 தான் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    36. இத்தலத்தில் கருவறையை நெருங்கியதும் மஞ்சள், இளநீர், பால், பூக்கள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றின் கதம்பமான வாசனையை பக்தர்கள் உணர முடியும்.

    37. இத்தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பெண்கள் தங்கள் கைப்பட மஞ்சள் தெளித்து குங்குமம் வைத்து வழிபட அனுமதிக்கிறார்கள்.

    38. முண்டகக்கண்ணி அம்மன் பார்வைபட்டால் போதும் நம் வாழ்வில் சுபீட்சம் ஏற்படும் என்று வயதான பக்தர்கள் நம்பிக்கையான குரலில் கூறினார்கள்.

    39. இத்தலத்துக்கு வாடிக்கையாக வரும் பக்தர்கள் முண்டகக்கண்ணி அம்மனை வணங்கும் போது, ஏதோ தங்கள் வீட்டில் உள்ள ஒருவரிடம் சகஜமாக பேசுவது போல பேசி வழிபடுவதை காணலாம்.

    40. இத்தலம் தொடர்பான விவரங்களை (044) 24981893 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    • சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபடுவார்கள். இது தவிர கோவிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகு குத்தி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவி லில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டு வருவதால் கோவிலில் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.

    தற்போது கோவிலில் 85 சதவீத திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வருகிற 25-ந் தேதி இரவு பூச்சட்டுதல் விழா நடக்கிறது. இதையொட்டி இன்று காலை கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி, உதவி கமிஷனர் ராஜா, கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, விழா குழு உறுப்பினர்கள் சாந்தமூர்த்தி, ஜெய், ரமேஷ் பாபு, சுரேஷ்குமார், வினிதா மற்றும் ஏராளமான பக்தர் களும் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நட்டனர்.

    தொடர்ந்து மாரியம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம் மனை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி சக்தி அழைப்பும், 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல் மாவிளக்கு பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது.

    15-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. இதேபோல சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் ஆடி திருவிழா முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
    • ஏராளமானோர் தரிசனம் செய்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி நெமந்தகார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் ஆடி திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது.

    முன்னதாக அம்மனுக்கு காலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பெண்கள் கோவில் அருகில் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    மாலை அம்மன் விசேஷ புஷ்பங்களால் அலங்காரம் செய்து, சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு மேல தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.

    திருவிழாவில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அம்மனை வழிபட்டு சென்றனர்.

    • பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்
    • பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரோட்டம்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருத மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மருது மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திரு விழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இன்று ஆடித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதை தொடர்ந்து பிஸ்கட் பாக்கெட் அலங்காரத்தில் செய்யப்பட்ட அம்மன் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வடிவிலான தேரை பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு தேரை இழுத்தனர்.

    மேலும் பக்தர்கள் எலுமிச்சம்பழம் குத்திக்கொண்டும் வேல் போட்டுக்கொண்டு டிராக்டர் உரல் இழுத்துச் சென்று நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இந்த திருவிழாவை காண வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மருத மாரியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • பெண்கள் பால்குடம் ஊர்வலம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று ஆடி திருவிழா முன்னிட்டு 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாம்பட்டு கிராமத்தில் உள்ள குளக்கரையில் இருந்து பால் குடங்களை பெண்கள் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பக்தர்களின் கைகளால் பாலபிஷேகம் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மங்கள மேள வாதியுங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த பால்குட ஊர்வல நிகழ்ச்சியில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் தரிசனம் செய்து சென்றனர்.

    • ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது.
    • ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வடக்கு கிராமத்தில் மன்னார்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பெரமையா கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இங்கு ஆடி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆடி 1ஆம் தேதி முதல் திங்கள் என்று பூச்செரிதல் நடைபெற்றது. மேலும் காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து ஆடு கிடா வெட்டி செய்த மாபெரும் அன்னதானம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதம் முடியும் வரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக திங்கட்கிழமைகளில் விமர்சையாக ஆடி திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

    • கோட்டை மாரியம்மன் விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.
    • இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.

    தற்போது இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான ஆடி திருவிழா வருகிற 26-ந் தேதி (ஆடி மாதம் 10-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது. முதல் நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 8-ந் தேதி இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பும், 10 -ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல், மாவிளக்கு, பிரார்த்தனை செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    16-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிேஷகம், உற்சவர் அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. விழாவில் தினமும் சிறப்பு பூைஜகள் மற்றும் அபிேசகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வார்கள்.

    கடந்த 2 ஆண்டாக கொரோனா ஊரடங்கினால் ஆடித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடித்திருவிழாவின் முன்னோட்டமாக கால்நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


    ×