search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டை மாரியம்மன்"

    • கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் கோவில் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கோவிலை சுற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    அதனைத் தொடர்ந்து இன்று வருவாய்த்துறையினர் மற்றும் இந்து அறநிலைத்துறை மற்றும் திருத்தண்டர் சபை நிறுவனர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அந்த ஆய்வின் போது கோவிலின் நுழைவு பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களின் தன்மை தொடர்பாகவும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், கோவிலில் ஒவ்வொரு திருவிழாவின்போதும் பல்லாயிரம் பேர் பொங்கல் இடுவார்கள். ஆனால் கோயிலில் ஏதும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக பக்தர்கள் வெளியேறும் வகையில் வாசல்கள் பெரிய அளவில் முன்பு இருந்தது.

    தற்போது நுழைவு வாயில்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வேகமாக வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விடும் நிலையில் உள்ளதால் விபத்து சூழல் உள்ளது.

    எனவே இதுகுறித்து வருகிற 15-ந் தேதி அறிக்கையாக தயாரித்து சென்னை ஐகோர்ட்டில் சமர்ப்பிப்போம். பின்னர் கோர்ட் உத்தரவு படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 2-ந்தேதி முகூர்த்தகால் நடப்பட்டது.
    • கொடிமரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரத்திற்கு கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோவிலில் பழுதான மண்டப கட்டிடங்கள் சீரமைக்கும் திருப்பணிகள் நடந்து வந்தன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கியது. 18-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது. நேற்று முன்தினம் கும்பாபிஷேக விழாவிற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்பட்டன. முன்னதாக அம்மன் கருவறை மண்டபம் முன்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

     பின்னர் மூலவர் கோட்டை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து எண்வகை மருந்து (அஷ்டபந்தனம்) சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி நடந்தது.

    கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், சூர்ய கும்ப பூஜை, சோம கும்ப பூஜையும், அதன்பிறகு 4-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.

    காலை 7.40 மணியில் இருந்து 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்கு மூலவர் பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
    • புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.4.67 கோடி செலவில் நடைபெற்ற திருப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

    வருகிற 27-ந் தேதி கும்பாபிஷேக விழா நடை பெறுகிறது. இதையொட்டி கோவிலில் புதிய கொடிமர பிரதிஷ்டை இன்று நடந்தது. பக்தர்கள் புடை சூழ மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் ஒலிக்க கிரேன் மூலம் இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பூக்களை தூவி சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி மாரியம்ம னுக்கு இன்று காலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடிமர பிரதிஷ்டை விழாவில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள் ஜெய், ரமேஷ் பாபு, வினிதா, சுரேஷ்குமார், இந்து அறநிலை டி.சத்யா என்ற குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரம் 30 அடி உயரம் கொண்டது. இந்த கொடிமரம் வேங்கை மரத்தில் செய்யப்பட்டது. கொடிமரத்தை சுற்றிலும் பஞ்சலோக தகடு பொருத்தப்பட்டு உள்ளது.

    • பெருந்துறை கோட்டை மாரியம்மன், கோட்டை முனியப்ப சாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.
    • இன்று காலை முதல் ஏராள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை கோட்டை மாரியம்மன், கோட்டை முனியப்ப சாமி கோவில் பொங்கல் திருவிழா இன்று முதல் நடைபெற்று வருகிறது.

    இந்த கோட்டை மாரியம்மன் மற்றும் முனியசாமி கோவில் சோழர்கால முதற்கொண்டு பல சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    அதன்படி ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரக்கூடிய முதல் புதன்கிழமை அன்று சுவாமிக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் திருவிழாவாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை முதல் ஏராள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் விழாவிற்கு பெருந்துறை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.

    மேலும் தீ விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பெருந்துறை தீயணைப்பு நிலையத்தினர் தீயணைப்பு வாகனத்தை கோவில் வளாகத்தில் நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆடித்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.
    • 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆகும். ஆடித்திருவிழா தொடங்கிய நாள் முதல் விழா முடியும் வரை கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதன்படி இந்த ஆண்டு ஆடித்திருவிழா வருகிற 26-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று கோட்டை மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி இரவு சக்தி அழைத்தல் நடக்கிறது. 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 16-ந்தேதி பால் குடம் எடுத்தல், மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார ஆராதனைகள் நடைபெற உள்ளன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராசாராம், விழாக்குழு தலைவர் எஸ்.டி. ஹார்டுவர்ஸ் வி.சக்திவேல், பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    இதே போன்று அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதே போன்று அம்மாபேட்டை பலப்பட்டறை மாரியம்மன் கோவில், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாநகரில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தினமும் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன.

    • கோட்டை மாரியம்மன் விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.
    • இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.

    தற்போது இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான ஆடி திருவிழா வருகிற 26-ந் தேதி (ஆடி மாதம் 10-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது. முதல் நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 8-ந் தேதி இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பும், 10 -ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல், மாவிளக்கு, பிரார்த்தனை செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    16-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிேஷகம், உற்சவர் அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. விழாவில் தினமும் சிறப்பு பூைஜகள் மற்றும் அபிேசகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வார்கள்.

    கடந்த 2 ஆண்டாக கொரோனா ஊரடங்கினால் ஆடித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடித்திருவிழாவின் முன்னோட்டமாக கால்நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


    ×