search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "impounded"

    • நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சச பொக்லைன் எந்திரம் மற்றும் ஜே.சி.பி மூலம் டிப்பர் லாரிகளில் மண் வெட்டி எடுத்தனர்.
    • தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்கள் 6 வாகனங்களை பறிமுதல் செய்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சச பொக்லைன் எந்திரம் மற்றும் ஜே.சி.பி எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண் வெட்டி எடுக்கப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கீழ் சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சசிகலா, வருவாய் ஆய்வாளர் அம்ரித் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ஜே.சி.பி மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் 4 டிப்பர் லாரிகளில் மணல் எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து நாமக்கல் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து தாசில்தார் சக்திவேல் உத்தரவின்பேரில் கீழ்சாத்தம்பூர் ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மண் வெட்டி எடுத்த 4 டிப்பர் லாரிகள், ஒரு ஜே.சி.பி எந்திரம் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரம் உட்பட மொத்தம் 6 வாகனங்களை கீழ்சாத்தம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சசிகலா பறிமுதல் செய்து பரமத்தி போலீசாரிடம் ஒப்படைத்தா.

    இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறை வான வர்களை தேடி வருகின்றனர்.

    • ஈரோடு பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது.
    • இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளி மாவட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

    இதில் வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வருகின்றனர். இவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கு வசதியாக மாநகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் சத்தி ரோடு மற்றும் மினி பஸ் ரேக் கீழ் பகுதிகளில் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வெளியூர், தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் தங்களது சைக்கிள், மோட்டார் சைக்கிளை நிறுத்தி வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் அவர்களிடம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களாகவே சைக்கிள், மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் அதனை முறையாக சைக்கிள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் தங்கள் மனப்போக்கில் பஸ் நிலைய கடைப்பகுதியில் முன்புறமும், ஓரமாகவும் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள்களை கள்ள சாவி போட்டு திருடி செல்கின்றனர். பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களாக இவ்வாறாக முறை யில்லாமல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், மற்றும் சைக்கிள்களை மர்ம நபர்கள் கள்ள சாவி போட்டு திருடிவிட்டு சென்றுவிடும் சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக போலீஸ் நிலையத்திலும் புகார்கள் வருகின்றன.

    இதனை அடுத்து ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பஸ் நிலையத்திற்கு வந்து திடீர் சோதனை செய்தனர். அதில் முறையில்லாமல் ஆங்காங்கே மோட்டார் சைக்கிள், சைக்கிள்களை சிலர் நிறுத்தி வைத்தி ருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து மோட்டார் சைக்கிள் நிறுத்தும் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் மோட்டார் சைக்கிள் சாவியை போலீசார் எடுத்து வைத்து ள்ளனர். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் போலீசாரிடம் தெரிவித்து தங்களது சாவிகளை வாங்கிக் கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கூறியதாவது:

    ஈரோடு பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவதற்கு என்று மாநகராட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிலர் முறையாக வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள்.

    ஆனால் கடந்த சில நாட்களாகவே பஸ் நிலையத்துக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை முறையாக நிறுத்தாமல் ஆங்காங்கே கடை முன்பும் ஓரமாகவும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். பின்பு மாலை வந்து வாகனங்களை எடுத்து விட்டு செல்கிறார்கள்.

    இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் கள்ள சாவிகளை போட்டு வாகனங்களை திருடும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பஸ் நிலையத்தில் முறை யில்லாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×