search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்புகள்"

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.
    • தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழி சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.

    இந்நிலையில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதில் வருகின்ற 28-ந்தேதி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. அதனால் அதற்கு முன்பாகவே தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும் 28-ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேசிய நெடுஞ்சாலையோ, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகள் பொறுப்பல்ல. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சாலையில் வாரச்சந்தை, ரெயில் நிலையம், உழவர் சந்தை, வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது.
    • சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திர ரோடு, கபூர் கான் வீதி, ராமசாமி நகர் வழியாக சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் வாரச்சந்தை, ரெயில் நிலையம், உழவர் சந்தை உள்ளிட்டவையும் வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் சாலையில் வாகன போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. இந்தநிலையில் ராஜேந்திரா சாலையின் ஓரத்தில் தள்ளுவண்டிகள் நிறுத்தி சில்லறை வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து ராஜேந்திர சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தள்ளுவண்டிகளை நகர அமைப்பு ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அகற்றினர். இதனால் சீரான போக்குவரத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் இதே போன்று மற்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.
    • ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் பழைய காவேரி பாலம் வரை சாலையின் இருபுறமும் வியாபாரிகள் பாதையை ஆக்கிரமிப்பு செய்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வந்தனர்.

    இது குறித்து பல தரப்பி னர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெடுச்சா லைத்துறையினர் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சரவணா தியேட்டர் எதிரில் பழைய இருசக்கர வாக னங்கள் விற்பனை செய்யும் நபர்கள், நடைமேடை முழுதும் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர். அவைகளை எடுக்க சொல்லி அறிவுறித்தினர்.

    மேலும் ஸ்டேட் வங்கி எதிரில் சாலையோர துணிக்கடைகள் இருப்ப தால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இத னால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், பலர் சாலை யினை ஆக்கிரமிப்பு செய்து துணிக்கடைகளை வைத்துள்ளனர். இது தவறு என சுட்டிக்காட்டி அகற்ற வேண்டிய நகராட்சி நிர்வா கத்தினர் வரி வசூல் செய்வதை காரணமாக காட்டி, கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்ற மறுக்கின்றனர். மிக குறுகலான சாலையில் இந்த கடைகள் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு, விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது என்றனர். அந்த துணி கடைகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட ஸ்டாண்டிங் விளம்பர போர்டுகள், பிளெக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இந்த பணி யில் நெடுஞ்சாலைத்துறை யினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
    • சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார்.

    வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றம், ஆழ்குழாய் கிணறு, வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், மிளகாயை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் விவசாயிகள் மனு விடுத்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்கள் களஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல மரங்கள் அகற்றுதல் போன்ற விவசா யிகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைக்கவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருக்கவும், கடனுக்குரிய மானியத்தொகையை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கைகளை துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாகநாதன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வியாபாரிகள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு
    • இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வியா பாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க பட்டதாகவும், வியாபாரிகள் யாரும் ஆக்கிரமிப்பு களை அகற்ற முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப் பட்டது. நேற்று மதியம் பேரூராட்சி செயல் அலுவ லர் அம்புஜம் தலைமையில் இளநிலை பொறியாளர் லிங்கேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.

    இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வில்லை என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டது.

    இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக் டர் முத்துகிருஷ்ணன், ஏட்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் இப்பகுதி யின் பரபரப்பு ஏற்பட்டது. அப்புறப்படுத்த பட்ட பொருட்கள் பேரூராட்சி அலுவலகம் கொண்டு செல்லபட்டது.

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.
    • .இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் ஏ.பி. குப்பம் ஊராட்சி சுடுகாட்டில்ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு சுடுகாட்டுக்கு செல்ல வழி இல்லாமல் இருந்து வந்தது.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி பிரகாஷ் பண்ருட்டி தாசில்தார் ஆனந்தியிடம் மனு கொடுத்தார். மனுவில் சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்தார்.இதனை தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், ஊராட்சி செயலாளர் பாலாஜி, நிலஅளவையர் சாந்தினி ஆகியோர் சுடுகாடு பகுதி முழுவதும் அளவீடு செய்தனர். அப்போது சுடுகாடு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், லட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.
    • சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

     அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையம் அருகே , காந்தியின் "சத்திய சோதனை " நினைவுச் சின்னம் உள்ளது. மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட காலத்தில் சேலத்தில் உள்ள பல்வேறு ஊர்கள், பகுதிகளுக்கு வந்து சென்றார்.

    அவ்வாறு அவர் சேலம் வந்து சென்ற போது, ஏற்படுத்தப்பட்ட இந்த நினைவுச் சின்னம் தற்போது சிதிலமடைந்து, கேட்பாரற்று கிடக்கும் அவல நிலையில் உள்ளது. மேலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. இது குறித்து மாலைமலர் நாளிதழில் கடந்த மாதம் 26- ந் தேதி செய்தி வெளி யானது. இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று அங்கு பார்வையிட்டு ஆய்வு நடத்தி னர். தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டு இருந்த கடைகள் அகற்றப்பட்டன.

