search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிலையத்தில்"

    • வியாபாரிகள் வாக்குவாதம் - போலீஸ் குவிப்பு
    • இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் பேரூராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வியா பாரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க பட்டதாகவும், வியாபாரிகள் யாரும் ஆக்கிரமிப்பு களை அகற்ற முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதனை அடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப் பட்டது. நேற்று மதியம் பேரூராட்சி செயல் அலுவ லர் அம்புஜம் தலைமையில் இளநிலை பொறியாளர் லிங்கேஸ்வரன் மற்றும் பணியாளர்கள் கடைகள் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றினர்.

    இதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வில்லை என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையொட்டி இரணியல் போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டது.

    இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) சப் இன்ஸ்பெக் டர் முத்துகிருஷ்ணன், ஏட்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனால் இப்பகுதி யின் பரபரப்பு ஏற்பட்டது. அப்புறப்படுத்த பட்ட பொருட்கள் பேரூராட்சி அலுவலகம் கொண்டு செல்லபட்டது.

    • பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
    • இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை, பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதன் மறுநாள் காணும் பொங்கல் எனத் தொடர்ந்து இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். ஏராளமான பேர் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரெயில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.

    இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

    இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதேபோல் இன்று இரவும் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாநகரில் முக்கிய வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்கே.வி. ரோடு பகுதிகளில், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் குவிய தொடங்கியது.

    பெரிய ஜவுளி கடைகள் முதல் சாதாரண நடை பாதை ஜவுளி கடைகள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான பேன்சி கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • கோபி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
    • அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி பஸ் நிலையத்தில் 2 சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெளியூரில் பணிக்கு செல்லும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பழனிச்சாமி மற்றும் பணியாளர்கள் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கு பூட்டு போட்டனர்.

    அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பப்பட்டனர். மீண்டும் வாகனங்கள் நிறுத்தும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது.
    • இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளி மாவட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இதில் வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு வசதியாக மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சத்தி ரோடு மற்றும் மினி பஸ் ரேக் கீழ் பகுதிகளில் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் தங்களது சைக்கிள், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் அவர்களிடம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களாகவே சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அதனை முறையாக சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் தங்கள் மனப்போக்கில் பஸ் நிலைய கடைப்பகுதியில் முன்புறமும், ஓரமாகவும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களை கள்ள சாவி போட்டு திருடி செல்கின்றனர். பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக போலீஸ் நிலையத்திலும் புகார்கள் வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து திடீர் சோதனை செய்தனர். அதில் முறையில்லாமல் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை சிலர் நிறுத்தி வைத்தி ருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் சாவியை போலீசார் எடுத்து வைத்து ள்ளனர். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவித்து தங்களது சாவிகளை வாங்கிக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கூறியதாவது:

    ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு என்று மாநகராட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிலர் முறையாக வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள்.

    ஆனால் கடந்த சில நாட்களாகவே பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தாமல் ஆங்காங்கே கடை முன்பும் ஓரமாகவும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். பின்பு மாலை வந்து வாகனங்களை எடுத்து விட்டு செல்கிறார்கள்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் கள்ள சாவிகளை போட்டு வாகனங்களை திருடும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×