    மேலும் நடவடிக்கைகள் எடுத்து, காந்தியின் வரலாற்று நினைவுச் சின்னம் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை குறித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

    • குமாரபாளையத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர்.
    • இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிரமித்து பலர் வீடுகள், கடைகள் கட்டியிருந்தனர். சுமார் 30 ஆண்டு காலமாக இந்த ரோடு ஆக்கிரமிப்பு தீராத பிரச்சனையாக இருந்து வந்தது. பலமுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது, அரசியல்வாதிகள் சிலரின் தலையீட்டால் அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவும் வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் சிலர் அதற்கு தடையாணை பெற்றனர். இதனால் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    வருடங்கள் செல்ல, செல்ல இந்த ரோடு மிகவும் பழுதாகி நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் மீண்டும் முனைப்புடன் செயல்பட்டு வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு பெற்றனர். இதன்படி நேற்று போலீசார் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர். பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்பு பொக்லைன் கொண்டு அகற்றப்பட்டது. இனியாவது புதிய சாலை போடப்படுமா? என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • ராஜபாளையம் அருகே சேத்தூர் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சியில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.சேத்தூர் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து பஸ் நிலையம் முன்பு தொடங்கி மதுரை-தென்காசி ரோடான மெயின்ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக ஜே.சி.பி. எந்திரம் கொண்டு அகற்றி னார்கள்.

    மேலும் 4, 11 வார்டுகள் மற்றும் ஆசாரிமார் தெரு செல்லும் பாதை அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    சேத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி, நில அளவை யர் காளிமுத்து, போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஆனந்த குமார், சப்-இன்ஸ்ெபக்டர் பெருமாள்சாமி, சேத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் நேரடி கண்காணிப்பில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அசோக்குமார், வரிவசூலர் பலராமன் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆக்ரமிப்புகளை அகறற்றும் பணியில் ஈடுபட்டனர்.சேத்தூரில் நீண்ட இடை வெளிக்கு பிறகு கனரக வாகனங்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய மெயின் ேராட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • நகரின் முக்கிய இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன.
    • மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் தமிழகத்தின் மையப்பகுதியாக அமைந்து உள்ளது. தினமும் மதுரைக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ,அழகர் கோவில், அரசு மருத்துவமனை, மதுரை ஐகோர்ட்டு உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மதுரை மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்படாமல் உள்ளது.பல சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

    நகரின் முக்கிய இடங்க ளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. அவைகள் பெயரளவில் அகற்றப்படுகின்றன. பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்புகள் வந்து விடுகின்றன. இதற்கு சில அதிகாரிகளும், அரசி யல்வாதிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது.

    மேம்பால வசதி குறை வாக உ ள்ளதால் தினமும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. சிக்னல்களில் பொதுமக்கள் விதிமுறைகளை கடை பிடிக்காமல் சென்று வரு கின்றனர். இவர்களை கண்டுகொள்ளாத போக்கு வரத்து போலீசார் சில இடங்களில் சோதனை என்ற பெயரில் அபராதம் விதிக்கின்றனர்.

    முக்கிய சாலைகளை கடக்கும் இடத்தில் போலீசார் பொதுமக்களுக்கு உதவி செய்ய வருவதில்லை.சீறிப்பாய்ந்து செல்லும் வாகனங்களுக்கிடையே வயதானவர்கள் சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்கள், முதிய வர்கள் வசித்து வரு கின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வசிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

    ஒரு நகரின் வளர்ச்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தொடங்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சேவையில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை காண முடிகிறது. எனவே நகர வளர்ச்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    முக்கியமாக ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நகரில் சுகாதார பணிகளை இரவிலேயே செய்து எப்போதும் நகரம் சுத்தமாக இருக்கும் வகையில் பராமரிக்க வேண்டும். கொசு மருந்தடித்து கொசு தொல்லையை ஒழிக்க வேண்டும். மேம்பாலத்தின் அடியில் சமூக விரோதிகள் பதுங்குவதை தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • நீலகண்டி ஊரணி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.200 லட்சம் மதிப்பீ ட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.செம்மங்குண்டு ஊரணியில் ரூ.103 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள நடைபாதை அமைப்பு உள்ளிட்ட மேம்படுத்தும் பணிகளும், முகவை ஊரணியில் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, கைப்பிடி கம்பி, சுற்றுச் சுவர், தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், கல் இருக்கை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்க ப்படவுள்ளது.இதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார்.

    தொடர்ந்து நீலகண்டி ஊரணியை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடி யாக அகற்றி கரையில் போதுமான மரக்கன்றுகள் நட்டு தூய்மையாக வைத்துக் கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதேபோல் பல்ேவறு அரசு வளர்ச்சி திட்ட பணி களையும் கலெக்டர் ஆய்வு செய்தார்

    இந்த ஆய்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், நகர் மன்றத் தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரன், ராமநாதபுரம் வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், தமீம்ராஜா, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொட்டியம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
    • நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சி 8-வது வார்டு பண்டிதர்த் தெருவில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கோரிக்கையை ஏற்று பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றினர். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    ×